Vijaykant quarrel with media

Posted on Wednesday 8 October 2008

யாருடன் கூட்டணி? எப்போது தேர்தல்?:
நிருபர்களுடன் விஜயகாந்த் மோதல்

vijaykant1jpg.jpg

சென்னை: சென்னையில் 18ஆம் தேதி நடைபெறுவதாக உள்ள தே.மு.தி.க. இளைஞர் அணி மாநாட்டுக்கு இடையூறு ஏற்பட்டிருப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறினார்.

சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நிருபர்களைச் சந்தித்த விஜயகாந்த்,

தே.மு.தி.க. வின் 4 ஆண்டு தினம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா ஆகியவற்றையொட்டி, அக்டோபர் 18ஆம் தேதி சென்னை தீவுத்திடலில் இளைஞர் அணி மாநாடு நடைபெறுவதாகவும், ஆளும்கட்சி்த் தரப்பில் இருந்து இடையூறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கொடிக்கம்பம் கட்டுவதில் தொடங்கி சுவர் விளம்பரம், பஸ், வேன் பதிவு வரை தொல்லைகள் தொடர்வதாக அவர் கூறினார்.

ஆனால், எத்தனை இடையூறுகள் வந்தாலும் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக்காட்டுவோம் என்றவர், இலங்கைத் தமிழர் பிரச்னையில் பிரதமருக்கு தந்தி அடிக்கச் சொல்வது கருணாநிதி போடும் அரசியல் நாடகம் என்றும், தொலைத்தொடர்புத் துறையில் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்துள்ள ஊழலுக்குப் பொறுப்பேற்று அமைச்சர் ராஜா பதவி விலகவேண்டும் என்றும், உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு அந்த ஊழலை விசாரிக்கவேண்டும் என்றும், தே.மு.தி.க. சார்பில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவித்தமைக்கு நல்ல பலன் ஏற்பட்டிருப்பதாகவும், தமிழகம் முழுவதிலும் இருந்து விண்ணப்பங்கள் குவிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பேட்டியை முடித்துக்கொண்டு கிளம்பிய விஜயகாந்தை நிருபர்கள் சூழ்ந்துகொண்டு, ‘யாருடன் கூட்டணி அமைப்பீர்கள்?’ என்று குடைந்தார்கள். அதற்கு அவர், ‘தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் சொல்கிறேன்’ என்றார்.

நிருபர்கள் விடாமல், ‘மக்களுடன்தான் கூட்டணி. கட்சிகளுடன் இல்லை என்றீர்கள். இப்போது உங்கள் நிலைப்பாடு மாறுவதுபோல் இருக்கிறதே? என்று கேட்டனர். அதற்கு விஜயகாந்த் குறிப்பிட்ட நிருபரைப் பார்த்து, ‘நீங்கள் எந்தப் பத்திரிகையைச் சேர்ந்தவர் என்பது தெரியும். எப்படி கேள்வி கேட்பீர்கள் என்பதும் தெரியும். என் வாயில் இருந்து வார்த்தைகளை பிடுங்காதீர்கள்’ என்று பதிலளித்தார்.

அப்படியும் நிருபர்கள் விடாமல் கூட்டணி குறித்து கேட்டதற்கு, ‘அப்படியா?’ என்ற தோரணையில் பார்த்த விஜயகாந்த், ‘நீங்கள் தேர்தல் எப்போது வரும் என்று கூறுங்கள். நான் கூட்டணி பற்றி சொல்கிறேன்’ என்றார் விடாப்பிடியாக.

உடனே நிருபர்கள் ‘தேர்தல் வரும் போது வரும்’ என்றனர். அதைக் கேட்ட விஜயகாந்த், ‘அது வரும்போது நானும் சொல்கிறேன்’ என்றார். அப்பவும் நிருபர்கள் நகருவதாக தெரியவில்லை என்றதும் ‘மக்களுடன்தான் கூட்டணி’ என்று பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு புறப்பட்டார் விஜயகாந்த்.

admin @ 11:21 pm
Filed under: news
Vijaykant condemns Apollo Hospital

Posted on Friday 3 October 2008

மா‌ர்‌க்‌‌சிஸ்‌ட் வரதராஜனை பார்க்க அனுமதி மறுப்பு: 
அப்பல்லோ மரு‌த்துவமனை மீது விஜயகாந்த் புகார்

