Teachers Day: Vijaykanth greets teachers

Posted on Friday 5 September 2008

vijaykanthவிஜயகா‌ந்‌த் ஆ‌சி‌ரிய‌ர் ‌தின வா‌ழ்‌த்து 
 
சென்னை: தமிழ்நாட்டில் கல்வி கடைச்சரக்காக ஆகிவிட்டது. காசு உள்ளவர்கள் தான் படிக்க முடியும் என்ற அவல நிலையை மாற்றி, எல்லோருக்கும் கல்வி கிடைக்கச் செய்யும் உயர்நிலையை அடைய இன்றைய ஆசிரியர்கள் தினத்தில் சூளுரை மேற்கொள்வோம் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள ஆசிரியர் தின வா‌ழ்‌த்து‌ச் செ‌ய்‌தி‌‌யி‌ல்,

‘அடுத்த தலைமுறையை உருவாக்குவது ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது. ஒரு நாட்டின் முன்னேற்றம் கல்வியின் முன்னேற்றத்தை பொருத்தது.

கல்விப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஆசிரியர்கள் மன நிம்மதியோடு பணியாற்ற வேண்டியது அவசியம். அவர்களது வாழ்க்கை நிலைமையும், பணி நிலைமையும் சிறப்பாக அமைய வேண்டும்.

எங்களுக்கு கிடைத்த ஆசிரியர்கள் போல் எவருக்கும் கிடைக்காது என்று மாணவர்கள் பெருமைப்படுவதும், எங்களுக்கு கிடைத்த மாணவர்களைப் போல் யாருக்கும் கிடைப்பது அரிது என்று ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைவதும் தான் கல்விப் பணியின் வெற்றிக்கு அறிகுறி.

தமிழ்நாட்டில் கல்வி கடைச்சரக்காக ஆகிவிட்டது. காசு உள்ளவர்கள் தான் படிக்க முடியும் என்ற அவல நிலையை மாற்றி, எல்லோருக்கும் கல்வி கிடைக்கச் செய்யும் உயர்நிலையை அடைய இன்றைய ஆசிரியர்கள் தினத்தில் சூளுரை மேற்கொள்வோம்.

இந்த நாட்டின் குடியரசு‌த் தலைவராகவே ஆசிரியர் பணியாற்றிய டாக்டர் ராதாகிருஷ்ணன் இருந்தார் என்பதே ஆசிரியர் பணி எவ்வளவு மகத்தானது என்பதைக் காட்ட போதுமானது’ என்று கூ‌றியு‌ள்ளா‌ர். 

admin @ 3:15 am
Filed under: news
Vijaykant fight against power cut

Posted on Tuesday 2 September 2008

Vijaykant‌மி‌ன்வெ‌ட்டு: கோவை‌யி‌ல் 7ஆ‌ம் த‌ே‌தி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் : விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: மி‌ன்வெ‌ட்டை க‌ண்டி‌‌த்து கோவையில் வரு‌ம் 7ஆ‌ம் தேதி எனது தலைமை‌யி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெ‌ளி‌யிட்டுள்ள அறிக்கையில்,

‘தமிழகத்தில் என்றும் இல்லாத அளவிற்கு மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை நகரில் தினம் ஒ‌ன்றரை மணி நேரம், புறநகரங்களில் 3 மணி நேரம், மற்ற மாவட்டங்களில் 5 மணி நேரம் என அதிகாரப்பூர்வமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை 9,567 மெகாவாட் ஆகும். இதில் உற்பத்தியாவது 6,048 மெகாவாட் மட்டுமே என்று அறிகிறோம். பற்றாக்குறை 3,500 மெகாவாட்டுக்கு மேல் உள்ளது. இதை எப்படி ஈடுகட்ட போகிறார்கள் என்பது தெரியவில்லை. கடந்த காலத்தில் ஒரு சிறு அளவே மின்வெட்டு செயலில் இருந்தது. அதை ஜெனரேட்டர்கள் மூலம் சமாளித்தனர்.

