Honorary Doctorate: Vijaikanth questions CM

Posted on Monday 8 September 2008

தமிழகமே ஸ்தம்பித்துள்ள நிலையில் முதல்வருக்கு டாக்டர் பட்டமா?: விஜயகாந்த் கேள்வி

vijayakant

கோவை: தமிழகமே ஸ்தம்பித்துள்ள நிலையில் முதல்வருக்கு டாக்டர் பட்டமா? என்றும், தமிழ்நாட்டில் மின்வெட்டை உடனடியாக சரி செய்யாவிட்டால் நெய்வேலியில் போராட்டம் நடத்துவேன் என்றும் விஜயகாந்த் பேசினார்.

தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்தும், அதற்கு உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்காததைக் கண்டித்தும் கோவையில் தே.மு.தி.க.  சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

கோவை செஞ்சிலுவைச் சங்க கட்டடம்  எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தல் கலந்து கொண்டு, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசுகையில்,

”தமிழகத்தில் நிலவிவரும் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள், குழந்தைகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவையைத் தேர்ந்தெடுப்பதற்கு காரணம் சிறு தொழில், குறுந்தொழில் தொழிற்சாலைகள் இங்கு அதிகம் உள்ளது என்பதுதான்.

மின்வெட்டால் இங்கு தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்வெட்டை சீராக்கச் சொன்னால், மழை வந்தால்தான் சரியாகும் என்ற அமைச்சர் கூறுவது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டின் தேவையான 10 ஆயிரம் மெகாவாட்டில் 6,500 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதம் 3,500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது.

இப்படி இருக்கும் நிலையில், நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படும் ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரத்தை ஆந்திரம், கர்நாடகம், கேரளத்துக்கு வழங்கிவருவது அரசின் அலட்சியப் போக்கே.

ரேஷன் அரிசி ரூ.2க்கு கிடைக்கும்போதே அதை பெரும்பாலோர் வாங்கவில்லை. இந்நிலையில் ரூ.1க்கு அரிசி கொடுத்தால் யாரும் வாங்க மாட்டார்கள். சலுகை என்ற பெயரில் 1 ரூபாய்க்கு அரிசி தரும் தி.மு.க. அரசு,  சமையல் பொருள்களின் விலையை பல மடங்கு உயர்த்தி உள்ளது.

கவர்ச்சிகரமான திட்டங்களைத் தீட்டுவதை கைவிட்டுவிட்டு வளர்ச்சிகரமான திட்டங்களைத் தீட்டினால் மக்களுக்குப் பயன் உள்ளதாக இருக்கும்.

பணவீக்கம், விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், விலை உயர்வு, மின்வெட்டு என தமிழகமே ஸ்தம்பித்துள்ள நிலையில் முதல்வருக்கு டாக்டர் பட்டம் வழங்குவது முறையல்ல.

தமிழ்நாட்டில் மின்வெட்டை சரி செய்யாவிட்டால், கட்சித் தொண்டர்களைத் திரட்டி நெய்வேலியில் போராட்டம் நடத்துவேன்” என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது விஜயகாந்த் பேசுகையில் கண்களில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு சிறிது நேரம் பேசினார்.

admin @ 12:37 am
Filed under: news
Diesel demand: Sarathkumar questions State and Centre

Posted on Friday 22 August 2008

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏன்?: சரத்குமார் கேள்வி
 
சென்னை: மின்சாரத் தட்டுப்பாடு இருக்கும் போது டீசல் ஜெனரேட்டர்களைத்தான் பெரும்பாலான சிறு, குறு தொழிற்சாலைகளும், விவசாய பெருமக்களும் நம்பி இருக்கிறார்கள். எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைக்க ஆவன செய்ய வேண்டும் எ‌ன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘சென்னை‌ மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென்று பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இது போ‌ன்ற தட்டுப்பாட்டால் மாநிலமே ஸ்தம்பிக்கும் நிலைமை வந்த நேரத்தில் ‘கச்சா எண்ணை விலை உயர்வாலும், நமக்கு வரவேண்டிய டாங்கர்கள் வர தாமதமானதாலும் அந்த நிலைமை உருவாகியதாக’ அரசால் விளக்கம் சொல்லப்பட்டது.