சென்னை: மரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை பெ‌‌ற்று வரு‌ம் மா‌ர்‌க்‌‌சிஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயல‌ர் வரதராஜனை, ‌நி‌ர்வா‌கிகளுட‌ன் செ‌ன்று பா‌ர்‌க்க அனுமத‌ி மறுக்கப்பட்டதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘மார்க்சிஸ்‌ட் கம்யூனிஸ்‌ட் கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இன்று (நேற்று) காலை 11.30 மணியளவில் அவரை நான் பார்க்க அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன்.

அவைத்தலைவர் பண்ருட்டி ராமசந்திரன், தலைமை நிலைய செயலர் பார்த்த சாரதி, தேர்தல் பிரிவு செயலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள் சிலர் என்னுடன் வந்தார்கள்.

அப்பல்லோ மருத்துவமனையின் வாசலிலேயே என்னுடன் வந்தவர்களை மருத்துவமனைக்கு உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. வேண்டுமானால் என்னை மட்டும் அனுமதிப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. என்னுடன் வந்தவர்களை அனுமதிக்க முடியாது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தடுத்தது ஏன் என்று எனக்கு புரியவில்லை.

முதல்வர் கருணாநிதி பார்த்த செய்தி புகைப்படத்தோடு பத்திரிகையில் வந்துள்ளது. எனினும் நீண்ட நேரம் நான் வாதாடியும் கூட அனுமதி தரவில்லை. தமிழ்நாட்டில் இப்படி ஒரு விசித்திரமான மருத்துவமனை இருப்பது எனக்கு இப்பொழுதுதான் தெரிகிறது. ஓருவேளை இதிலும் அரசியல் புகுந்து விளையாடுகிறதோ என்று வேதனைப்படுகிறேன்.

மார்க்சிஸ்‌ட் கம்யூனிஸ்‌ட் கட்சியைச் சேர்ந்த பெரியவர் என்.வரதராஜன் விரைவில் குணம் அடைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.
 

admin @ 10:58 pm
Filed under: news
DMDK will be the next ruling party: Vijaykant

Posted on Monday 29 September 2008

அடுத்த ஆட்சி தே.மு.தி.க. தான்!: அடித்துச் சொல்கிறார் விஜயகாந்த்

மதுரை: அடுத்து தே.மு.தி.க. தான் ஆட்சி அமைக்கும் என்பதை அடித்துச் சொல்வேன். நான் நானாகத்தான் இருக்கிறேன். தெய்வமும், மக்களும் எனக்குத் துணையாக உள்ளனர். பல கட்சிகள் கூட்டணிக்காக வருகிறார்கள். தே.மு.தி.க. வின் வளர்ச்சியைப் பார்த்து வருகிறார்கள் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தே.மு.தி.க. வில் இணையும் விழா, தேமுதிக மதுரை தலைமைக் கழக அலுவலக வளாகத்தில் நடந்தது.  அப்போதுவிஜயகாந்த் பேசுகையில்,

”தமிழகத்தில் ஜனநாயக ஆட்சி நடக்கிறது என்று முதல்வர் கூறுகிறார். ஆனால் மதுரையில் அவரது மகன் சர்வாதிகாரம் செய்து வருகிறார்.

முதல்வர் அவரா, அல்லது அவரது மகனா? மதுரையில் தனியாட்சி நடந்து வருகிறது. நேரு, படேல் உள்ளிட்டோர் பாடுபட்டு வாங்கிக் கொடுத்த சுதந்திரம் மதுரையில் இல்லை.

ஒரு திரைப்படத்தைத் திரையிடக் கூடாது என்று தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டுவது ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிப்பது போலாகும்.

காதலில் விழுந்தேன் படத்தை போடுகிறீர்களா, சரி போட்டுக் கொள்ளுங்கள், ஆனால் மவனே அடுத்தடுத்து டார்ச்சர் கொடுப்போம் என்று பயமுறுத்துகிறார்கள். இதைப் பார்த்து பயந்து போன தியேட்டர் உரிமையாளர்கள் எதற்கு வம்பு என்று படத்தை திரையிட தயங்குகின்றனர்.