ஆனால், இன்று மின்சாரம் தருவதில் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை தனியார் ஜெனரேட்டர்கள் மூலம் சமாளிக்க முடியாது. ஏனெனில் அதற்கும் டீசல் தேவை. அதிலும் பற்றாக்குறை உள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால நலனைக் கருதி இந்த அரசுகள் திட்டங்களை தீட்டவில்லை. இன்றைக்கு மின் உற்பத்தி திட்டங்களை போட்டாலும் பலன் கிடைப்பதற்கு 4 ஆண்டுகளாகும்.

மின்சாரம் இல்லாமல் தமிழ்நாட்டில் எந்த துறையும் இயங்க முடியாது. ஆகவே இன்றைய மின்சார நெருக்கடி தமிழ்நாட்டில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும். தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலத்தை தருவோம் என்று பேசிவிட்டு தமிழக மக்களுக்கு இன்று தி.மு.க. அரசு இருண்ட காலத்தை மட்டுமே தந்திருக்கிறது.

ஆகவே, அரசை கண்டித்து மக்களின் துயரங்களில் பங்குகொள்ளும் வகையில் தே.மு.தி.க.வும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வரும் 7ஆ‌ம் தே‌தி கோவையில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ எ‌ன்று கூறியுள்ளார். 

admin @ 2:04 am
Filed under: news
TNCC chief calls Vijaikanth to join congress alliance

Posted on Friday 29 August 2008

காங்கிரஸ் கூட்டணிக்கு வாங்க!: விஜயகாந்துக்கு தங்கபாலு அழைப்பு
 
செ‌ன்னை‌: காங்கிரஸ் அணிக்கு விஜயகாந்த் வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.‌வி. தங்கபாலு கூ‌றினா‌ர்.
 
செ‌ன்னை‌யி‌ல் நேற்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் பே‌சிய அவ‌ர், நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

தமிழக ஆட்சியில் பங்கு கேட்பீர்களா?

”த‌மிழக‌த்‌தி‌ல் ஆட்சியில் பங்குபெற நாங்களும் ஆசைப்படுகிறோம். ஆனால் கொள்கை ரீதியாக முடிவு எடுக்கவேண்டியது சோனியாகாந்திதான். ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள், தொண்டர்களின் விருப்பத்தை சோனியாகாந்தியிடம் நேரம் வரும்போதெல்லாம் தெரிவிக்கிறோம். அமைச்சரவையில் பங்கேற்க காங்கிரசுக்கும் ஆசை உள்ளது. இருப்பினும், இது குறித்து உரிய நேரத்தில், உரிய முடிவை தமிழக காங்கிரஸ் எடுக்கும்”

உங்கள் கூட்டணி பலம்பெற தே.மு.தி.க. வை அழைப்பீர்களா?

”விஜயகாந்த் என்னுடைய அருமை நண்பர். தமிழகத்தில் மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் இருக்கவேண்டும். எனவே, காங்கிரஸ் அணிக்கு விஜயகாந்த் வர வேண்டும்” என்றார்.

மேலும் தங்கபாலு நேற்று விடுத்த அறிக்கை ஒன்றில்,

‘விசைத்தறியாளர்கள் பிரச்னை தீர்வுக்கு எட்டப்பட்டதன் விளைவாக கடந்த 13 நாட்கள் நீடித்த அவர்களது வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சியை அளிக்கிறது.

விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படும் துணி வகைகளுக்கு நெசவுக் கட்டணத்தை நூறு ‌விழு‌க்காடு உயர்த்த வேண்டுமென்ற விசைத்தறியாளர்களின் கோரிக்கை தொடர்பான பிரச்னையை உடனடியாக தீர்க்க வேண்டுமென்று முதலமைச்சர் கருணாநிதி அறிவுறுத்தியதன் பேரில் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி சங்க நிர்வாகிகளுடன் பேசி உடன்பாடுக்கு கொண்டு வந்துள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியது.

அதன்படி சோமனூர் ரகத்துக்கு 32 ‌சதவிகிதமும், இதர ரகங்களுக்கு 27 ‌சதவிகிதமும் நெசவுக் கட்டணத்தை உயர்த்தி வழங்க ஜவுளி உற்பத்தியாளர்கள் சம்மதித்துள்ளனர். அந்த உடன்பாட்டை விசைத்தறியாளர்கள் வரவேற்று வேலை நிறுத்தத்தைக் கைவிட்டுள்ளனர்.

