Free CTV: Global Tender to buy 40 lakhs TVs

Posted on Friday 5 September 2008

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி திட்டம்:
40 லட்சம் டி.வி. வாங்க உலக அளவில் டெண்டர்

சென்னை: இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி திட்டத்தின் கீழ் 40 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்க உலகளாவிய டெண்டர் விட முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

‘இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்குவது குறித்து அமைக்கப்பட்ட முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையிலான சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் 12-வது கூட்டம் 4.9.2008 அன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தி.மு.க. சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் சி.கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்), வை.சிவபுண்ணியம், சட்டமன்ற கட்சித் தலைவர், (இந்திய கம்யூனிஸ்ட்), எச்.அப்துல் பாசித், சட்டமன்ற உறுப்பினர் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), மு.ஜெகன் மூர்த்தி, சட்டமன்ற கட்சித் தலைவர் (புரட்சி பாரதம்) மற்றும் ரவிகுமார், சட்டமன்ற உறுப்பினர் (விடுதலைச் சிறுத்தைகள்) ஆகியோரும், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, நிதித் துறைச் செயலாளர் கு.ஞானதேசிகன், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் சி.சந்திரமவுலி, வருவாய் துறை செயலாளர் அம்புஜ் சர்மா, வருவாய் நிர்வாக ஆணையர் சக்திகாந்த தாஸ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் தீனபந்து ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம், அண்ணா பிறந்த நாளான 15.9.2006இல் தொடங்கி வைக்கப்பட்டு, முதற்கட்டமாக 30 ஆயிரம் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளும், அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக 25 லட்சம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து, 2007-2008ஆம் ஆண்டில் 34 லட்சத்து 25 ஆயிரம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்திட முதலில் ஆணைகள் வெளியிடப்பட்டு, பின்னர் மேலும் 3 லட்சத்து 25 ஆயிரம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்திடவும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. இதன் மூலம் மூன்றாம் கட்டத்தில் மொத்தம் 37 லட்சத்து 50 ஆயிரம் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளைக் கொள்முதல் செய்திட விதிமுறைகள்படி 10 நிறுவனங்களுக்கு ஆணை வழங்கப்பட்டது.

31.8.2008 வரை 24 லட்சத்து 58 ஆயிரத்து 492 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பொது மக்களுக்கு வழங்கப்படுவதற்காக மாவட்ட கலெக்டர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 12 லட்சத்து 91 ஆயிரத்து 508 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளும் 2008 டிசம்பருக்குள் அளிக்கப்பட்டுவிடும்.

நடைபெற்ற சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தில், தமிழக அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ் நான்காம் கட்டமாக இந்த ஆண்டில் (2008-2009) 40 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கொள்முதல் செய்வதற்காக 2008 செப்டம்பர் மாதத்தில் உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோருவது என்றும், 2008 அக்டோபர் மாத மத்தியில் ஒப்பந்தப் புள்ளிகளை திறப்பது என்றும், அக்டோபர் இறுதியில் ஒப்பந்தப் புள்ளிகளை முடிவு செய்வது என்றும், 2009 ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை 40 லட்சம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளையும் வழங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இத்திட்டத்தில், மூன்றாம் கட்டமாக இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்குவதற்கு முடிவுகள் மேற்கொண்டபோது நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி நெறிமுறைகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கான தொழில்நுட்பக் குறியீடுகளையே தற்போதைய நான்காம் கட்ட கொள்முதலுக்கும் பின்பற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

admin @ 2:35 am
Filed under: news
Sripathi is new Chief Secretary

Posted on Monday 1 September 2008

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி- எல்.கே. திரிபாதி ஓய்வு

சென்னை: தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கே.எஸ்.ஸ்ரீபதி நேற்று பொறுபேற்றார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்து வந்த எல்.கே.திரிபாதி நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஸ்ரீபதி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 14ம் தேதிதான் ஸ்ரீபதி சிறப்பு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