எனது கல்யாண மண்டபத்தை இடித்து விட்டு பாலம் கட்டப் போவதாக கூறினார்கள். ஆனால் பாலம் கட்டுவதற்கான ஒரு நடைமுறையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய முடியும்? இது எல்லோருடைய கேள்வி. 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதியால் விலைவாசி குறையவில்லை.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தமிழக அமைச்சரவையில் இடம் கேட்பேன் என்றால் புதுச்சேரியில் தி.மு.க. வுக்கு இடம் கேட்பேன் என்கிறார் கருணாநிதி.

ரேஷன் கடைகளில் 50 ரூபாய்க்கு மளிகைப் பொருட்களை தரப் போவதாக கூறுகிறார்கள். நான் அதற்கு முன்பே ரேஷன் பொருட்களை பாக்கெட்டில் போட்டு வீட்டுக்கே தருவோம் என்றேன்.

50 ரூபாய் மளிகைப் பொருட்களை வாங்கினால்தான் ஒரு ரூபாய் அரிசியைத் தருகிறார்கள். அப்படியானால் ஒரு கிலோ அரிசி விலை 51 ரூபாயா?

எல்லாத் துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தமிழகத்தில் அரசு பஸ் விபத்துக்கள் அதிகம். காரணம், டிரைவிங் தெரியாமலேயே பலர் லஞ்சம் கொடுத்து டிரைவர் வேலை வாங்குகிறார்கள்.

நான் தேர்தலில் வெற்றி பெற்றால் பசு மாடு தருவேன் என்றேன். இலவசமாக அல்ல, பாலை விற்று அதை வைத்து பணத்தைக் கட்டுங்கள் என்கிறேன். பெண் குழந்தை பிறந்தால் 10 ஆயிரம் ரூபாய், அந்தக் குழந்தையின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்வேன் என்றேன். அந்தக் குழந்தையின் திருமணத்தின்போது 1 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பதால்தான் அப்படிச் சொன்னேன்.

அடுத்து தே.மு.தி.க. தான் ஆட்சி அமைக்கும் என்பதை அடித்துச் சொல்வேன். நான் நானாகத்தான் இருக்கிறேன். தெய்வமும், மக்களும் எனக்குத் துணையாக உள்ளனர். பல கட்சிகள் கூட்டணிக்காக வருகிறார்கள். தே.மு.தி.க. வின் வளர்ச்சியைப் பார்த்து வருகிறார்கள்.

தே.மு.தி.க. தொடங்கி 4 ஆண்டுகளிலேயே 20 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு கூறியதைப் பார்த்து பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

தே.மு.தி.க. சொன்ன தேர்தல் அறிக்கையைத்தான் தற்போது தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது. இன்று கட்சியில் சேர்ந்துள்ள 5 ஆயிரம் பேரும், 50 ஆயிரம் ஓட்டுக்களாக மாற்றித் தர வேண்டும்” என்று பேசினார்.

admin @ 11:12 pm
Filed under: news
Vadivelu case: Vijaykant manager approach HC

Posted on Friday 26 September 2008

நடிக‌ர் வடிவேலு மீதான அடிதடி வழக்கு:
விரைந்து முடிக்க விஜயகாந்த் மேலாள‌ர் மனு
 
சென்னை: நடிக‌ர் வடிவேலு, தே.மு.‌தி.க. தொ‌‌ண்ட‌ர்க‌ள் மோ‌தி‌க் கொ‌ண்ட வழ‌க்‌கி‌ல், கட‌ந்த ஓரா‌ண்டா‌கியு‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் எ‌ந்த‌வித நடவடி‌க்கையு‌ம் எடு‌க்க‌வி‌ல்லை எ‌ன்று‌ம் இ‌ந்த வழ‌க்கை ‌விரை‌ந்து ‌விசா‌ரி‌த்து அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்யுமாறு கா‌வ‌ல்துறை‌யினரு‌க்கு உ‌த்தர‌விட வே‌ண்டு‌ம் எ‌‌ன்று‌ம் ‌விஜயகா‌ந்‌தி‌ன் மேலாள‌ர், செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளா‌ர்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மேலாள‌ர் சதீஷ்குமார், செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தாக்கல் செய்துள்ள மனுவில்,

‘விஜயகாந்தின் உறவினரும், முன்னாள் அரசு வழ‌க்க‌றிஞருமான முத்துராம் கடந்த 13.9.2007 அன்று மரணம் அடைந்தார். அப்போது தே.மு.தி.க. தொண்டர்கள் சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அதிக அளவில் கூடினார்கள்.