எனவே அத்தொழிலில் இருந்து தேக்கநிலை நீக்கப்பட்டு முன்னேற்றம் காண வழிவகுக்கப்பட்டுள்ளது. இந்த சுமூகத் தீர்வுக்கு நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் கருணாநிதி, உடன்பாடு கண்ட அமைச்சர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறியாளர்களுக்கும் எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர். 

admin @ 11:00 pm
Filed under: news
Power cut minister Arcot Veerasamy, Vijaikanth says

Posted on Wednesday 27 August 2008

vijayakanth மின்வெட்டு அமைச்சர் ஆற்காடு வீராசாமி: விஜயகாந்த் தாக்கு

சென்னை: மின்வெட்டுக்கு என்றே அமைச்சராக ஆற்காடு வீராசாமி இருக்கிறார் என்று விஜயகாந்த் கூறினார்.

சென்னையி‌ல் நேற்று நடந்த கட்சிப் பிரமுகரின் திருமண விழாவில் கலந்துகொண்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசுகையில்,

”விலைவாசியைக் குறைக்கச் சொன்னால், ‘நீங்களே யோசனை கூறுங்கள்’ என்று கட்டுரை எழுதுகிறார் கருணாநிதி. மாற்றி, மாற்றி பேசுவதில் அவர் வல்லவர்.

தமிழ்நாட்டில் கடந்த 4 மாதங்களாக மின்வெட்டு உள்ளது. மின்வெட்டுக்காகவே அமைச்சராக ஆற்காடு வீராசாமி உள்ளார்.

என் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடச் சொன்னால் கிண்டல் செய்கிறார்கள். மற்றவர்களைப் போல் நான் ஒன்றும் எடைக்கு எடை தங்கம், காசு கொடுங்கள் என்று கேட்கவில்லை. என் பிறந்த நாளை முன்னிட்டு ஒனறரை கோடி ரூபாய் செலவில் கம்ப்யூட்டர்கள் கொடுத்துள்ளேன்.

மலேசியாவில் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் நேர்மையாக இருப்பதால்தான் அந்த நாடு முன்னேறுகிறது. இங்கு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக அமைச்சர்கள் எல்லாம் இப்போது கல்லூரிகளைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எங்கே மக்களுக்கு நன்மை செய்யப்போகிறார்கள்?” என்றார்.

admin @ 10:25 pm
Filed under: news
Asking share in govt is not wrong: GK Vasan

Posted on Monday 25 August 2008

gkvasanஅமைச்சர் பதவி கேட்பது தவறில்லை:  ஜி.கே.வாசன்

மதுரை: தமிழக அமைச்சரவையில் காங்கிரசார் பங்குக் கேட்பது தவறில்லை என்று ஜி.கே.வாசன் கூறினார்.

மத்திய புள்ளியியல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் மதுரையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

தமிழக கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் கூட்டணிகள் விலகியுள்ளனவே?

”அணுசக்தி ஒப்பந்தம் நாட்டின் வருங்கால வளர்ச்சிக்கு தேவையான ஒன்று. இதனை இடதுசாரிகள் ஆதரிக்கவில்லை. அதனால் அவர்கள் மக்கள் நம்பிக்கையை இழப்பார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் சோனியாவின் தலைமை, மன்மோகன் சிங் அரசின் சாதனை, மாநிலங்களில் கூட்டணி கட்சி ஆட்சிகளின் சாதனை ஆகியவை வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.”

உங்கள் கூட்டணியில் தே.மு.தி.க. சேர வாய்ப்புள்ளதா?

”காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை பலப்படுத்தவும், பணி தொடரவும், நாட்டு நலன் கருதி ஆதரிப்போரை வரவேற்கிறோம். ஒத்தக் கருத்துடையோருக்குக் கூட்டணியின் கதவுகள் திறந்தே இருக்கிறது.”

தமிழகத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் கலைக்கப்பட்டுள்ளதாக தங்கபாலு கூறியுள்ளாரே?

”பத்திரிகைகள் மூலம் இதற்கு பதில் சொல்வதற்கில்லை.”

