Posted on Tuesday 26 August 2008
பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் 2 மாதத்தில் மதுவை ஒழிப்போம்!: ராமதாஸ்
சென்னை: தமிழ்நாட்டில் பா.ம.க. ஆட்சி அமைந்தால் இரண்டே மாதத்தில் மதுவை ஒழிப்போம் எனறு ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசுக்கான மாற்று மது ஒழிப்பு கொள்கையை நேற்று வெளியிட்டார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
”தமிழகத்தில 23 ஆண்டுகளாக இருந்த மதுவிலக்கை 1971ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதிதான் விலக்கினார். இன்றையச் சூழலில் பூரண மதுவிலக்கு உடனடியாகச் சாத்தியமில்லை. ஆனால் இந்த இலக்கை அடைய படிப்படியாக முயற்சி செய்யவேண்டு்ம்.
கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது. அதற்காகத்தான் மதுவிலக்கை தளர்த்தி இருக்கிறோம். மதுக்கடைகளை நடத்தி வருகிறோம் என்று அரசு சொல்வதை ஏற்க முடியாது.
கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும், அரசின் வருமானத்தைப் பெருக்கவும் மது விற்பனையை அதிகரிப்பது மது திணிப்பாகும். மது ஒழிப்பை வலியுறுத்தி இதுவரை 8 மாநாடு நடத்தி உளளோம். தொடர்ந்து 31 மாவட்டங்களில் மது ஒழிப்பு மாநாடுகளை நடத்துவோம். முடிவாக டாஸ்மாக் கடைகளை மூடும் போராட்டம் நடத்துவோம்.
பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த, அதனால் ஏற்படு்ம் வருமான இழப்பை சரிகட்ட மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும். தனி நபர் கொண்டுச் செல்லும் ரூ.2 ஆயிரம் கோடியை அரசு கஜானாவிற்குக் கொண்டுவரவேண்டும். அதுபோல விற்பனை வரியை ஒழுங்காக வசூலித்தால் ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடி கிடைக்கும். கிரானைட் கொள்ளையையும் தடுக்கவேண்டும்.
பனைத் தொழிலாளர்களின் விற்பனைக் கொள்கையை நாங்கள் ஆதரிக்கவில்லை. அதற்கு பதிலாக, பதநீரை இறக்கி விற்கவேண்டும்.
2011இல் பா.ம.க. ஆட்சி அமைந்தால் 2, 3 மாதங்களில் ஒரு துளி மதுகூட இல்லாமல் ஒழிப்போம். இல்லாவிட்டால் ஆட்சியை விட்டுப் போவோம்” என்றவர்,
”புதுச்சேரியைவிட தமிழ்நாட்டில்தான் மது குடிப்போர் அதிகம். புதுச்சேரியிலும் மதுவிலக்கைக் கொண்டுவரவேண்டும்.
தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும். எங்களது நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை” என்றார்.













