தலைமைச் செயலாளர் பொறுப்புடன், மறு உத்தரவு வரும் வரை நிர்வாக சீரமைப்பு ஆணையராகவும், கண்காணிப்பு ஆணையராகவும் ஸ்ரீபதி தொடருவார் என்று அரசு அறிவித்துள்ளது.

admin @ 1:52 am
Filed under: news
Power cuts: Karunanidhi may face the election: Jaya

Posted on Sunday 31 August 2008

jayalalithaa மின் நெருக்கடி: சமாளிக்க முடியாத தி.மு.க. அரசு:
தேர்லைச் சந்திக்கலாம்: ஜெயலலிதா யோசனை

சென்னை: தமிழகத்தை இருளில் தள்ளிக் கொண்டிருக்கும், மின் நெருக்கடியை சமாளிக்க முடியாத தி.மு.க. அரசு, சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க முன்வர வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை‌யி‌ல்,

‘தற்போது தமிழ்நாட்டில் ‘அறிவிக்கப்பட்ட மின்வெட்டு’, ‘அறிவிக்கப்படாத மின்வெட்டு’ என கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 20 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது.

தற்போதைய மின் நிலைமைக்கு தி.மு.க. அரசு தெரிவிக்கும் முதல் காரணம், தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது என்பதாகும். எனது ஆட்சிக் காலத்தின் முதல் 3 ஆண்டுகளை ஒப்பிடுகையில் கடந்த 2 ஆண்டுகளில் நல்ல மழை பெய்துள்ளது. இருப்பினும் இந்த ஆட்சியாளர்களால் தங்கு தடையின்றி சீரான மின்சாரத்தை வழங்க முடியவில்லை. நிர்வாகத் திறமையின்மையே இதற்கு முக்கியக் காரணம்.

அரசு சொல்லும் 2ஆவது காரணம், நிலக்கரி மற்றும் யுரேனியம் தட்டுப்பாட்டால் நெய்வேலி மற்றும் இதர மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு 50 சதவீதம் குறைந்துள்ளது என்பதாகும். சுய லாபத்திற்காக வளம் கொழிக்கும் இலாகாக்களை பெறும் கருணாநிதியால் இதை ஏன் பெற முடியவில்லை?

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தரமற்ற நிலக்கரி வினியோகிக்கப்படுவதாகவும், பெரும்பாலான அனல் மின் நிலையங்கள் முறையாக, சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.

மூன்றாவதாக கூறப்படும் காரணம், காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின் உற்பத்தி 1500 மெகாவாட் குறைந்துவிட்டது என்பதாகும். ஓர் ஆண்டில் அதிகபட்சம் 7 மாதங்கள், குறைந்தபட்சம் 5 மாதங்கள் மட்டும் தான் காற்றாலையில் இருந்து மின்சாரம் கிடைக்கும். ஆனால் தமிழ் நாட்டிலோ ஆண்டு முழுவதும் மின்சாரப் பற்றாக்குறை நிலவுகிறது.

காற்றாலையில் இருந்து மின்சாரம் கிடைக்காத காலங்களில் அனல், புனல் மற்றும் மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரத்தை பெறுவதற்கான முயற்சிகளில் மாநில அரசு ஈடுபட வேண்டும். இதை விட்டுவிட்டு காற்றை எதிர்நோக்கி இருக்கிறோம்; நீரை எதிர்நோக்கி இருக்கிறோம் என்று சொல்லப்படும் காரணங்கள் சிறு பிள்ளைத்தனமானது.

நான்காவதாக கூறப்படும் காரணம், பிற மாநிலங்களில் இருந்து தமிழக அரசு போதிய மின்சாரத்தை வாங்க முன்வந்தபோதும் குறைந்த அளவே வெளிச்சந்தையில் வாங்க முடிகிறது என்பதாகும். மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை எங்கிருந்தாவது வாங்கி வினியோகிக்க வேண்டியது ஒரு மாநில அரசின் கடமையாகும். குறைந்த அளவுதான் வாங்க முடிகிறது என்கிற காரணம் தி.மு.க. அரசின் செயலற்ற தன்மையையே காட்டுகிறது.