தமிழக ஆட்சியில் காங்கிரசுக்கு அமைச்சர் பதவி கேட்கவேண்டும் என கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூறுகிறார்களாமே?

”காங்கிரசின் வருங்கால வளர்ச்சிக்கு கருத்துக்கள் கூறுவதில் தவறில்லை. இதை முடிவு செய்யவேண்டியது சோனியா காந்திதான். அவருடைய முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு செயல்படுவோம்” என்றார்.

admin @ 1:39 am
Filed under: news
Vijaiganth ask good decision on Kovai weavers strike

Posted on Friday 22 August 2008

vijayakanthவிசைத்தறி தொழிலாளர் பிரச்னை: உடனடி தீர்வு காண விஜயகாந்த் வேண்டுகோள்  
 
சென்னை: கோவை மாவட்ட விசைத்தறி தொழிலாளர்க‌ள் பிரச்னை‌க்கு தமிழக அரசு உடனடியாக நல்ல தீர்வை காணவேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மூலப்பொருட்கள், இயந்திரங்களுக்கு தேவைப்படும் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளதாலும், இதர பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாலும், மின்சாரத் தடையாலும் இத்தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இவர்கள் ஏற்கனவே பெற்ற கூலியும் மீட்டருக்கு 20 பைசா குறைந்துள்ளது. இன்றைய விலைவாசி உயர்ந்துள்ள சூழ்நிலையில் தொழிலையும் நடத்த முடியவில்லை. தங்களை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கும் வேலை தர முடியவில்லை. ஆகவே அவர்கள் கூலி உயர்வு கேட்டு போராடி வருகின்றனர்.

தற்போது தமிழக அரசு அமைச்சர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை என்பது கவலைக்குரியதாகும். விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள், வேலை இழந்து வாடும் விசைத்தறி தொழிலாளர்கள் ஆகிய முத்தரப்பினர் நியாயங்களையும் உணர்ந்து ஒரு நல்ல தீர்வை தமிழக அரசு உடனடியாக காண வேண்டும்’ எ‌ன்று கூறியு‌ள்ளா‌ர். 

admin @ 11:58 pm
Filed under: news
War of words; Vijaikanth attacks Jaya

Posted on Monday 18 August 2008

தமிழ்நாட்டை பீடித்துள்ள பெருவியாதி ஜெயலலிதா!: விஜயகாந்த்

jayalalithaa is the big disease that has gripped tamilnadu, vijayakanth says

சென்னை: நாங்கள் வியாதிக்காரர்கள் என்றால் ஜெயலலிதா பெருவியாதிக்காரரா? தமிழ்நாட்டை பீடித்துள்ள பெருவியாதி ஜெயலலிதாதான் என விஜயகாந்த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

கடந்த வாரத்தில், சிரஞ்சீவி கட்சி ஆரம்பிப்பது குறித்த கேள்விக்கு ஜெயலலிதா பதிலளிக்கையில், தமிழ்நாட்டில் இருக்கும் வியாதி ஆந்திராவிலும் பரவிவிட்டது என்றார்.

சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திடம் ஜெயலலிதாவின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அவர் கூறுகையில், ”நாங்கள் வியாதிக்காரர்கள் என்றால் ஜெயலலிதா பெருவியாதிக்காரரா?” எனக் கேட்டார்.  ”தமிழ்நாட்டை பீடித்துள்ள பெருவியாதி ஜெயலலிதாதான்” என்றும் அவர் கூறினார்.

மேலும் விஜயகாந்தின் பேட்டி வருமாறு:

சேது சமுத்திரத் திட்டம் குறித்து?

சேது சமுத்திரத் திட்டம் முழுக்க முழுக்க பிரச்னைக்குள்ளானதற்குக் காரணம் கருணாநிதிதான். இதுவரை சுமார் ரூ.2500 கோடிக்கு மேல் செலவு  செய்துள்ள நிலையில் மாற்றுப் பாதையில் அமைந்தாலும் பரவாயில்லை என்று கூறினால் செலவு செய்த தொகை யாருடைய பணம்? மக்களுடைய வரிப் பணம் அல்லவா?

