Liquor free Tamilnadu: Ramadoss challange

Posted on Tuesday 26 August 2008

Ramadoss challange to make liquor free Tamilnaduபா.ம.க. ஆட்சிக்கு வந்தால் 2 மாதத்தில் மதுவை ஒழிப்போம்!: ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டில் பா.ம.க. ஆட்சி அமைந்தால் இரண்டே மாதத்தில் மதுவை ஒழிப்போம் எனறு ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கான மாற்று மது ஒழிப்பு கொள்கையை நேற்று வெளியிட்டார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.
 
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

”தமிழகத்தில 23 ஆண்டுகளாக இருந்த மதுவிலக்கை 1971ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதிதான் விலக்கினார். இன்றையச் சூழலில் பூரண மதுவிலக்கு உடனடியாகச் சாத்தியமில்லை. ஆனால் இந்த இலக்கை அடைய படிப்படியாக முயற்சி செய்யவேண்டு்ம்.

கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது. அதற்காகத்தான் மதுவிலக்கை தளர்த்தி இருக்கிறோம். மதுக்கடைகளை நடத்தி வருகிறோம் என்று அரசு சொல்வதை ஏற்க முடியாது.

கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும், அரசின் வருமானத்தைப் பெருக்கவும் மது விற்பனையை அதிகரிப்பது மது திணிப்பாகும். மது ஒழிப்பை வலியுறுத்தி இதுவரை 8 மாநாடு நடத்தி உளளோம். தொடர்ந்து 31 மாவட்டங்களில் மது ஒழிப்பு மாநாடுகளை நடத்துவோம். முடிவாக டாஸ்மாக் கடைகளை மூடும் போராட்டம் நடத்துவோம்.

பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த, அதனால் ஏற்படு்ம் வருமான இழப்பை சரிகட்ட மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும். தனி நபர்  கொண்டுச் செல்லும் ரூ.2 ஆயிரம் கோடியை அரசு கஜானாவிற்குக் கொண்டுவரவேண்டும். அதுபோல விற்பனை வரியை ஒழுங்காக வசூலித்தால் ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடி கிடைக்கும். கிரானைட் கொள்ளையையும் தடுக்கவேண்டும்.

பனைத் தொழிலாளர்களின் விற்பனைக் கொள்கையை நாங்கள் ஆதரிக்கவில்லை. அதற்கு பதிலாக, பதநீரை இறக்கி விற்கவேண்டும்.

2011இல் பா.ம.க. ஆட்சி அமைந்தால் 2, 3 மாதங்களில் ஒரு துளி மதுகூட இல்லாமல் ஒழிப்போம். இல்லாவிட்டால் ஆட்சியை விட்டுப் போவோம்” என்றவர்,

”புதுச்சேரியைவிட தமிழ்நாட்டில்தான் மது குடிப்போர் அதிகம். புதுச்சேரியிலும் மதுவிலக்கைக் கொண்டுவரவேண்டும்.

தே‌ர்த‌ல் நேர‌த்‌தி‌ல் கூ‌ட்ட‌ணி ப‌ற்‌றி அ‌றி‌வி‌க்க‌ப்படு‌ம். எங்களது ‌நிலை‌யி‌ல் எ‌ந்த‌வித மா‌ற்ற‌மு‌ம்‌ இ‌ல்லை” என்றார்.
 

admin @ 10:01 pm
Filed under: news
Strike strikes India tommorow

Posted on Tuesday 19 August 2008

நாளை நாடு முழுவதும் வேலைநிறுத்தம்: 
தமிழ்நாட்டில் பேருந்து, லாரி, ஆட்டோக்கள் ஓடாது

சென்னை: மத்திய அரசைக் கண்டித்து நாளை (20ஆம் தேதி) நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது தமிழ்நாட்டில் பேருந்து, லாரி, ஆட்டோக்கள் ஓடாது என்று சி.ஐ..டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து சி.ஐ..டியூ., மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தர்ராஜன், ஏ.ஐ.டி.யூ.சி., மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ். தியாகராஜன் ஆகியோர் கூட்டாக சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில்,