இன்னும் சில காரணங்களான ‘குறுகிய காலத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது’, ‘மத்திய தொகுப்பிலிருந்து கூடுதலாக மின்சாரம் பெறவும், மத்திய மின் நிலையங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் தமிழக அரசு மைய அரசை கோரியுள்ளது’ போன்றவற்றை பார்த்தால் மின்வெட்டு தொடரும் என்பதை கருணாநிதி சூசகமாக அறிவித்திருக்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

முதல்வர் கருணாநிதி சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். அப்படி செய்தால், மின்சாரத் தட்டுப்பாட்டை சரி செய்யக் கூடிய ஒரு அரசு பதவிக்கு வர வழி ஏற்படும்.

இப்படிப்பட்ட ஒரு ஆட்சியை மக்கள் தற்போது விரும்பவில்லை, வெறுக்கிறார்கள். எனவே கருணாநிதி உடனடியாக சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த முன்வர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

admin @ 9:46 pm
Filed under: news
TN health department seems to be a patient: Sarathkumar

Posted on Wednesday 27 August 2008

sarathkumarகவலை தரும் நிலையில் த‌மிழக சுகாதாரத் துறை: சர‌த்குமா‌ர் கவலை
 
சென்னை: தமிழக சுகாதாரத் துறை மிகவும் கவலை தரும் நிலையில் உள்ளதாகக் கவலைத் தெரிவித்திருக்கிறார் சரத்குமார்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில்,

‘தமிழகத்தில் சுகாதாரத் துறை மிகவும் கவலை அளிக்க கூடிய நிலையில் உள்ளதை நிரூபிக்கும் வகையில் 2 நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டதில், அவர்கள் கொடூரமான முறையில் மரணமடைந்துள்ளனர்.

இப்போது, பெரம்பலூர் பகுதியில் இலவச கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுமார் 29 பேர் பார்வை இழந்துள்ள அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் விசாரித்து கொண்டிருக்கும்போது, மேலும் 36 பேர் பார்வை இழந்துள்ளதாக செய்தி வந்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் எந்தவிதமான முன் அனுமதியும் பெறாமல் இது போன்ற முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகள் அதிகமாகவும், அரசு மருத்துவமனைகள் மிகக் குறைவாகவும் உள்ள தமிழகத்தில், மக்களின் அடிப்படை தேவைகளை சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உண்டு.

ஆனால், ஒவ்வொரு முறையும் பெரிய அளவில் மக்கள் பாதிக்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு நிதி உதவி அளிப்பதும், பின்னர் நிபுணர் குழு அமைத்து காரணங்களை ஆராய்ச்சி செய்வதும் எந்த வகையில் சரியானது? மக்களுக்கு ஏற்பட்ட இதுபோன்ற பாதிப்புகளுக்கு தமிழக அரசு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்’ எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர். 

admin @ 9:59 pm
Filed under: news
No holidays for petrol bunks, says govt

Posted on Wednesday 27 August 2008

velu_av.jpgபெட்ரோல் பங்க் விடுமுறை இல்லை. வழக்கம் போல் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு 

சென்னை: தமிழ்நாட்டில் பெட்ரோல் பங்க்குகள் வழக்கம் போல் விடுமுறை இன்றி அனைத்து நாட்களும் 24 மணிநேரமும் இயங்கும் என்று உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தட்டுப்பாடு ஏற்படாத வகையில் டீசல் வழங்க எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செய்திக் குறிப்பில்,

‘தமிழகத்தில் பெட்ரோல் ‌பங்க்குகளை இரவு 10 முதல் காலை 6 மணிவரை மூடவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடவும் பெட்ரோல் ‌‌‌பங்க் உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். இதையடுத்து, தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

பெட்ரோல், டீசல் அத்தியாவசியப் பொருள்கள் என்பதாலும், பெட்ரோல் ‌வி‌ற்பனை ‌பங்க்குக‌ள் இன்றியமையா சேவைப் பணி என்பதாலும், இத்தகைய கட்டுப்பாடுகள் சட்ட விரோதமானது என தெரிவிக்கப்பட்டது.