தி.மு.க. அமைச்சர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வருகின்றன. ஈரோட்டைச் சேர்ந்த ஒருவரின் துணிச்சலைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் மெல்ல மெல்ல புகார் அளிக்க வருவார்கள். அப்போது தி.மு.க.வின் ஒட்டுமொத்த சுயரூபம் தெரியவரும்.

குளச்சலில் கூட்டம் ஒன்றில் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘இந்தியாவின் வளர்ச்சி 8.5 சதவிகிதம். தமிழகத்தின் வளர்சச்சி 10.2 சதவிகிதம்’ என்று பேசியிருக்கிறார். அது எப்படி இந்தியாவின் வளர்ச்சியை விட தமிழகத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்?

ஒகேனக்கல் பிரச்னையில் ரஜினி முதலில் பேசியது, பின்னர் வருத்தம் தெரிவித்தது பற்றி?

ஒகேனக்கல் விவகாரத்தில் ரஜினிகாந்தை அந்த மேடையில் அமரச்சொன்னது யார்? அதனால் ஆதாயம் தேட நினைத்தது யார்? இப்போது பிரச்னை என்று வந்ததும் எதுவும் பேசாமல் அமைதி காப்பது யார்? என்பது மக்களுக்குத் தெரியும். அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை.

கூட்டணிக்காக கதவுகள் திறந்திருக்கிறது என்று ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் பேச முடியும். எதற்கு அவசரம்? கூட்டணி பெரிதானால் அது ஊழலுக்குத்தான் வழி வகுக்கும். கூட்டணி இல்லாமல் காமராஜர் நல்லாட்சி கொடுக்கவில்லையா?

ஒரு தனி மனிதனால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என முழுமையாக நான் நம்புகிறேன். இதற்கு உதாரணம் காந்தி, புத்தர். இந்தச் சமுதாயம் மேன்மை அடையும் வகையில் நல்லதொரு ஆட்சியை என்னால் தர முடியும். ஆனால் அதை ஆட்சிக்கு வந்த ஓரிரு நாட்களில் செய்துவிட முடியாது. மூன்று நான்கு ஆண்டுகளில்தான் முடியும்.

admin @ 9:57 pm
Filed under: news
Katchatheevu: Vijayakanth questions Karunanidhi

Posted on Sunday 20 July 2008

கச்சத்தீவை கொடுத்தபோது நடந்தது என்ன?: கருணாநிதிக்கு விஜயகாந்த் கேள்வி!

சென்னை: 1974ஆம் ஆண்டில் கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தபோது உண்மையில் நடந்தது என்று முதல்வர் கருணாநிதிக்கு கேள்வி எழுப்பியுள்ளார் விஜயகாந்த்.

இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘கச்சத்தீவுப் பிரச்னையில் எல்லோரும் ஒற்றுமையாக குரல்கொடுப்போம் என்று முதல்வர் பேசியுள்ளார். ஆனால் என்னை பைத்தியக்காரன் என்றும், எனது விலாசத்தை காட்ட முயல்வதாகவும், உடை அணியாத நாடகம் நடத்துவதாகவும் அமைச்சர்கள் வசைபாடுகிறார்கள்.

கச்சத்தீவு விஷயத்தில் விளக்கம் கிடைக்காதது மட்டுமல்ல, தவறான தகவல்களையும் முதல்வர் அளித்துள்ளார். கடந்த 19ஆம் தேதி கருணாநிதி கூறுகையில், 1974ஆம் ஆண்டு ஜூன் 27இல் திடீரென்று தகவல் வந்ததாகவும், எந்தவிதமான சூசகத் தகவலும் தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவிக்கவில்லை என்றார். ஆனால் அவரே 18ஆம் தேதி அளித்த பேட்டியில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை சமாதானம் செய்து, கச்சத்தீவிலே நமக்குள்ள உரிமைக்கெல்லாம் வழிவகுத்து விதிகள் செய்யப்பட்டன என்று கூறியுள்ளார்.இதில் எது உண்மை என்பதை அவர் விளக்கவேண்டும்.