அதே தெருவில் குடியிருக்கும் நடிகர் வடிவேலு அந்த வழியாக வந்தார். குடிபோதையில் வந்த அவருக்கும், எங்களுக்கும் தகராறு ஏற்பட்டது. 20 பேருடன் வந்த அவர் என்னையும், தே.மு.தி.க. தொண்டர்கள் சிலரையும் தாக்கினார்கள். இது தொடர்பாக நான் கொடுத்த புகாரில் வடிவேலு மீது வழ‌க்கு‌ப் பதிவு செய்யப்பட்டது.

ஆனால் கடந்த ஓரா‌ண்டா‌கியு‌ம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வடிவேலு மீதான வழக்கை விரைந்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவ‌‌ல்துறை‌யினரு‌க்கு உத்தர விடவேண்டும்’ எ‌ன்று மனுவில் கூறியுள்ளார்.

இ‌ந்த மனு செ‌ப்ட‌ம்ப‌ர் 29ஆ‌ம் தே‌தி விசாரணைக்கு வருகிறது. 
 

admin @ 10:37 pm
Filed under: news
Vagai Chandrasekar charges Vijaykant

Posted on Friday 26 September 2008

வடிவேலுவையே சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகர் விஜயகாந்த் : வாகை சந்திரசேகர்

சென்னை: வடிவேலுவையே சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகராக விஜயகாந்த் உள்ளார் என்று நக்கல் அடித்திருக்கிறார் தி.மு.க. வைச் சேர்ந்த நடிகர் வாகை சந்திரசேகர்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில்,

‘உலகம் எனும் பூமிப்பந்தில் ஓரறிவு முதல் ஆறு அறிவு வரை உயிரினங்கள் வாழ்வதற்கு முழு முதற்காரணம் வெப்பம் - சூடு, அதைத் தருவது சூரியன். அதன் மகத்தான சக்தி இந்த பிரபஞ்சத்தையே ஆட்கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. அது நல்லவன் கெட்டவன் பார்க்காது வேண்டியவன் வேண்டாதவன் பார்க்காது.

அதைப்போல முதல்வர் கருணாநிதி இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்கு தன் வாழ்வையே அர்ப்பணித்து உழைத்துக் கொண்டிருப்பவர். மனித சூரியனாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

நடிகர் வடிவேலு வீடும் அலுவலகமும் தாக்கப்பட்டதற்குக் காரணம், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீதும், அவருடைய கட்சியினர் மீதும் குற்றம் சாட்டியுள்ளார். அதற்கு விஜயகாந்த், ஆளும் கட்சியின் தூண்டுதல்தான் காரணம் என்று சூரியனைப் பார்த்து கர்ஜிக்கிறார். இவருடைய அறிக்கை இவருடைய பொதுவாழ்க்கை போராட்டத்திற்கு, இவரது மகுடத்தில் பதிக்கப்பட்ட மற்றொரு கூழாங்கல் என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறேன்.

தமிழக மக்களையெல்லாம் கவலையை மறந்து சிரிக்க வைக்கும் ஆற்றல் பெற்ற நடிகர் வடிவேலுவையே சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகராய் விளங்கும் விஜயகாந்தை மக்கள் ஏற இறங்க பார்க்கிறார்கள்.

நண்பா உன் கோமாளிக் கூத்தைப் பார்த்து மக்கள் வடிவேலுவின் திரைப்பட பாணியில் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

”ஸ்ஸ்… அப்பா… இப்பவே கண்ணைக் கட்டுதே!’ மற்றொரு வசனம்… ‘விஜயகாந்திற்கு நாகரிகம், பண்பு இதெல்லாம் வருமா வராதா?’ என்று.
 