”விலை உயர்வைக் கட்டுப்படுத்துதல், பொதுவிநியோக முறையை விரிவுபடுத்துதல், குறைந்தபட்ச கூலி, வேலை நேரம், சமூகப் பாதுகாப்பு, பணியிட பாதுகாப்பு போன்ற தொழிலாளர் நலச் சட்டங்களை கடுமையாக அமல்படுத்துதல், 6ஆவது சம்பள கமிஷனில் உள்ள பாதகமான அம்சங்களை நீக்குதல், வாராக்கடன்களை வசூலித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் சி.ஐ..டியூ., ஏ.ஐ.டி.யூ.சி., உள்ளிட்ட 40 சங்கங்கள் பங்கேற்கின்றன. இந்தப் போராட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையும், த. வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவையும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இப்போராட்டத்தில் நாடு முழுக்க 7 கோடி பேர் கலந்துகொள்கின்றனர். தமிழ்நாட்டில் 70 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள். வேலைநிறுத்தம் காரணமாக பேருந்து, லாரி, ஆட்டோக்கள் ஓடாது.

மாநிலத் தலைநகர் மட்டுமல்லாது மாவட்ட, வட்டார, ஒன்றிய அளவில், மொத்தம் 120 இடங்களில் சாலை மற்றும் இரயில் மறியல் போராட்டம் நடைபெறும். சென்னையில் 80 ஆயிரம் ஆட்டோக்கள் உள்பட தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடாது.

சென்னையில் திருவொற்றியூர், மணலி, ஆவடி, அம்பத்தூர், குறளகம், பனகல் மாளிகை ஆகிய 6 இடங்களில் சாலை மறியலும், ஆவடியில் இரயில் மறியலும் நடைபெறும். இதுபோல மாநிலம் எங்கும் நடக்கும்.

இதற்கு பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்” என்றனர்.

admin @ 12:03 am
Filed under: news
Terrorists says, plan to attack Tamilnadu twice

Posted on Tuesday 29 July 2008

தமிழகத்தில் 2 கட்ட தாக்குதலுக்குச் சதி!: சென்னை, நெல்லையில் பிடிபட்ட தீவிரவாதிகள் வாக்குமூலம்

சென்னை: தமிழ்நாட்டில் 2 கட்டமாகத் தாக்குதல் நடத்தத் திட்டம் தீட்டியிருந்ததாக பிடிபட்ட தீவிரவாதிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

பெங்களூரு, ஆமதாபாத் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் நடந்த தொடர் வெடிகுண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, முதல்வர் கருணாநிதி ஆணையின்படி தமிழகத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

இந்தச்சோதனையில் கடந்த சனிக்கிழமையன்று நெல்லையில் அப்துல் கபூர் என்கிற தீவிரவாதியும், சென்னையில் ஹீராவும் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உதவியதாக நெல்லையைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் அன்வர் பாஷாவும் கைதானார்.

அப்துல் கபூரிடன் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை அண்ணாமேம்பாலம் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றை வெடிகுண்டு வைத்து தகர்க்க சதித்திட்டம் தீட்டப்பட்டதாக தெரிய வந்தது.

இதேப்போல் ஹீராவிடம் நடத்தப்பட்ட விசாரணயில், ஆகஸ்ட் 1ஆம் தேதி மற்றும் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று சென்னை மற்றும் நெல்லையில் 2 கட்டமாக  குண்டு வைத்து  தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தோம். அப்துல் கபூர் ஏற்கனவே எங்கள் ‘இறைவன் ஒருவனே’ இயக்கத்தில் சேர்ந்து வெடிகுண்டு தயாரிப்பை கற்றுத் தேர்ந்தவர். அதனால் அவரை வைத்து ஆகஸ்ட் 1இல் முதல்கட்டத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்தோம்.

29ஆம் தேதி எல்லோரும் ஒனறு கூடி பேச இருந்தோம். ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல்கட்டமாக சென்னை அண்ணா மேம்பாலம் அல்லது சென்னை சென்ரல் ரயில் நிலையத்தை குண்டு வைத்து தகர்க்க நினைத்திருந்தோம். 2ஆம் கட்டமாக ஆகஸ்ட் 15இல் சென்னை மற்றும் நெல்லையில் குண்டு வைக்க திட்டமிட்டிருந்தோம். இந்தத் திட்டங்கள் எல்லாம் புழல் சிறையில் உருவானவை என்று கூறியுள்ளார்.

