2008/08/15 Junior Kelvi Pathil

Posted on Thursday 14 August 2008

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

ஆர்.ஜெயராம், திருநெல்வேலி.

மத்தியில் உருவாகியுள்ள மூன்றாவது கூட்டணி பற்றி?

இந்து மகா சமுத்திரத்திற்கு எதிராகக் கூவமும் அடையாறும் கூடி என்ன பயன்?


எஸ்.குலசேகரன், மணப்பாறை.

உள்ளாட்சித் தேர்தல்களில் பழைய ‘குடவோலை’ முறை வந்தால்?

ஓட்டு எண்ணுவதற்குள் குடத்தை உடைத்துவிடுவார்கள். ‘எலெக்ட்ரானிக்ஸ் மிஷினுக்கே ‘தர்ப்பனம்’ செய்யப் பார்க்கிறார்கள் என்றால் குடங்கள் எல்லாம் எங்கே?


ஜே.பார்த்திபன், நொளம்பூர்.

மத்திய அரசின் சுனாமி நிராவண நிதி சரியாக வரமாட்டேங்குதே?

கடலிலே போட்டுவிட்டுச் சாக்கடையில் தேடினால் கணக்கு எப்படி வரும்? இனி எப்படித் தூர் எடுத்தாலும் அதில் கிடைக்கப் போவது சேறும் சகதியும்தான்!


ஏ.பி.பிரபாகர், அறந்தாங்கி.

முதல்வரும் டி.ஆர்.பாலுவும் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளானது பற்றி?

விஷயத்தை அரசு வழக்கறிஞர்கள் தம் கவனத்திற்குக் கொண்டு வரவில்லை என்கிற முதல்வரின் வாதத்தை ஏற்போம். முதல்வர் துணிந்து எதிர்ப்பார்; வாதிடுவாரே தவிர, தவிர்க்கமாட்டார், ஒளியமாட்டார். எனவே நம்புவோம். இதற்காக அரசு வழக்கறிஞர்களை எச்சரித்து விட்டிருந்தால் அந்தப் பெருந்தன்மை பேசப்பட்டிருக்கும். சட்டத்துறை அமைச்சரை முதல்வர் விட்டுவைத்தது ஏன் என்பதும் புரியாத புதிர்!


சங்கரி விஸ்வநாதன், திண்டுக்கல்.

கண்ணீர் சிந்துவது போன்ற இரங்கல் போஸ்டர்களைக் காணும்போது உங்களுக்கு என்ன உணர்வு தோன்றும்?

இந்தச் செலவிற்குப் பதிலாக அந்தப் புண்ணிய ஆத்மாவின் பெயரால் ஓர் ஏழை மாணவனுக்கு, மாணவிக்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்திருக்கலாமே என்று தோன்றும!


ஏ.சுப்பிரமணி, காஞ்சிபுரம்.

அரசியலில் திடீர் பிரவேசம் செய்யும் நடிக - நடிகையர்களைப் பற்றி?

பின்னால் வருத்தப்பட நிறையப் பேர் உருவாகிறார்கள். ஆழம் தெரியாமல் ஆற்றில் இறங்கக்கூடாது என்னும்போது ஆழ்கடலில் இறங்குபவர்களின் நிலையை நாம் சொல்லித்தானா தெரிய வேண்டும்.


ஏ. தமிழரசன், திருமங்கலம்.

கனிமொழிக்கு மத்திய அமைச்சர் ஆகும் யோகம் இனியும் உண்டு என எண்ணுகிறீர்களா?

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் படிவம் 6-ஐ பூர்த்தி செய்யலாம். அமைச்சரவைப் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் எந்த படிவத்தைப் பூர்த்தி செய்வது?


எஸ்.குணசீலன், திருத்தணி.

பத்திரிகை உலகில் நீங்கள் ஒரு அரை வேக்காடாமே? என் நண்பன் சொல்கிறான்?

தயவுசெய்து என்னை சோனியா அளவிற்கு உயர்த்திவிடாதீர்கள். அவரைதான் ‘அரைவேக்காடு’ என்று தமிழக தலைவர் ஒருவர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.


எல்.சுப்பு, சென்னை-17.

அமெரிக்காவில் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்பு குறையுமா? கூடுமா?

கவலை வேண்டாம். நம்மவர்களின் மூளைக்கு எந்த ‘மூலை’யிலாவது வேலை இருந்து கொண்டேயிருக்கும்.


கே.சாகுல்ஹமீது, உடுமலைப்பேட்டை.

ஆப்கானிஸ்தானில் இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டு, இறந்தவர்களின் சமாதியில் இன்னும் புல்கூட முளைக்கவில்லை. இவர்களுக்கு ஏன் 100 கோடி தரணும்?