பெட்ரோல் பங்க்‌ உரிமையாளர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பை உடனே விலக்கிக் கொள்ளவும் வழக்கம் போல் செயல்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களும், போதிய அளவு டீசல் விநியோகிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன’ எ‌ன்று கூறப்பட்டுள்ளது. 
 

admin @ 2:01 am
Filed under: news
Govt to bare Tiruppur Sewerage Centre expences: Sarathkumar

Posted on Monday 25 August 2008

sarathkumar2.jpgதிருப்பூர் பொது சுத்திகரிப்பு நிலைய செலவை அரசே ஏற்க வேண்டும்: சர‌த்குமா‌ர்

சென்னை: திருப்பூர் சாயப்பட்டறை கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலைய செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
 
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஓன்றில்,

‘திருப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சாயப்பட்டறை கழிவுநீர் ஆற்றிலும், குடிநீரிலும் கலந்து விடுவதால், பொது மக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்துகிறார்கள்.

எனவே, திருப்பூரில் உள்ள 523 சாயத் தொழில் நிறுவனங்கள் சேர்ந்து 900 ஆயிரம் கோடி செலவில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து வருகின்றன. இந்த மொத்த செலவையும் சாயத்தொழில் நிறுவனங்களே செலவழித்துள்ளன.

இதில், மத்திய, மாநில அரசுகளின் மானியம், வங்கிக் கடன் எவ்வளவு கிடைக்கும் என்று சாயப்பட்டறை நிறுவனங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

வடநாட்டு மற்றும் அய‌ல்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு எத்தனையோ சலுகைகளை அளித்து வருகிறது. அதுபோல, பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஆகியுள்ள மொத்தச் செலவை மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசே ஏற்க வேண்டும். ஆயிரக்கணக்கான சிறு சாயப்பட்டறைகளை இணைத்து ஆங்காங்கே சிறிய அளவிலான பொது சுத்திகரிப்பு நிலையங்களை தமிழக அரசே அமைத்திட வேண்டும்.

சாயத்தொழிலில் நமக்கு போட்டியாக இருக்கும் சீனா, வ‌ங்கதேச நாடுகளில் அந்நாட்டு அரசு அந்த நிறுவனங்களுக்கு பல சலுகைகள் வழங்கியுள்ளன. அதனால், அந்த நாடுகளோடு நாம் கடுமையாக போராட வேண்டியுள்ளது.

எனவே, இந்த பிரச்னையில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்கள், விவசாயிகள், பெரிய, சிறிய சாயப்பட்டறைகளின் நீண்டநாள் குறைகளை தீர்க்க சிறப்பு நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும்” எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர். 
 

admin @ 11:06 pm
Filed under: news
TN govt., will help all type of disables

Posted on Saturday 23 August 2008

அனைத்து வகை ஊனமுற்றோருக்கும் நிவாரண உத‌வி‌த் தொகை: கருணாநிதி உ‌த்தரவு
 
சென்னை: பார்வையற்றோருக்கு வழங்கப்படுவது போன்றே, அனைத்து வகை ஊனமுற்றோருக்கும், வேலை வாய்ப்பற்றோர் நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

‘மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு பிரதமரின் ஊனமுற்றோருக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், மத்திய அரசின் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெற்று சுய வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு வசதியாக, அந்தத் திட்டத்தில் ஊனமுற்றோர் செலுத்த வேண்டிய 5 ‌சதவிகிதம் பங்குத் தொகையை தமிழக அரசே ஏற்கும்.

பார்வையற்றோருக்கு வழங்கப்படுவது போன்றே, அனைத்து வகை ஊனமுற்றோருக்கும், வேலை வாய்ப்பற்றோர் நிவாரண உதவித் தொகை வழங்கப்படும்.