இந்த குண்டுவெடிப்பு சதியின் பின்னணியில் இருப்பவர்களை தமிழக காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது.

admin @ 9:55 pm
Filed under: news
Plan to attack Anna flyover: Three held

Posted on Monday 28 July 2008

சென்னை அண்ணா மேம்பாலத்தை, 3 இரயில்களை தகர்க்க சதி:
சென்னையில் 3 தீவிரவாதிகள் கைது

gemini-anna-flyover.jpg

சென்னை: தமிழ்நாட்டில் வெடிகுண்டு வைக்க சதி செய்ததாக மொத்தம் 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இதனால் தமிழ்நாட்டுக்கு நேரவிருந்த மிகப்பெரிய ஆபத்து முறியடிக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கருதுகின்றனர்.

ஆயினும் தமிழகம் முழுக்க எச்சரிக்கை உணர்வுடன்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது தமிழக காவல்துறை.

பெங்களூரு, அகமதாபாத் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து தீவிர தீவிரவாதிகள் வேட்டையில் இறங்கிய காவல்துறை நெல்லையில் வைத்து அப்துல் கபூர் என்ற தீவிரவாதியை நேற்று முன்தினம் கைது செய்தது. அவரிடம் இருந்து வெடிகுண்டு தயாரிப்பிற்கான உதிரிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், கபூர் தெரிவித்த தகவல்படி திருநெல்வேலியைச் சேர்ந்த ஹீரா என்கிற செய்யது காசிம்(27), பழனியைச் சேர்ந்த உமர் (24), மண்ணடியைச் சேர்ந்த காதர் (25) ஆகிய மூவரையும் சென்னையில் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். மண்ணடியில் இவர்கள் சுற்றிவளைக்கப்பட்டனர்.

இந்தச் சதி காரணமாக தெளபீக் உள்ளிட்ட சிலரை காவல்துறை தேடிவருகின்றது.

தலைமறைவாக இருக்கும் தெளபீக்தான் இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டதாக காவல்துறை கருதுகிறது. கூட்டாளிகள் மாட்டிக்கொண்டதையடுத்து அவன் வெளிநாட்டுக்கு தப்பிக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

பிடிபட்ட தீவிரவாதிகளிடம், தீவிரமாக விசாரணை நடத்தியதில் ஆகஸ்டு 15க்கு முன்பாக சென்னை அண்ணா மேம்பாலத்தை குண்டுவைத்து தகர்க்கவும், சுதந்திர தினத்தன்று சென்னையில் இருந்து புறப்படும் மூன்று ரயில்களை தகர்க்கவும் சதித்திட்டம் தீட்டியிருந்ததாக தெரியவந்துள்ளது.

சென்னை மற்றும் தமிழகம் முழுக்க இவர்களின் கூட்டாளிகளை தேடுவதில், வெடிபொருள்களை கண்டறிவதில் தீவிரமாக இறங்கியுள்ளது தமிழக காவல்துறை.

admin @ 9:07 pm
Filed under: news
Two mega Thermal power stations in TN: CM

Posted on Thursday 24 July 2008

2 மெகா மின்திட்டங்கள்: தில்லி குழு 29 இல் வருகை: முதல்வர் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் ரூ.32 ஆயிரம் கோடி செலவில் 2 அனல்மின் நிலையங்களை மத்திய அரசு அமைக்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

முதல்வர் கருணாநிதி டெல்லியில் இருந்து நேற்று இரவு 8 மணிக்கு சென்னை திரும்பினார். பின்னர், அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பேட்டி விவரம் வருமாறு:

தமிழகத்திற்கு மத்திய அரசு தரும் 100 மெகாவாட் மின்சாரம் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும்?

நாம் கேட்டது நாளொன்றுக்கு 300 மெகாவாட். மற்ற மாநிலங்களில் இதைவிட அதிகமாக மின்சாரப் பற்றாக்குறை இருப்பதால் ஓரளவுதான் தர இயலும் என்று பிரதமர் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து எங்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் ஷிண்டே, முதல்கட்டமாக 30 நாட்களுக்கு நாளொன்றுக்கு 100 மெகாவாட் மின்சாரம் தருவதாக உறுதியளித்தார்.