அண்டை நாடுகளுடன் அரவணைத்துப் போகும் பொறுமைக் குணம் நமக்கு இருப்பதைப் போல் எவருக்கும் இல்லை. இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டதற்கு ஆப்கானிஸ்தான் காட்டிய கரிசனம் மறக்க முடியாதது. இதன் பின்னணியில் இருப்பவர் யார் என்று தோலுரித்தவர் அதிபர் கர்சாய். நம் அண்டை நாடுகளுள், நம்மை ஒப்பிடும்போது, சீனம் தவிர மற்றவை பொருளாதார வல்லமை இல்லாதவை. அவ்வப்போது ஏதாவது போட்டுக் கட்டவேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. போருக்குச் செலவழிப்பதைவிட விருந்துக்குச் செலவழிப்பது மேல் அல்லவா?


டி.ஞானகேசரன், சென்னை-50.

அகில இந்திய அரசியலை ஒப்பிடும்போது தமிழக அரசியல் எப்படி?

அரசியலில் தமிழகம்தான் உயர்ந்து நிற்கிறது. இங்குள்ள கட்சிகளின் எண்ணிக்கையே இதைக் காட்டிக் கொடுக்குமே? இதிலுமா உங்களுக்குச் சந்தேகம்? தமிழகக் கட்சிகளையும், வடஇந்தியக் கட்சிகளையும் தராசில் வைத்தால் பின்னதுதான் தாழும். போகட்டும்! தராசிலாவது தமிழகக் கட்சிகள் உயர்ந்து வட இந்தியக் கட்சிகள் தாழ்கின்றனவல்லவா?


பி.செளந்தர், பெரம்பூர்.

உங்கள் வீட்டிலுள்ள புத்தகங்கள் எல்லாவற்றையும் படித்துவிட்டீர்களா?

என் நூலகத்தை இரண்டாகப் பிரித்திருக்கிறேன். நான் ஓய்ந்து விடாதிருக்க ஒரு பகுதி நூல்கள், என் ஓய்வுக் காலத்தில் படிக்க மறுபகுதி நூல்கள்.


வி.மோகன், மதுரை.

ஒரு பெண்ணின் குரலை வைத்து அவளைப் பற்றிச் சொல்ல முடியுமா?

ஓ! சொல்லலாமே! அவள் தாழ்ந்த குரலில் பேசினால், அவள் எதையோ அடைய விரும்புகிறாள் என்று பொருள். அதுவே ஓங்கிய குரலில் பேசினால் மற்றவர் அடைந்த ஒன்றைக் தடுக்க விரும்புகிறாள் என்று பொருள்.


எஸ்.கோபால், விருதுநகர்.

நேர்மை, நாணயம் மீறி நடப்பவர்களைப் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்கிற முதல்வரின் பேச்சு எப்படி?

தி.மு.க. முதன்முதலில் பதவி ஏற்றபோதே இப்படி அறிவித்திருந்தால் தமிழகம் இன்னும் வெகுவாக முன்னேறியிருக்கும்.


எம்.பாத்திமா, மதுரை.

அரிசி விலை தாறுமாறாக உள்ளதே?

இன்னும் ஓர் அறுவடைக் காலம் வரை சமாளிப்போம். உற்பத்தி பெருகினால் விலை தானாகக் குறையப் போகிறது. இயற்கைப் பொய்ப்பிற்கும் நாம் கொடுக்கும் விலை இது!


ஆர்.இருதயராஜ், தேவகோட்டை.

உலகின் மிகப் பெரிய பணக்காரராக விளங்கும் லஷ்மி மிட்டலால் நமக்குப் பெருமைதானே?

இந்தியாவை நோக்கி முதலீடுகளைத் திருப்பாத இவரை எண்ணி நான் பெருமிதப்படத் தயாரில்லை.


பீதாம்பரம், கொடுங்கையூர்.

கொள்ளைச் செய்திகளைப் படிக்கும்போது என்ன தோன்றும்?

சாதாரண மனிதர்கள் வீட்டில் கூடப் பல இலட்சம் கொள்ளை என்று அறிய நேரிடும்போது லாக்கரிலும் வங்கியிலும் வைக்காமல் வீட்டில் குவித்து வைக்கும் இவர்களின் அறியாமையை எண்ணி இரங்கத் தோன்றும்.


கே.ஜெயங்கொண்டான், திருச்சி-2.

மீண்டும் முதல்வராக ஆகும் எண்ணம் இல்லை என்கிற கருணாநிதியின் அறிவிப்பு எதைக் காட்டுகிறது.

ஒரு சகாப்தச் சறுக்கலின் முதல் அடியை!


ஜி.சேஷகிரி, சென்னை-60.

எனக்கு ஷுகர் உள்ளதே?