ஊனமுற்றோர்க்கு வேலை வாய்ப்பு பெறும் தகுதியை மேம்படுத்தும் வகையில், 3 ஆண்டுகளில் மாவட்டந்தோறும் தங்கும் விடுதிகளுடன் கூடிய தொழிற்பயிற்சி நிலையங்கள் அரசு நிதி உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் தொடங்கப்படும் என்றும் முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்’ எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

admin @ 3:09 am
Filed under: news
Places announced to dip statues of God Vinayaka

Posted on Saturday 23 August 2008

விநாயகர் சிலைகளை கரைக்க 6 இடங்கள்: தமிழக அரசு அறிவிப்பு

god-Vinayagar Chaturthi

சென்னை: வரும் செப்டம்பர் 3ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி. இந்தத் திருநாள் சில சமயம் திகில் நாளாகக்கூட மாறும். அசம்பாவிதங்கள் ஏதும் நேராமல் கண்காணிப்பது அரசின், காவல்துறையின் கடமையாகும். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலைகளை, சென்னையில் கடலில் கரைக்க 6 இடங்களை முடிவு செய்து அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

இது தொடர்பாக தலைமைச் செயலாளர் திரிபாதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘சென்னையில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்குப் பிறகு, விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான இடங்கள் பற்றி சென்னை காவல்துறை ஆணையர் பரிந்துரைத்துள்ளார்.

அதன்படி, பட்டினப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீனிவாசபுரம், காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகில், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடையின் பின்புறம், அங்குள்ள யுனிவர்சல் கார்போரண்டம் பின்புறம் மற்றும் நீலாங்கரை பல்கலை நகரில் சிலைகளைக் கரைக்க அனுமதிக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும், சென்னை புறநகரில் விநாயகர் சிலைகளை எண்ணூர் ராமகிருஷ்ணா நகரில் கரைக்க அனுமதிக்கலாம் என்று புறநகர் காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இவர்களின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு, அவர்கள் குறிப்பிட்டுள்ள அந்தந்த இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

admin @ 12:31 am
Filed under: news
Diesel demand: We will take it up with the centre: LK Tripathy

Posted on Thursday 21 August 2008

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் டீசல் தட்டுப்பாடு: தமிழக அரசு விளக்கம்

சென்னை: தமிழகத்தில் நிலவிவரும் டீசல் தட்டுப்பாட்டுக்கு பெருகிவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் தான் காரணம். டீசல் தட்டுப்பாட்டை சரிசெய்ய அரசு பெட்ரோலிய நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன என்று தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நிலவிவரும் டீசல் தட்டுப்பாட்டை சரிசெய்ய, டீசலை அதிகம் பயன்படுத்தும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஜவுளி ஆலைகள், அரசு பெட்ரோலிய நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் நேற்று தமிழக அரசு ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி நிருபர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறுகையில்,

”இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிறுவனங்கள் டீசல் தட்டுப்பாட்டை சரி செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.

20ஆம் தேதி நடந்த அகில இந்திய வேலை நிறுத்தம் காரணமாக, சில இடங்களில் இருந்து டீசல் வருவது தடைபட்டதாகவும், தட்டுப்பாட்டை போக்கும் அளவுக்கு டீசல் விநியோகிக்கவும் எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது டீசல் தேவை கடந்த ஆண்டைவிட 35 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனஙகள் பெருகியுள்ளதும், அந்நிறுவனங்கள் வாரம் முழுவதும், 24 மணி நேரமும் தொடர்ந்து டீசலை பயன்படுத்துவதும் இதற்கு காரணம்.

எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் 15 சதவிகிதம் அதிக டீசலை விநியோகிக்கிறார்கள். தமிழகத்திற்கு மாதத்திற்கு 42 கோடி லிட்டர் டீசலை எண்ணெய் நிறுவனங்கள் விநியோகிக்கின்றன. இதில் அரசு போக்குவரத்துக் கழகங்கள், துறைமுகம், இரயில்வே, ராணுவம் ஆகியவற்றுக்கு 25 சதவிகிதம் தரப்படுகிறது. இவர்களின் டீசல் தேவையும் அதிகரித்து வருகிறது.