தமிழகத்தில் நிலவும் மின்சாரப் பற்றாக்குறை எப்போது நீங்கும்?

மத்திய அரசுடன் பேசியதில் 2 அல்ட்ரா மின்திட்டங்களை ரூ. 32 ஆயிரம் கோடியில் தமிழ்நாட்டில் தொடங்க முடிவு செய்துள்ளார்கள். அதில் ஒன்று செய்யூரிலும் மற்றொன்று மரக்காணம் அல்லது கடலூரில் அமையும். எந்த இடம் என்பதை டெல்லியில் இருந்து 29 ஆம் தேதி வரும் குழு ஆய்வு செய்து அறிவிக்கும். இந்த 2 திட்டங்கள் மூலம் 8000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இந்த மின்நிலையங்களை மத்திய அரசே அதன் செலவில் அமைக்கவேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசுக்கு எதிராக இடதுசாரிகள் நாடு முழுவதும் பிரசாரம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறதே! இதில் தி.முக. வின் நிலை என்ன?

எங்கள் குழுவைக் கூட்டி முடிவு செய்து அறிவிப்போம்.

காங்கிரசை அழிக்க நினைக்கும் இடதுசாரிகள் தங்கள் கூட்டணணியில் தொடருவது கூட்டணி தர்மமா?

தமிழக அரசியல் வரலாற்றை, இந்திய அரசியல் வரலாற்றை புரட்டிப்பார்த்தால், மாநிலத்திற்கு மாநிலம் இதுபோன்ற பிரச்னைகளில் கொள்கை நடைமுறைகளை  மாற்றிக்கொண்ட கட்சிகளின் பெயர்கள் உங்கள் நினைவுக்கு வரும்.

கேரளாவில் மற்ற மாநில மீனவர்கள் மீன் பிடிக்கத் தடை விதிக்க சட்டம் வருகிறதாமே?

ஒவ்வொரு மாநிலமும் இப்படி சட்டம் கொண்டு வந்தால் என்னாவது?

மூன்றாவது அணி பற்றி இடதுசாரிகள் தங்களுடன் பேச வந்தால்?

நான் 4ஆவது அணி பற்றி பேசுவேன் என்று பதிலளித்தார் தமிழக முதல்வர் கருணாநிதி.

admin @ 9:10 pm
Filed under: news
Official powercut in Tamilnadu from 21st july!

Posted on Friday 18 July 2008

11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் மின்சார வெட்டு அமல்!:
தினமும் இரண்டு மணி நேரம் கட்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் மின்சார வெட்டு அமலாகிறது.

தமிழகத்தில் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க வரும் 21ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் மின்வெட்டு என்று அறிவித்திருக்கிறார் தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி.

சென்னை உள்பட தமிழகம் எங்கும் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்கிறது. மின்வெட்டை சீராக்கச் சொல்லி ஆங்காங்கே பொதுமக்களும், தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் மின் பற்றாக்குறையைச் சமாளிப்பது குறித்து தொழிலதிபர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை செய்தார் ஆற்காடு வீராசாமி.

கூட்டம் முடிந்ததும் நிருபர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில்,

”தினசரி ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. காற்றாலை கைகொடுக்கவில்லை. மழையின்மையால் நீர் மின்சாரமும் கிடைக்கவில்லை. மத்திய தொகுப்பில் இருந்தும் 60 சதவிகிதம் தான் மின்சாரம் கிடைக்கிறது.

தமிழகத்தை 6 மண்டலங்களாகப் பிரித்து, அந்தந்த மண்டலங்களுக்குள் வரும் தொழிற்சாலைகளுக்கு வாரத்திற்கு ஒருநாள் விடுமுறை விடப்படுகிறது. இப்படி தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடப்படுவதால் 375-400 மெகாவாட், கேப்டிவ் பவர் மூலம் 500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.

