All india strike on 30th aug: AITUC

Posted on Friday 18 July 2008

ஆகஸ்டு 30ஆம் தேதி பொது வேலைநிறுத்தம்: ஏ.ஐ.டி.யூ.சி. அறிவிப்பு

சென்னை: அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், நாடு முழுவதும் ஆகஸ்ட் 30ஆம் தேதி பொது வேலைநிறுத்தம் நடைபெறும் என்று ஏ.ஐ.டி.யூ.சி. அகில இந்திய தலைவர் குருதாஸ்தாஸ் குப்தா அறிவித்துள்ளார்.

இது தொடர்பான ஆலோசனை நடத்த ஏ.ஐ.டி.யூ.சி. ஆயத்த மாநாடு சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று மாலை நடந்தது.

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.தியாகராஜன் தலைமை வகித்தார். அகில இந்திய பொதுச்செயலாளர் குருதாஸ்தாஸ் குப்தா எம்.பி., பங்கேற்று பேசுகையில்,

”நாடு தற்போது சந்தித்துள்ள மோசமான சூழ்நிலை மற்றும் ஆகஸ்ட் 30ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்படும் பொது வேலை நிறுத்தம் குறித்து விவாதிக்க இந்த ஆயத்த மாநாடு நடத்தப்படுகிறது. மன்மோகன்சிங் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளோம். இது உடனடியாக எடுத்த முடிவு அல்ல. இடதுசாரிகள் மத்திய அரசுடன் கூட்டணி அமைத்தபோது குறைந்தபட்ச செயல்திட்டத்தை அடிப்படையாக வைத்து கூட்டணி சேர்ந்தோம். ஆனால், குறைந்தபட்ச செயல் திட்டத்தை அமல்படுத்த அரசு மறுத்துவிட்டது.

அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக நாடு அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பா.ஜ.வை எதிர்க்கவே காங்கிரசுக்கு ஆதரவு அளித்தோம். எங்களுக்கு மந்திரி பதவி தேவையில்லை. மக்கள் நலன் முக்கியம் என்று கருதிதான் ஆதரவு கொடுத்து வந்தோம். பழைய தவறை காங்கிரஸ் திருத்திக் கொள்ளும் என்று நினைத்தோம்.

பிரதமர் மன்மோகன் சிங், நிதி மந்திரி ப.சிதம்பரம், மான்டெக் சிங் அலுவாலியா ஆகியோரின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக நாட்டின் நிலைமை மோசமாக இருக்கிறது. எனவேதான் ஆதரவை வாபஸ் பெற்றோம்.

மக்கள் மற்றும் தொழிலாளிகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி ஏ.ஐ.டி.யூ.சி. மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடத்தப்படும். இதற்கு அனைத்து பொதுமக்கள் மற்றும் அனைத்து சங்கங்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

admin @ 2:28 am
Filed under: news
Kamarajar rule in TN!: K.V. Thangabalu

Posted on Wednesday 9 July 2008

தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி!: தங்கபாலு ஆசை

சென்னை: கோஷ்டிப் பூசலை ஒழித்து தமிழக‌‌‌த்‌தி‌ல் காங்கிரஸ் கட்சியை மிகப் பெரிய இயக்கமாக மாற்றி காட்டுவேன். தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைக் கொண்டுவர பாடுபடுவேன் என்று த‌மிழக கா‌ங்‌கிர‌‌ஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட கே.‌வி.தங்கபாலு கூ‌றினா‌ர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட கே.‌வி.தங்கபாலு நேற்று காலை சத்திய மூர்த்திபவனுக்கு வந்தார். அவருக்கு க‌ட்‌சி‌ தொ‌ண்ட‌ர்க‌ள் உ‌ற்சாக வரவே‌ற்ப‌ளி‌த்தன‌ர்.

பின்னர் கட்சியின் புதிய தலைவராக முறைப்படி அவ‌ர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் மு‌ன்னா‌ள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி பொறுப்புகளை ஒப்படைத்தார்.

இ‌ந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பார்வையாளர் கே.பி.கிருஷ்ணமூர்த்தி, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், நாடாளும‌ன்ற, ச‌ட்டம‌ன்ற ‌உறு‌ப்‌பின‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல்,

”சோனியா காந்தியின் கட்டளை  ஏற்று 3ஆவது முறையாக தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளேன். புதிய சூழலில் தமிழக காங்கிரசை பலப்படுத்தும் பணியை தொடருகிறேன். எல்லாத் தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன்.