நாட்டின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தின் டீசல் தேவை அதிகரித்துள்ளது. இந்த பிரச்னைகளை மத்திய அரசிடம் எடுத்துக் கூறி அதிக டீசலைத் தரக் கோருவோம்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் டீசல் தருவதாகச் சொல்வது தவறு. அவர்களுக்குச் சந்தை விலையில் தான் டீசல் அளிக்கப்படுகிறது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை டீசல் பயன்பாட்டை குறைக்கச் சொல்லிக் கேட்டால்,  தமிழக அரசு ஊக்கப்படுத்தியதால்தான் இங்கு தொழில் தொடங்கினோம். மேலும் நாங்கள் 10 பேருக்கு வேலை தந்திருக்கிறோம் என்கின்றன. ஆகவே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை விட்டுவிட்டு வேறுவழிகளில் டீசல் பயன்பாட்டைக் குறைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

மின்சார தேவையைப் பொறுத்தவரை இப்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தற்போது 700 முதல் 800 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தேவை உள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இங்கு மின்தட்டுப்பாடு மிகவும் குறைவு. தற்போது மழை பெய்ய தொடங்கி இருப்பதால் மின்உற்பத்தி அதிகரிக்கும். இதனால் ஜெனரேட்டர் பயன்பாடு குறையும். இதனால் டீசல் பயன்பாடும் குறையும்.

விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பம்ப்செட்டுகளின் டீசல் தேவை என்பது குறைவே. அதுவும் மழை பெய்தால் பம்பு செட்டுகளின் பயன்பாடும் குறைந்துவிடும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் யூனிட்டில், வரும் 2009 ஆண்டு ஏப்ரலில் மின்உற்பத்தி தொடங்கும். அங்கு கிடைக்கும் 1000 மெகாவாட் மின்சாரத்தில் நமக்கு 463  மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். 2 ஆவது யூனிட்டின் செயல்பாடு தொடங்கினால் மேலும் 463 மெகாவாட் கிடைக்கும். அப்போது மின்பற்றாகுறை சரியாகிவிடும். அங்கு மேலும், 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்

admin @ 10:02 pm
Filed under: news
TN govt., says no to reservation for FC

Posted on Thursday 21 August 2008

முற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு தேவையில்லை:
தேசிய ஆணையத்திடம் தமிழக அரசு தகவல்

சென்னை: பொருளாதாரரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள முற்பட்ட வகுப்பினருக்கு தனி இட ஒதுக்கீடு தரத் தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளதாகத் தேசிய ஆணையத் தலைவர் சின்ஹா கூறினார்.

சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், தேசிய ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பொருளாதாரரீதியில், பின்தங்கிய நிலையில் உள்ள முற்பட்ட வகுப்பினருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆலோசிப்பதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது.

இக்கூட்டத்தில் பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் ஆணையத் தலைவர் சின்ஹா மற்றும் உறுப்பினர் நரேந்திர குமார், செயலாளர் மகேந்திர சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினார்கள். அப்போது அவர்கள் கூறுகையில்,

”பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு வேண்டாம் என்று பலரும் தெரிவித்தனர். பொருளாதார ரீதியாக பின்தங்கிய முற்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு ராஜஸ்தான் மாநிலத்தில் 14 சதவீதம் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அந்த பரிந்துரை காலாவதியாகி விட்டதால் புதிதாக இந்த தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 2006ஆம் ஆண்டு ஜூலை முதல் ஜூலை 2009ம் ஆண்டு வரை செயல்படும். இந்தியாவில் உள்ள 12 மாநிலங்களில் தேசிய ஆணையம் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

தனி இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு முதன்மைச் செயலாளர்களை சந்தித்துப் பேசினோம். தமிழகத்தில் ஏற்கனவே 69 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளது என்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய முற்பட்டவர்களுக்கு நலத்திட்டங்கள் மூலம் நிறைவேற்றி வருகிறோம் என்றும் அதனால், தமிழகத்தில் பொருளாதாரரீதியாக தனி ஒதுக்கீடு தேவையில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றனர்.

admin @ 2:11 am
Filed under: news