பேராசிரியர் சூரியநாராயணன் எழுதிய பாக் ஜலசந்தியில் மீன்பிடி தகராறுகள் என்ற புத்தகத்தில், இந்திரா காந்தி, அன்றைய முதல்வர் கருணாநிதியை தனது நிலையை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும், அதில் கருணாநிதி மகிழ்ச்சி அடையாவிட்டாலும் மோதல் போக்கை அவர் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் செல்வாக்கால் தனக்கு ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து தனது ஆட்சியைக் காப்பாற்றவும் இந்திரா காந்தியின் ஆதரவு அவருக்கு தேவைப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

கச்சத்தீவை இலங்கைக்கு அளித்ததில் எந்தவிதத்திலும் தான் உடந்தையாக இல்லை என்று கூறும் கருணாநிதி, தன்னை உதாசீனப்படுத்திய மத்திய அரசை எதிர்த்து அன்று ஒரு உண்ணாவிரதம் கூட இருக்க வில்லையே ஏன்?

கருணாநிதியின் ரிமோட் கண்ட்ரோலில் மத்திய அரசு இயங்குகிறது என்று அமைச்சரே பேசியிருக்கிறார். அப்படியானால் அதை இயக்கி  கச்சச்தீவை மீட்டிருக்கலாம். அதை விடுத்து தி.மு.க. உண்ணாவிரதம் இருப்பது மக்களை ஏமாற்றும் நாடகம் அல்லாமல் வேறென்ன?

என்னை பைத்தியக்காரன் என்கிறார்கள். பைத்தியக்காரர்களில் பலவகை உண்டு. சிலருக்கு பணப்பைத்தியம். சிலருக்கு பதவி பைத்தியம். இன்னும் சிலருக்கோ செங்கோல் பைத்தியம். ஆனால், எனக்கோ ஏழை மக்கள் மீது பைத்தியம். ஆகவே என்னை அவ்வாறு அழைப்பதில் எனக்கு ஒன்றும ஆட்சேபனை  இல்லை. பலருக்கு விலாசம் தேடித்தரும் நிலையிலேயே என்னை மக்கள் வைத்துள்ளார்கள். ஆனால், பதவி போனால் பலர் விலாசம் இல்லாமல் போய்விடுவார்கள்’ என்று கூறியுள்ளார்.

admin @ 11:30 pm
Filed under: news
Vijayakanth vs Ponmudi

Posted on Thursday 10 July 2008

மனைவியின் அக்காள் சொத்து, எப்படி என் சொத்து?:
பொன்முடிக்கு விஜயகாந்த் கேள்வி!
 

சென்னை: என்னுடைய சொத்துக்கும் குடும்ப சொத்துக்கும் உள்ள வேறுபாடு அமைச்சர் பொன்முடிக்கு தெரியவில்லை. என் மனைவியின் அக்காள் சொத்து எப்படி என் சொத்தாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.

இது தொடர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அற‌ி‌க்கை‌யி‌ல்,

‘அரசு கல்லூரிகளும், அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகளும் அரசுப் பணத்தில் வளர்ந்துள்ளன. அவற்றை தனியார் பல்கலைக்கழகமாக மாற்றினால் அது அரசு சொத்தை தனியாருக்கு விற்பது ஆகாதா? அரசு நிறுவனங்களை தனியாருக்குத் தந்து ஒருமை பல்கலைக்கழகம் உருவாக்குவது தவறான முன்மாதிரியாகும்.

பல்கலைக்கழகங்களே கூடாது என்று சொல்லவில்லை. எத்தகைய முறையில் எப்படிப்பட்ட பல்கலைக்கழகங்கள் அமைய வேண்டும் என்பதில் தான் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது. நான் எழுப்பிய சந்தேகங்களுக்கு பதில் அளிக்காமல் என்னை தனிப்பட்ட முறையில் அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.

புது‌ச்சே‌ரியில் இருக்கும் மருத்துவக் கல்லூரிக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனது மனைவியின் அக்காள் நடத்தும் நிறுவனம் என்றும், ஆகவே சட்டப்படி பார்க்கும் போது அது, விஜயகாந்த்தின் குடும்பக் கல்லூரி என்றும் அமைச்சர் சொல்கிறார். குடும்ப சொத்துக்கும், உறவினர்கள் சொத்துக்கும் அமைச்சருக்கு வேறுபாடு தெரிய வேண்டாமா? எனது மனைவியின் அக்காள் சொத்து, எப்படி என் சொத்து ஆகும்?