மத்தியிலும் மாநிலத்திலும் காமராஜரின் கொள்கைகளை, லட்சியங்களை நிறைவேற்றும் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியைக்  கொண்டுவர பாடுபடுவேன். தமிழக காங்கிரசில் எந்தக்குழு அரசியலும் கிடையாது. தமிழக மக்களின்

உணர்வுகளை பிரதிபலிக்கும் கட்சியாக காங்கிரஸ் இருக்கும். மாநில நிர்வாகிகள் நியமனம் குறித்து அனைத்து தலைவர்களிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்” என்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு முதல்வர் கருணாநிதியை நேற்று மாலை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இருவரும் சுமார் 25 நிமிடங்கள் பேசினர்.

admin @ 10:47 pm
Filed under: news
2008/06/28 TN farmers loan Rs. 5,270 crores waived

Posted on Friday 27 June 2008

தமிழக விவசாயிகளின் 5,270 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி! 
 
சென்னை: தமிழக விவசாயிகளின் 5,270 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனடைந்த விவசாயிகளின் பட்டியலை நேற்று வங்கிகள் வெளியிட்டன.

மேலும்…

admin @ 10:02 pm
Filed under: news
2008/06/26 N-deal issue…Congress-Left meets once more

Posted on Wednesday 25 June 2008

அணுசக்தி ஒப்பந்த பிரச்னை:
மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை!
 

டெல்லி: இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்களுக்கும், இடதுசாரி கட்சித் தலைவர்களுக்கும் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இருதரப்பிலும் மீண்டும் கூடி விவாதிக்க முடிவு செய்துள்ளனர். இதனால், மத்திய அரசுக்கு உடனடி ஆபத்து எதுவும் இல்லை.

மேலும்…

admin @ 9:55 pm
Filed under: news
2008/06/21 Jaya asks Chidambaram’s resignation!

Posted on Saturday 21 June 2008

பதில் கூறாத ப.சிதம்பரம் பதவி விலக ஜெ., கோரிக்கை!
 
சென்னை: ‘எனது கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காத மத்திய நிதியமைச்சர் ‌சித‌ம்பர‌ம் பதவி விலகத் தயாரா? பதவி விலகவில்லை எ‌ன்றா‌ர் பிரதமர் அவரை நீக்குவாரா?” என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.

மேலும்…

admin @ 3:31 am
Filed under: news
2008/06/14 Co-operate with govt:FM

Posted on Saturday 14 June 2008

விலைவாசி உயர்வு: அரசுக்கு மக்கள் ஒத்துழைக்கவேண்டும்!: ப.சிதம்பரம்

சென்னை: விலைவாசி உயர்வு பிரச்னையில் அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டார்.

மேலும்…

admin @ 2:11 am
Filed under: news
2008/06/12 Terrorism… Jayalalitha attacks Chidambaram

Posted on Thursday 12 June 2008

jayalalitha_7.jpgபங்குச் சந்தையில் தீவிரவாதிகள்: பொய் சொல்கிறார் ப.சிதம்பரம்!: ஜெ., குற்றச்சாட்டு

சென்னை: ஜெயலலிதா -ப.சிதம்பரம் இடையிலான அறிக்கை யுத்தம் தொடர்கிறது.

மேலும்…

admin @ 9:55 am
Filed under: news
2008/06/03 Karunanidhi is theater: Subramani Siva

Posted on Tuesday 3 June 2008

subramanian-swamy.jpgகருணாநிதி முதலைக் கண்ணீர்!: சுப்பிரமணிய சாமி தாக்கு

சென்னை: ‘சேது சமுத்திரத் திட்ட பிரச்னையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி முதலைக் கண்ணீர் வடித்து கவிதை எழுதுகிறார்.

மேலும்…

admin @ 3:27 am
Filed under: news
2008/06/02 FM ask reducer for inflation!

Posted on Monday 2 June 2008

இன்னும் என்ன செய்யலாம்?: விலைவாசியைக் குறைக்க யோசனைக் கேட்கிறார் ப.சி!

புதுச்சேரி: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த இன்னும் என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று யார் யோசனை சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள தயார் என்று  மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

மேலும்…

admin @ 12:05 am
Filed under: news
2008/05/31 Petrol price hike today

Posted on Saturday 31 May 2008

பெட்ரோல் விலை உயர்வு: இன்று அறிவிப்பு

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வுடன் சேர்த்து சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.20 உயர்த்தப்படுகிறது. இது பற்றிய அறிவிப்பு இன்று (சனிக்கிழமை) வெளியாகும் எனத் தெரிகிறது.

மேலும்…

admin @ 1:52 am
Filed under: news