முதல்வர் கருணாநிதி பெயரைச் சொல்ல உங்களுக்குத் தகுதி இருக்கிறதா என்பதையும், வடிவேலுவின் பாணியிலேயே சொல்கிறேன். ”ரூம் போட்டு யோசி” என்று கூறியுள்ளார்.

admin @ 1:17 am
Filed under: news
2008/09/26 Punch Balu

Posted on Friday 26 September 2008

balu.jpg‘பஞ்ச்’ பாலு

தயவுசெய்து முதலில் பின்குறிப்பைப் படித்து விடவும்.

பஞ்ச் டயலாக் விடும் பெருந்தலைகளுக்கே பஞ்ச் விடுவது தான் பஞ்ச் பாலுவின் பாலிசி!

அவரு எவ்வளவு பவரு உள்ளவரா இருந்தாலும் பஞ்ச் பாலுக்கிட்ட மாட்டினா பஞ்சு, பஞ்சா பறக்க வேண்டியதுதான்.

பின் குறிப்பு: கண்டிஷன்ஸ் அப்ளை மாதிரி இது என்னடா பின்குறிப்புன்னு பார்க்கறீங்களா. வழக்கமான மேட்டர்தான்.
பஞ்ச் பாலு அடிக்கும் கமெண்டுகள் சும்மா தமாசுக்குத்தான். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எழுதப்படுவதில்லை.
சும்மா படிச்சுட்டு, ஆங்… அப்படியான்னு ரொம்ப ஈசியா எடுத்துக்கிட்டு போயிடனும். ஓ.கே?

…………………..

கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளில் கருணாநிதி தொடங்கிய டிவிக்கு கலைஞர் டிவி என்று பெயர் வைத்துக் கொண்டார். ஏன் அண்ணாவின் பெயரை வைக்கவில்லை? குறைந்தபட்சம் இசையருவி டிவிக்காவது அண்ணாவின் பெயரை வைத்திருக்கலாமே.
-ராமராஜன்
இதே கேள்வியை எம்.ஜி.ஆர். என்று மாற்றி அம்மாகிட்ட கேட்க தில்லு இருக்கா உங்களுக்கு?

இந்தியாவில் உள்ள மாநகரங்களுக்குத் தீவிரவாதிகளின் மிரட்டல் உள்ளது. அந்த வகையில் சென்னை நகரமும் தீவிரவாதிகளின் பட்டியலில் உள்ளது.
- தமிழக டி.ஜி.பி., கே.பி. ஜெயின்
அதுதான் மக்களுக்கே தெரியுமே. தீவிரவாதிகளை எப்படி ஒடுக்கப்போறீங்க, மக்களை எப்படி காப்பாற்ற போகிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள்.

கருணாநிதியின் தூண்டுதலின் பேரிலேயே வடிவேலு என்மீது  குற்றம் சாட்டுகிறார். வடிவேலு என்னை எதிர்த்து தேர்தலில் நிற்பேன் என்கிறார். கருணாநிதியே என்னை எதிர்த்துப் போட்டியிட்டாலும் நான் பயப்பட மாட்டேன். கலைஞர் மீதியிருந்த மரியாதையே போய்விட்டது. இனி அவரை கருணாநிதி என்றுதான் அழைக்கப் போகிறேன்.
நீங்க எப்படி அழைத்தாலும் அவர் உங்களைக் கண்டுகொள்ளப் போவதில்லை. அப்படியிருக்க, எதிர்ப்பு அரசியல் செய்ய வேண்டி, கண்டுக்கவே கண்டுக்காதவர்களைப் பார்த்து கர்ஜிப்பது பலவீனமாகத் தெரிகிறதே. அப்புறம்… எது கேட்டாலும் பயப்படமாட்டேன் என்று பதில் சொல்வது, உங்களைப் பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள் என்கிற நினைப்பில்தானே? இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு தன்னம்பிக்கை கூடாதுங்க. இப்பவே முதல்வர் மாதிரி பேசற உங்களை விட பழையவர்களே மேல் என்று மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டது உங்க காதுல விழுந்ததா?