மேலும் மின்சாரப் பற்றாக்குறையைச் சமாளிக்க தமிழகம் முழுவதும் வரும் 21ஆம் தேதி முதல் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.  சென்னை தவிர மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தினமும் 2 மணிநேரம் மின்தடை ஏற்படுத்தப்படும். இதனால் 300 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.

சென்னையை 8 பகுதிகளாகப் பிரித்து ஒரு பகுதியில் 1 மணிநேரம் வீதம் மின்தடை அமல் செய்யப்படும்.(அதாவது 8 மணி நேரம் மின்சாரம் மிச்சம்)

மாலை 6 மணிமுதல் இரவு பத்துமணிவரை தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் மின்தடை ஏற்படாது. குடிநீர், மருத்துவமனைகள், பால் விநியோகம் ஆகியவற்றுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது” என்றார்.

admin @ 9:03 pm
Filed under: news
Power cuts: 20,000 small industries closed shutters in Kovai

Posted on Wednesday 16 July 2008

கோவையில் மின்வெட்டை கண்டித்து 20 ஆயிரம் நிறுவனங்கள் மூடல்!:
மறியலில் ஈடுபட்ட 3 ஆயிரம் பேர் கைது

கோவை: தொடர்ச்சியான மின்வெட்டைக் கண்டித்து கோவையில் 20 ஆயிரம் குறுந்தொழில் கூடங்கள் நேற்று மூடப்பட்டன . மறியலில் ஈடுபட்ட 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை  மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும மேற்பட்ட குறுந்தொழில் கூடங்கள் உள்ளன. தொடர்ச்சியான மின்வெட்டுக் காரணமாக இந்நிறுவனங்களில் உற்பத்தி பாதித்தது. சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என கோரி இந்த நிறுவனங்கள் நேற்று மூடப்பட்டன. தொழிலாளர்களும் வேலைக்குச் செல்லவில்லை. இதனால் ரூ.50 கோடிக்கு மேல் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு ஊரக தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (டாக்ட்) சார்பில், காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் முன்பாக மறியலில் ஈடுபட்டனர்.

இந்த மறியலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து டாக்ட் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறுகையில்,

”தமிழ்நாடு முழுவதும் குறுந்தொழில்களை நம்பி 56 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். தினசரி 8 மணிநேரம்கூட தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படுவதில்லை. எந்தவித முன்னறிப்பும் இன்றி மின்சாரம் அவ்வப்போது நிறுத்தப்படுவதால் இயந்திரங்கள் பழுதாகி விடுகின்றன. பவுண்டரிகளில் இரும்பை உருக்கிக் கொண்டிருக்கும்போதே மின்சாரம் தடைபடுவதால் மீண்டும் மின்சாரம் வரும்போது, மீண்டும் ஒருமுறை இரும்பை உருக்க வேண்டியிருக்கிறது. இதனால் மின்கட்டணம் அதிகமாகிறது.

மின்தடையால் குறுந்தொழில் நடத்த முடியவில்லை. பாதிக்கபட்ட நிறுவனங்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கவேண்டும். சீரான மின்சாரம் வழங்கவேண்டும். தவறினால் எங்கள் போராட்டம் தொடரும். நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

admin @ 11:28 pm
Filed under: news
Kamarajar rule in TN!: K.V. Thangabalu

Posted on Wednesday 9 July 2008

தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி!: தங்கபாலு ஆசை

சென்னை: கோஷ்டிப் பூசலை ஒழித்து தமிழக‌‌‌த்‌தி‌ல் காங்கிரஸ் கட்சியை மிகப் பெரிய இயக்கமாக மாற்றி காட்டுவேன். தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைக் கொண்டுவர பாடுபடுவேன் என்று த‌மிழக கா‌ங்‌கிர‌‌ஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட கே.‌வி.தங்கபாலு கூ‌றினா‌ர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட கே.‌வி.தங்கபாலு நேற்று காலை சத்திய மூர்த்திபவனுக்கு வந்தார். அவருக்கு க‌ட்‌சி‌ தொ‌ண்ட‌ர்க‌ள் உ‌ற்சாக வரவே‌ற்ப‌ளி‌த்தன‌ர்.