ப்ரென் ஷுகர் இல்லாதவரை ஓ.கே!.


ஆர்.கண்ணன், பொன்னேரி.

வரதட்சணை ஒழிப்பில் நீங்கள் எப்படி?

எனக்கு இருமகன்கள். தேவையில்லாமல் என் வாயைக் கிளறாதீர்கள்!


எஸ்.ஸ்ரீநிவாஸன், வேலூர்.

மீண்டும் நமக்கு குழந்தைப் பருவம் கிடைத்தால்?

அரிச்சுவடி, வாய்ப்பாடு, பெரிய எழுத்து கொன்றைவேந்தன், அதுவும் சுத்தப்பதிப்பு (அது என்ன சுத்தப்பதிப்பு என்று கேட்காதீர்கள்!) ஆகியவற்றைப் படிக்கலாம். இவை வாழ்வைச் சொல்லி கொடுக்க வல்லவை. இவற்றையெல்லாம் படிக்கக் கொடுத்து வைக்க வேண்டும். சும்மா சும்மா பிளாப்பி, டிஸ்க், நெட் என்று போரடிக்க ஆரம்பிக்கிறது.


கா.செங்குட்டுவன், திருநெல்வேலி.

சாலை விபத்தில் மறைந்த தமிழறிஞர் அகத்தியலிங்கம் பற்றி?

ஒரு தமிழ்ப் பெட்டகத்தை இரு ஓட்டுநர்களின் கவனக்குறைவு காவு கொண்டதை ஜீரணிக்கவே சிரமப்பட்டேன். ஆர்ப்பாட்டம் அறியாதவர் அகத்தியலிங்கம். விளம்பரம் விரும்பாத தகையாளர். அந்த புலமையும் சிறந்த நிர்வாகத் திறனும் நேர்எதிர்த் துருவங்கள். இரண்டையும் இழுத்துப் பிடித்து வைத்திருந்தவர் ஐயா அகத்தியலிங்கம்.


ஆர்.பவளராஜன், கமுதி.

கடவுளால் கூடக் காப்பாற்ற முடியாது என்கிற ரஜினியின் பழைய வசனத்தை உச்ச நீதிமன்றமும் பயன்படுத்தியிருப்பது பற்றி…?

உச்ச நீதிமன்றத்திலும் உவமான உவமேயக்காரர்கள் இருப்பது தெரிகிறது. அரசின் குடியிருப்புகள் பல தகுதியற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. இதைத் தடுக்கச் சட்டத்திருத்தம் கொண்டு வருவது அவசியம் என்கிற உச்ச நீதிமன்றத்தின் சிபாரிசை மத்திய அரசு காது கொடுத்துக் கேளாதிருக்கிறது. பாவம் மத்திய அரசுக்கு ஆட்சி செய்வதைவிட அரசியலை நடத்துவதே பெரும்பகுதிப் பணியாகப் போய்விட்டது. என்ன செய்வார்கள் பாவம்!

08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 5:01 am
Filed under: Uncategorized
2008/07/18 Junior Kelvi Pathil

Posted on Friday 18 July 2008

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

ஏ.பீதாம்பரம், கொடுங்கையூர்.

குடும்ப நல நீதிமன்றங்களின் தேவை அதிகரித்து வருவது எதை காட்டுகின்றன?

ஆண்களின் ஆதிக்க உணர்வையும், பெண்கள் கையில் பொருளாதாரத்தைக் கொடுத்து சுதந்திரத்தையும் அளித்தால் அது எங்கு போய் முடியும் என்கிற எல்லைக் கோ(ர்)ட்டையும்!


வி.எம்.கணேசன், தஞ்சாவூர்.

பாரதிய ஜனதா சுறுசுறுப்பாகிவிட்டதுபோல் தெரிகிறதே!

ஏதோ இரண்டு மோதி இரத்தம் வடியும்போது ஏதோ ஒன்று அதைச் சுவைக்க முன் வருமாமே, அந்தக் கனவு தான் ஞாபகத்திற்கு வருகிறது!


ஆ.பாபு, நெமிலி.

பெட்ரோல் விலையைச் சமாளிக்க மக்கள் இனி இரயில்களிலும், பேருந்துகளிலும் பயணிக்கலாம் என்கிறாரே, ப.சிதம்பரம்?

நாடாளுமன்றத் தேர்தலே வரவில்லை. அதற்குள் சிவகங்கை தொகுதி முடிவு தெரிந்து போச்சே! சம்பந்தா சம்பந்தாமில்லாத பதில் என்கிறீர்களா? இல்லை சம்பந்தம் இருக்கிறது!


எல்.நித்யா, சென்னை-60.

