குசேலன் திரைப்பட விழா புறக்கணிப்பா?: நடிகைகள் மறுப்பு
குசேலன் திரைப்படப் பாடல் வெளியீட்டு விழாவை புறக்கணித்தாக வந்த செய்திக்கு நடிகைகள் மீனா மற்றும் நயன்தாரா மறுப்பு தெரிவித்துள்ளனர். குசேலன் திரைப்பட விழாவை புறக்கணிக்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ரஜினிகாந்த், பசுபதி, நயன்தாரா, மீனா, ஆகியோர் நடித்துள்ள குசேலன் திரைப்படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வருகிறது.
கடந்த திங்கட்கிழமை இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு குசேலனில் நடிக்கும் பசுபதி, மீனா, நயன்தாரா ஆகிய முக்கியப் புள்ளிகள் வரவில்லை. இதைத் தொடர்ந்து இம்மூவரும் வேண்டுமென்றே விழாவை புறக்கணித்ததாக செய்திகள் கிளம்பியது.
ஆனால் இம்மூவரும் வெவ்வேறு படப்பிடிப்புகளில் இருந்ததால் விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மீனா கூறுகையில்,
8221;கடந்த 27ஆம் தேதி முதல் ஐதராபாத்தில் 8216;கரிகொண்ட தங்கம்மா8217; என்ற தெலுங்கு திரைப்படத்தில் தொடர்ந்து நடித்து வருகிறேன். இதனால்தான் குசேலன் திரைப்பட விழாவிற்கு வர இயலவில்லை.
குசேலன் திரைப்பட தெலுங்கு பதிப்பில் (கதாநாயகடு) நானே டப்பிங் பேசி வருகிறேன். அந்த வேலையும் ஐதராபாத்தில்தான் நடந்துவருகிறது8221; என்று கூறுகிறார்.
நயன்தாரா கூறுகையில்,
8221;நான் ஏகன் திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறேன். சென்னையில்தான் படப்பிடிப்பு என்றாலும் குசேலன் விழா அன்றைக்கு ஏகன் படப்பிடிப்பு மாலை 4 மணிக்குத்தான் தொடங்கியது. அதனால்தான் வரமுடியவில்லை8221; என்கிறார்.
8221;வெடிகுண்டு முருகேசன் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் தன்னால் வர இயலவில்லை8221; என்று பசுபதிகாரணம் கூறுகிறார்.
என்னதான் நடந்துச்சோ? அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!