பின்னர் கட்சியின் புதிய தலைவராக முறைப்படி அவ‌ர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் மு‌ன்னா‌ள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி பொறுப்புகளை ஒப்படைத்தார்.

இ‌ந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பார்வையாளர் கே.பி.கிருஷ்ணமூர்த்தி, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், நாடாளும‌ன்ற, ச‌ட்டம‌ன்ற ‌உறு‌ப்‌பின‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல்,

”சோனியா காந்தியின் கட்டளை  ஏற்று 3ஆவது முறையாக தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளேன். புதிய சூழலில் தமிழக காங்கிரசை பலப்படுத்தும் பணியை தொடருகிறேன். எல்லாத் தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன்.

மத்தியிலும் மாநிலத்திலும் காமராஜரின் கொள்கைகளை, லட்சியங்களை நிறைவேற்றும் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியைக்  கொண்டுவர பாடுபடுவேன். தமிழக காங்கிரசில் எந்தக்குழு அரசியலும் கிடையாது. தமிழக மக்களின்

உணர்வுகளை பிரதிபலிக்கும் கட்சியாக காங்கிரஸ் இருக்கும். மாநில நிர்வாகிகள் நியமனம் குறித்து அனைத்து தலைவர்களிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்” என்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு முதல்வர் கருணாநிதியை நேற்று மாலை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இருவரும் சுமார் 25 நிமிடங்கள் பேசினர்.

admin @ 10:47 pm
Filed under: news
My duty continues…M. Krishnasamy says

Posted on Tuesday 8 July 2008

எனது பணி தொடரும்!: எம்.கிருஷ்ணசாமி

சென்னை: த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் பொறு‌ப்‌பி‌ல் இரு‌ந்து நீக்கப்பட்டுள்ள எ‌ம்.‌கிரு‌ஷ்ணசா‌மி, சோனியா காந்தியின் முடிவை முழு மனதோடு ஏற்பதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல்,

‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவராக கே.வி.தங்கபாலுவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. சோனியாகாந்தி முடிவு எதுவானாலும் அதை நான் முழு மனநிறைவோடு ஏற்று எந்த நிலையிலும் எனது காங்கிரஸ் பணியை தொடர்வேன்.

நான் தலைவராக பணியாற்றிய கடந்த இரண்டரை ஆண்டுகாலம் நான் செய்த காங்கிரஸ் வளர்ச்சி பணிக்கு தங்கபாலு மிகவும் ஒத்துழைப்பு தந்தார். அதே உணர்வோடு இன்றைக்கு புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அவருக்கு எனது வாழ்த்தை தெரிவிப்பதோடு, அவரது கட்சி பணிக்கு எனது ஒத்துழைப்பு, உறுதுணையும் தொடர்ந்து இருக்கும்.

அதோடு, எனது கட்சி பணிக்கு மிகவும் உற்ற உறுதுணையாக இருந்த காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர்கள், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தோழர்கள் அனைவருக்கும் நன்றி’ எ‌ன்று‌ கூ‌றியு‌ள்ளா‌ர்.

admin @ 2:29 am
Filed under: news
Thangabalu appointed as new president of TNCC

Posted on Monday 7 July 2008

தமிழக காங்கிரஸ் தலைவரானார் தங்கபாலு: கிருஷ்ணசாமியை நீக்கி சோனியா அதிரடி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.வி.தங்கபாலு (58) நியமிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை டெல்லி காங்கிரஸ் கட்சி மேலிடம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தமிழ்நாடு காங்கிரசுக்கு புதிய தலைவரை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. எம்.கிருஷ்ணசாமி, தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து மாவட்ட அளவிலான நிர்வாகிகள் மாற்றமும் நடைபெறவில்லை. இதுதொடர்பாக தமிழக காங்கிரசார் தெரிவித்த யோசனைகளின் அடிப்படையில் புதிய நிர்வாகிகளை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவராக கே.வி.தங்கபாலு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டெல்லி மேலிடம் நேற்று அறிவித்தது. தங்கபாலு ஏற்கனவே ஒருமுறை தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தவர். சேலம் தொகுதி எம்.பி.யாகவும் இவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

admin @ 10:41 pm
Filed under: news