ஆனால் அந்த நிலைமை சரியான பின்பு திடீரென ஒரு மாதத்திற்குள் மறுபடியும் சென்னையிலும், புறநகரங்களிலும் கடுமையான டீசல் தட்டுப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தங்களுக்கு எண்ணை நிறுவனங்கள் தாமதப்படுத்தி அனுப்புவதாக கூறுகிறார்கள். முதன்முறை டீசல் தட்டுப்பாடு ஏற்படும்போதே, வேண்டுமென்றே இதுபோன்ற தட்டுப்பாட்டை உருவாக்கி விற்பனையை குறைக்கிறார்களோ என்ற சந்தேகத்தை உருவாக்கியது.

ஒரு புறம் மக்களை‌ப் பாதிக்கின்ற வண்ணம் டீசல், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை அரசே மானியமாக பெட்ரோலிய கம்பெனிகளுக்கு வழங்குகிறது என்னும் தோற்றத்தை மக்களுக்கு ஏற்படுத்தி விட்டு மறுபுறம் உள்ள அவர்களுக்கு, பெட்ரோலிய கம்பெனிகளே டீசல் தட்டுப்பாட்டை செயற்கையாக உருவாக்கி நஷ்டத்தை தவிர்க்கிறார்களோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

மின்சாரத் தட்டுப்பாடு இருக்கும் போது டீசல் ஜெனரேட்டர்களைத்தான் பெரும்பாலான சிறு, குறு தொழிற்சாலைகளும், விவசாய பெருமக்களும் நம்பி இருக்கிறார்கள். எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைக்க ஆவன செய்ய வேண்டும்’ எ‌ன்று கூறியு‌ள்ளா‌ர்.

admin @ 3:49 am
Filed under: news
Jaya slams Central and State governments

Posted on Thursday 3 July 2008

விலையைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய, மாநில அரசுகள் பதவி விலக வேண்டும்: ஜெயலலிதா பாய்ச்சல்

சென்னை: நிதி நெருக்கடி, விலைவாசி உயர்வு, பண வீக்கம் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகளால் முடியவில்லையென்றால், இரண்டு அரசுகளும் பதவியை விட்டு விலக வேண்டும் என்று அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல்,

‘உரம், உப்பு தட்டுப்பாடு என்று தொடங்கி இப்போது பெட்ரோல், டீசல் வரை தட்டுப்பாடு வந்துவிட்டது. இதனால், சரக்கு வாகனங்கள் உள்பட பள்ளிக்கூட வாகனங்களும் பாதிக்கப்பட்டன.

மத்தியிலும், மாநிலத்திலும் அரசுகள் இருக்கின்றவா என்பது தெரியாமல் மக்கள் திகைத்துப் போயுள்ளனர்.

டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற பெரு நகரங்கள் உட்பட இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தமிழ்நாட்டில் மட்டும் ஏற்பட காரணம் என்ன என்பது தெரியவில்லை.

மத்திய அரசோ, அணு சக்தி ஒப்பந்தம் குறித்து இடது சாரிகளை எப்படி சமாளிப்பது? சமாஜ்வாதி கட்சியின் ஆதரவை எப்படிப் பெறுவது? மக்களவைத் தேர்தலை எப்படி சந்திப்பது? என்பது குறித்த ஆராய்ச்சிகளை செய்து கொண்டிருக்கின்றது.

விஷம் போல் ஏறும் விலைவாசி உயர்வு, கட்டுமானப் பொருட்களின் கட்டுக்கடங்காத விலை ஏற்றம், ஏறுமுகத்தில் பணவீக்கம் ஆகிய பாதகச் செயல்களுக்கு முக்கிய காரணமான சிதம்பரமோ, நாட்டு மக்களுக்கு பாதகம் செய்வோரை ஏற்கக் கூடாது எ‌ன்று வியாக்யானம் செய்திருக்கிறார்.

கடந்த சில வாரங்களாகவே, மத்திய அரசை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நினைப்பிலேயே மத்திய, மாநில அரசுகள் உள்ளன. இதன் விளைவாக, மக்கள் நலப் பணிகள், மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் ஆகியவை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளதோடு
மட்டுமல்லாமல், நாட்டில் உணவுப் பஞ்சம், நிதி நெருக்கடி ஆகியவை ஏற்பட்டுவிடுமோ என்ற பீதியில் மக்கள் உள்ளனர்.

ஏனென்றால், இதுபோன்ற விலைவாசி உயர்வை, பெட்ரோல், டீச‌ல் தட்டுப்பாட்டை, உரத்தட்டுப் பாட்டை, உப்புத்தட்டுப்பாட்டை தமிழக மக்கள் இதுவரை கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை.

அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் முயற்சிப்பதாக தெரியவில்லை. இதன் விளைவாக, காய்கறிகள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துவிட்டன.

தற்போது நிலவும் நிதி நெருக்கடி, விலைவாசி உயர்வு, பண வீக்கம் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டுவர மத்திய காங்கிரஸ் மற்றும் மாநில தி.மு.க. அரசுகளால் முடியவில்லையென்றால், ஆட்சியை விட்டு வெளியேறுவது நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’ எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

admin @ 11:49 pm
Filed under: news
Oil crude results increase commuters in EMUs

Posted on Thursday 3 July 2008

மின்சார இரயில்களில் கடும் நெரிசல்: ஒரே நாளில் 50 ஆயிரம் பயணிகள் அதிகரிப்பு!

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் பெட்ரோல், டீசலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. ஒரு சில பங்க்குகளில் 3 மணி நேரத்திற்கு மேல் நிற்கவேண்டி இருந்தது. இதனால் கார், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இவற்றில் அலுவலகம் செல்வோரும் பாதிக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் பேருந்து மற்றும் இரயில்களில்தான் பயணம் செய்ய நேர்ந்தது. இதை கருத்தில் கொண்டு சென்னை  இரயில்வே கோட்ட அதிகாரிகள் சென்னையில் உள்ள 18 இரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், கடந்த 30ஆம் தேதி மட்டும், ஆய்வு மேற்கொண்ட இரயில் நிலையங்களில் 50 ஆயிரம் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு போன்றவை மட்டுமல்லாமல் ஆட்டோ, டீலக்ஸ், குளிர்பதனப் பேருந்துகளின் கட்டணம் அதிகமாக இருப்பதும் காரணமாகக் கூறப்படுகிறது.

பெட்ரோல் படுத்துகிற பாடு இத்துடன் நிற்குமா, தொடருமா தெரியவில்லை.

admin @ 10:39 pm
Filed under: news
2008/07/02 Lorry strike causes increase in rates by 20-40%

Posted on Tuesday 1 July 2008

தொடங்கியது லாரிகள் வேலைநிறுத்தம்: தினசரி ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம்!

சென்னை: சாதாரண பெட்ரோல், டீசல் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், லாரிகளுக்கு தரப்படும் வாடகை மீதான 12.5 சதவிகித சேவை வரியை ரத்து செய்யவேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அறிவிக்கப்பட்ட லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது.

மேலும்…

admin @ 9:39 pm
Filed under: news
2008/07/01 People queue up for petrol in TN

Posted on Monday 30 June 2008

தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: மக்கள் வரிசையில் நின்று வாங்கும் அவலம்!

சென்னை: தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்பட முக்கிய நகரங்கள் ஸ்தம்பித்தன.

மேலும்…

admin @ 11:47 pm
Filed under: news
2008/07/01 Lorry strike from midnight

Posted on Monday 30 June 2008

நள்ளிரவு முதல் நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம்!

சென்னை: இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்குகிறது.

மேலும்…

admin @ 9:05 pm
Filed under: news
2008/06/28 Lorry strike from 2nd july

Posted on Saturday 28 June 2008

ஜூலை 2 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்!

நாமக்கல்: டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 2ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் லாரிகள் ஓடாது என்று தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மேலும்…

admin @ 2:13 am
Filed under: news
2008/06/21 11.05%… Highest price rise, since 1995

Posted on Friday 20 June 2008

சரித்திரம் காணா பணவீக்கம்!: மன்மோகன்சிங், சிதம்பரம் பதவி விலக பா.ஜ.க. கோரிக்கை

டெல்லி: நாட்டின் பணவீக்கம் எப்போதும் இல்லாத வகையில் 11 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத உயர்வு இது.

மேலும்…

admin @ 10:29 pm
Filed under: news
2008/06/19 MDMK Chennai conferance starts

Posted on Wednesday 18 June 2008

தி.மு.க.வைத் தோற்கடிக்க மக்கள் சக்தியைத் திரட்டுவோம்: ம.தி.மு.க மாநாட்டில் தீர்மானம்

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியைத் தோற்கடிக்க அ.தி.மு.க. வுடன் இணைந்து மக்கள் சக்தியைத் திரட்டுவோம் என்று ம.தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மேலும்…

admin @ 9:05 pm
Filed under: news