தமிழகத்தில் மின்தட்டுப்பாடு நீடிக்கிறது. மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கோ, மாற்று நடவடிக்கை எடுப்பதற்கோ தமிழக அரசு உருப்படியாக எதுவும் செய்யவில்லை.
- இந்திய. கம்யூ., மாநிலச் செயலர் தா. பாண்டியன்
கூட இருந்தாலும் திட்டுறீங்க. இல்லாவிட்டாலும் திட்டுறீங்க. மக்கள் நண்பனாக நடிக்கத்தான் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது? பேசாம இ. கம்யூனிஸ்ட் என்பதை தி.(திட்டற) கம்யூனிஸ்ட்ன்னு மாத்திடுங்கன்னு தி.மு.க. உறுப்பினர்கள் புலம்புவது கேட்கிறதா?

காமெடியனை ஹீரோவாக்கிட்டாரு விஜயகாந்த். நானா அவரா பார்த்துருவோம். கட்சி ஆரம்பிக்கிறேனோ இல்லையோ… அவர் தேர்தலில் எங்கே போட்டியிட்டாலும் அவருக்கு நான்தான் சரியான போட்டி. பார்த்துப்புடுவோம். மக்கள் செல்வாக்கு யாருக்கு இருக்குன்னு பார்த்துப்புடுவோம்.
-வடிவேலு
நல்லா ஜோக் அடிச்சீங்க போங்க! சின்னக்கவுண்டரில் குடை பிடித்ததை மறந்துவிட்டு பேசக் கூடாது. கைப்புள்ளக் கணக்கா கவிழ்ந்திடாம பார்த்துக்கணும். நாய் சேகர் வழியில் நாக்கு  மட்டும் பேசாம பார்த்துக்கணும். அப்பதான் அரசியல் களம் சூடா இருக்கும். என்னாங்கிறீங்க?

admin @ 12:08 am
Filed under: Uncategorized
2008/09/26 Junior Kelvi Pathil

Posted on Friday 26 September 2008

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

ஏ.கருப்பன், பெங்களூர்-2.

தமிழ்நாட்டில் மேலும் நாற்பது லட்சம் இலவச தொலைக்காட்சிகளை அரசு வழங்கப் போகிறதாமே?

சேலம், காரியாப்பட்டியில் அந்த வேளை பாலுக்கு அழுத குழந்தையையும்,அந்த வேளை பசிக்குத் தாங்காத குழந்தைகளுமாய் மூன்று பேரைக் கிணற்றில் தள்ளிச் சாகடித்த ஒரு குடும்பத்தின் அவல நிலையைக் கலைஞர் பத்திரிகைகளில் பார்த்திருக்க மாட்டார் என எண்ணுகிறேன். பசிப்பிணிப் போக்காதவர்களுக்கு தொலைக்காட்சியெல்லாம் முக்கியமாகத் தெரிவது எப்படி.


எல்.வெங்கிட்டு, பாபநாசம்.

விலைவாசி உயர்வு, டீசல் தட்டுப்பாடு, மின்வெட்டு போன்றவற்றில் நிர்வாகத் திறனற்ற கலைஞர் பதவி விலக வேண்டும் என்கிறாரே ஜெயலலிதா?

ஜெயலலிதாவை மக்கள் ஆதரிக்கிறார்களோ இல்லையோ, இந்த விஷயத்தில் அவரை எல்லோரும் ஆதரிக்கிறார்கள். அவர் மலை மீது இருந்தாலும் சரி, மண் மீது இருந்தாலும் சரி அவர் விடுக்கிற அறிக்கைகள், அறிவாலயத்தைக் கொஞ்சம் அசைக்கவே செய்கிறது. இதுதான் அம்மா!


ஆர்.விஜய், முகப்பேர்.

சவரன் 4000 ரூபாய் என்று நம்பிக் குவிந்த பாமர மக்களைப் பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?

செய்கூலி இல்லை; சேதாரம் இல்லை. கற்களுக்குக் கட்டணம் இல்லை. பற்றுக்கு இவ்வளவு ரூபாய் குறைவு என்று விற்கும் நகை வியாபாரிகளிடம் போய் விழுகிற நிலையில் படித்தவர்களே இருக்கும்போது பாமரர்கள் என்ன செய்வார்கள் பாவம். இது எப்படிச் சாத்தியம் என்கிற கேள்வி எழ வேண்டாமா? தங்கத்தின் தரத்தில் கைவைத்துத்தானே இவற்றைச் சாத்தியப்படுத்துகிறார்கள்? தரத்தை நீ எவ்வளவு வேணும்ன்னாலும் குறைச்சுக்கோ எனக்கு வேண்டியவையெல்லாம் சலுகைகளே என்கிற அறிவிப்புதானே ஏமாற்று நகைக்கடைகளில் படித்தவர்களின் கூட்டம்? பாதிச் செம்பு கலந்துக்கோ பரவாயில்லை. ஆனால் பாதி விலைக்குத் தா என்று தங்கள் பங்கிற்கு அறிவிக்கிறது பாமரர் கூட்டம்.