இணைப் பேராசிரியராகப் பணியாற்றிய போது, சாதாரண நிலையில் இருந்த பொன்முடி, இன்று வியக்கத்தக்க அளவுக்கு கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளை அவரும், அவருடைய உறவினர்களும் பெற்றுள்ள மர்மம் என்ன?

எனது மனைவி, பிள்ளைகள், மாமியார் பெயரில் அறக்கட்டளைகள் உள்ளன என்று உயர்கல்வி அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். அவரது மனைவி பெயரில் ஏராளமான சொத்துகள் உள்ளன. அவை எப்படி வந்தது? நான் எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அதை விட்டு விட்டு வேண்டும் என்றே என்மீது அவதூறு சுமத்துகிறார்.

இப்போது அவரே புதுச்சேரி மருத்துவ கல்லூரி என்னுடையது அல்ல என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார். ஆகவே மேற்கொண்டு என்ன விளக்கம் தருவதற்கு மேடை வேண்டும் என்கிறார். மேடையைக் கண்டு அஞ்சுபவன் அல்ல நான்” என்று விஜயகாந்த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

admin @ 1:29 am
Filed under: news
Ponmudi vs Vijayakanth

Posted on Thursday 10 July 2008

ஒரே மேடை‌யி‌ல் ‌விவா‌தி‌க்க நான் தயார்… விஜயகா‌ந்‌த் தயாரா?:‌
அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடி

சென்னை: அரசு கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும் விவகாரம் குறித்து விஜயகாந்த்துடன் நான் ஒரே மேடையில் விவாதிக்கத் தயார்… அவர் தயாரா? எ‌ன்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சவால் விடுத்துள்ளார்.

சென்னை தலைமை செயலக‌த்‌தி‌ல் அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல்,

”அரசுக்கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படுவது தொடர்பாக விஜயகாந்த் கடந்த 5ந் தேதி கருத்து தெரிவித்து இரு‌க்‌கிறா‌‌ர். அரசு கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாறுவது வேறு, தனியார் நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் என்பது வேறு. தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லை.

ஆனால் அரசு கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாறினால் அவை தமிழக அரசின் முழு கட்டுப் பாட்டில் இயங்கும். இதனால் இடஒதுக்கீட்டின்படி அங்கு மாணவர் சேர்க்கை நடைபெறும். இதனால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

புதுச்சேரியில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி விஜயகாந்த் குடும்பத்தை சேர்ந்த மருத்துவக் கல்லூரிதான். இதன் நிறுவனராக விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின் சகோதரி ராதா உ‌ள்ளா‌ர். க‌ல்லூ‌ரி தாளாளராக ராதாவின் கணவர் ராமச்சந்திரா உ‌ள்ளா‌ர்.

இ‌ந்தக் க‌ல்லூ‌ரி‌யி‌ல் புதுவை அரசு நிர்ணயித்தக் கட்டணமான 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக 3 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலித்து இருக்கிறார்கள். இந்தக் கூடுதல் கட்டணத்தை திரும்ப வழங்கக்கோரி புதுவை அரசு மற்றும் புதுவை பெற்றோர் ஆசிரியர் கழகம் வலியுறுத்தியும் கல்லூரி நிர்வாகம் திரும்ப வழங்கவில்லை.

விஜயகாந்தின் பொறியியல் கல்லூரி உள்பட 33 பொறியியல் கல்லூரிகளில் தவறு நடப்பதாக தமிழக அரசு யு.ஜி.சி.யிடம் தெரிவித்து அதன் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருக்கிறோம்.

அரசு கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும் விவகாரம் குறித்து விஜயகாந்த்துடன் நான் ஒரே மேடையில் விவாதிக்கத் தயார். அவர் தயாரா? அவர் கேட்கும் எந்த கேள்விகளுக்கும் நான் பதிலளிக்க தயாராக உள்ளேன். மேடை, நேரம், இடம் ஆகியவற்றை விஜயகாந்தே நிர்ணயிக்கட்டும்” என்று கூறினார்.

admin @ 12:31 am
Filed under: news