எம்.இமானுவேல், சேலம்.

நாம் எதிர்பார்ப்பது நடக்கிறதா?

எங்க நடக்கிறது? வெடிகுண்டுப் பிரச்னைகள் குப்பைத்தொட்டிக்குப் போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்? ஆனால் அப்பிரச்னைகளின் தொடக்கமே அந்த குப்பைத் தொட்டியாகத்தான் இருக்கிறது.


கே.சுந்தர், வந்தவாசி.

ஐநூறு ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட மாட்டாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதே?

அட, ரிசர்வ் வங்கியில் ஏதேனும் தேர்தல் நெருங்கிவட்டதா? அவர்களும் அரசியல் பண்ண ஆரம்பித்துவிட்டார்களே?


எல்.கற்பகம், திருப்பூர்.

தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் எல்லோருக்கும் வேலை கிடைக்கிறதா?

எல்லோருக்கும் கிடைப்பதில்லை, கிடைத்தாலும் சரியான கூலி கிடைப்பதில்லை. அதனால்தான் ஆங்காங்கே சிறுசிறு பிரச்னைகள், கட்சி ஊர்வலங்கள், கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல்கள், பந்த்கள், கல்லெறிதல், தீ வைத்தல் போன்றவற்றிற்கு நிறையப் பேர்கள் கிடைக்கிறார்கள். கூலிக்கும், கூலி இல்லாமலும்!


சி.முத்துக்குமார், சென்னை-4.

சத்யராஜ் இல்லத் திருமண வரவேற்பில் தங்களைக் கண்டேனே! திரையுலக இல்லத்து விசேஷங்களை விடமாட்டீர்களா?

அப்படியில்லை. திரையுலகில் சிலரை நான் விதிவிலக்காகக் கருதிப் பழகுவது உண்டு. மற்றபடி திரையுலகினரிடமிருந்து விலகி இருப்பதையே என் நெஞ்சம் விரும்புகிறது. நெருங்கிப் பழகி நட்புணர்வு வளர்ந்தால் மனத்தில் பட்டதை எழுதவோ விமர்சிக்கவோ முடியாமல் போய்விடும். நன்கு பழகினால் தங்கள் படத்தையும் தங்களைப் பற்றியும் நன்றாக எழுத வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளவர்கள் திரையுலகில் மிக அதிகம். இது நம் எழுத்துச் சுதந்தரத்தைப் பறித்துக் கையைக் கட்டிப் போடுகிறது. சத்யராஜ் விதிவிலக்கானவர். நிற்க. திருமண வரவேற்பா அது? மாநாடு! அப்படித்தானே?


ஆர்.ஜெயங்கொண்டான், திருச்சி-1.

ஒரு ரூபாய் அரிசித் திட்டம் மூலம் துணிப் பைகளில் கலைஞர் படம்; பேருந்துகளில் கலைஞரின் தத்துவங்களுடன் அவர் படம்; ஜெயலலிதா உருவாக்கியுள்ள இளைஞர் பாசறையின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பனியனில் ஜெயலலிதா படம், பாசறையின் கனிணிப் பயிற்சி மையங்களில் முதல் ஸ்கிரீனில் ஜெயலலிதா படம். நன்கு வளர்ந்து விட்ட இவர்கள், தங்கள் தோற்றத்தை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஏன்?

தமிழகம் தனிமனித வழிபாடு (Hero worship) சார்ந்த அரசியலையே சாரமாகக் கொண்டது. ஆனால் இத் தலைவர்கள் இருவரும் உணர வேண்டியது மனத்தில் தங்கள் உருவம் பதியும் படியான சேவைகளையும் ஊழியத்தையும் மக்களுக்குச் செய்ய வேண்டும் என்பது.


இரா.ஆண்டியப்பன், குளித்தலை.

விஜயகாந்த் யாரோடு கூட்டணி வைத்துக் கொள்வார்?

இது இன்னும் முட்டையாகவே இருக்கு. குஞ்சானால் சொல்கிறேன்.


கே.முகமது பாஷா, தொண்டி.

இந்தியத் தொலைக்காட்சிகளில் இந்தியன் எதிர்பார்ப்பது?

‘மீண்டும்’ பொடா என்கிற சீரியல். இந்தச் சீரியலை ஒளிபரப்பினால் எல்லோரும் கேபிளை தூரப் போட்டுவிட்டு டி.டி.எச் - சேவைகளையே எதிர் கொள்வார்கள். பொடாவை அவ்வளவு துல்லியமாகப் பார்க்க வேண்டும் என்பதே இன்று எல்லோருடைய ஆசை.


டி.அழகு, விருத்தாச்சலம்.

கலைஞரும், ராமதாசும் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்…? என் பிழைப்பில் மண்ணள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் கேள்வி-பதில் ஆரம்பித்துவிட்டார்கள். நாமாவது நான்கு பக்கம்! அவர்கள் பக்கம் டூ பக்கம் ஒரே கேள்வி-பதில் மயம்தான்.


ஏ.அப்துல்ஹமீது, வேலூர்.

சிவராஜ் பாட்டீல் இராஜினாமா செய்ய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு சரியா?

உள்துறை அமைச்சருக்கென்று சில முக்கியப் பொறுப்புகள் இருக்கின்றன. இவற்றுள் முக்கியமானது மக்களின் உயிர்ப் பாதுகாப்பு. ஒரு வன்முறை இயக்கம் மக்களோடு மக்களாகக் கலந்து வெடிகுண்டுகளைப் பரவலாக்குகிறபோது அதை வேரோடு பிடுங்குவது கடினமான செயல். ஆனால் மிக நெருங்கிய வட்டதிற்குத்தான் இவர் என்ன செய்யத் தவறினார் என்பது தெரியும். வெடிகுண்டுகளுக்கெல்லாம் இராஜினாமா என்றால் இந்தியாவில் மாதத்திற்கு ஒரு உள்துறை அமைச்சர் தேவைப்படுவார்!


அ. அப்துல்காதர், பாண்டிச்சேரி.

சுமார் அறுபத்து நான்கு லட்சம் கோடி இந்தியப் பணம், சுவிஸ்நாட்டு வங்கிகளில் மட்டும் முடங்கிக் கிடக்கிறதாமே?

கொஞ்சம் இருங்க. வியப்பில் வெளிவந்த என் கண்களை உள்ளே தள்ளிக் கொள்கிறேன். நம் அரசியல் மாண்புகளின் மகத்தான சாதனையை எண்ணி வியக்கிறேன். இந்தியா வறுமை நாடா? எந்த பத்தாம்பசலி சொன்னான்.


வி.எம்.கணேசன், தஞ்சாவூர்.

வரப்போகும் ஆறு மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் எப்படியிருக்கும்?

சோனியா பிரசாரத்திற்குப் போகாமலிருந்தால், அதன் முடிவுகள் எப்படியிருநதாலும் சமாளித்துவிடலாம். அவர் போனால்தான் தோற்றதற்கு என்ன சொல்லலாம் என்று காங்கிரஸார் காரணங்களைத் தேடவேண்டியிருக்கும்.


பி.அருள், கடலூர்.

மத்தியில் இன்றைய காங்கிரஸ் அரசு?

செங்கோட்டையில் இருந்து வெளியேற அது கவுண்ட் டவுனில் இருக்கிறது. விரைவில் வெளியேறலாம்.


அ.ரேவதி, சென்னை-2.

இனி 108க்குப் பேசினால் ஆம்புலன்ஸ் இலவசமாமே?

வரட்டும். தனியார் மருத்துவமனைகளின் பகல் கொள்ளைகள் குறையும். சில வாரங்களுக்கு முன்பு உறவினர் ஒருவருக்காகத் தனியார் ஆம்புலன்ஸை அழைத்தோம். சிறு தூரம், சிறு நேரக் காத்திருப்பு. 2600 ரூபாய் பிடுங்கிவிட்டார்கள். இவர்களது கொட்டம் அடங்க வேண்டாமா?

19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்