மகளிர்க்கு எபபோது முப்பத்து மூன்று சதவிகித இடஒதுக்கீடு கிடைக்கும்?

நாட்டிலுள்ள எல்லா கட்சிகளும் அ.இ.அ.தி.மு.க. மாதிரியாக வேண்டும். அப்போதுதான் அது சாத்தியம்! அங்கே பாரும், முப்பத்து மூன்று சதவிகிதம் கூட அல்ல; ஐம்பது சதவிகிதம் அமலாக்கம்! அதுவல்லவோ பாரத மகளிரைப் போற்றும் பாரதப் பண்பாடு.


பி.எல்.ராமச்சந்திரன், கொடைக்கானல்.

சென்னை விமான நிலையங்களில் சுங்கவரி கட்டுபவர்களுக்கு உதவியாகக் கத்தை கத்தையாகப் பணத்துடன் திரிபவர்கள் என்ன ஆனார்கள்?

இப்போதெல்லாம் இங்கு எல்லாம் கிடைக்கின்றன என்பதால் பலரும் அள்ளிக்கொண்டு வருவது இல்லை. வந்தாலும் நம் சுங்க இலாகா சலுகைகளை நிறையத் தந்து அனுப்பிவிடுகிறது. எனவே, இவர்கள் இப்போது கோயம்பேடு மார்க்கெட்டுகளுக்கு நகர்ந்துவிட்டார்கள். இலட்ச ரூபாய்க்கு மாதத்திற்கு 12000 ரூபாய் வட்டி (அடப்பாதகர்களா?) கோயம்பேட்டில் 24 மணி நேர வங்கிகளைத் திறந்து முறையாகக் கடன் கொடுத்தால் வியாபாரிகள் வளர்வார்க்ள. இல்லாவிட்டால் நொந்து போய்க் காலிசெய்து விடுவார்கள்.


சிவ.முத்துக்கருப்பன், கோயம்புத்தூர்.

தினமும் இரவில் படுக்கப் போகுமுன் வடிவேலுவின் காமெடிக் காட்சிகளைப் பார்க்காமல் உறங்குவதில்லை. என்னைப் பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?

வேண்டாம். நான் மனம் திறந்த அபிப்பிராயத்தைச் சொன்னால் வருந்துவீர்கள். நானும் எப்போதாவது பார்ப்பது உண்டு. வடிவேலுவின் காமெடிகள் பல சிறு பிள்ளைத்தனமாகவும், அபத்தக் களஞ்சியங்களாகவும், ஸ்டீரியோ நடிப்பு இரகமாகவும் இருக்கின்றன. எனக்கு அபூர்வமாகத்தான் சிரிப்பு வருகிறது. வடிவேலுவின் காமெடிக் காட்சிகளைப் பார்த்தால் எனக்குத் தூக்கம் வர மறுக்கிறது. ஒரு நல்ல கலைஞர் இப்படி வீணடிக்கப்படுகிறாரே என்கிற கவலையில்!


எஸ்.மணி, விருதுநகர்.

கம்யூனிஸ்டுகள் உங்கள் பார்வையில்?

உள் விரிசல்களை அதிகரித்துக் கொண்டு உலக மயமாக்கலைப் பேசுபவர்கள்.


பி.சங்கரன், கோயம்புத்தூர்.

இன்றைய அரசியலில் பதவி சுகத்தை யார் அனுபவிக்கிறார்கள்?

நிற்க முடிந்த இளைஞர்கள் எல்லாம் நின்றுகொண்டு இருக்கிறார்கள். உட்கார முடியாத முதியவர்கள்தாம் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.


வி.சுதாகரன், மதுரை.

இன்றைய பயிர் நிலங்கள்?

அவை நெற்களங்களல்ல! போர்க்களங்கள்! இந்தப் போர்க்களங்களில் பல உழவர்கள் மாண்டு போகிறார்கள்.


ஏ.ஆர்.எஸ், வேலூர்.

வாரக் கடைசியில் மறைவிடங்களில் சாப்ட்வேர் என்ஜினியர்கள் குத்தாட்டம் போடுவது பற்றி?

சாப்ட்வேர்கள் வெறும் அண்டர்வேர்களோடு இருப்பது எனக்கு அநாகரிகமாயப்படுகிறது. இந்தக் குத்தாட்டங்களால் அவர்கள் தங்கள் உடையை மட்டும் இழக்கவில்லை; கூடவே உடைமைகளையும் இழக்கிறார்கள். அதாகப்பட்டது நம் பாரம்பரியம், நம் பண்பாடு!


கே.சாமி, அம்பத்தூர்.

குடும்பத் தலைவனுக்கு எப்போது மதிப்பு?

சம்பளத் தினத்தில் மட்டும் இருபத்தோரு குண்டுகள் முழங்க வரவேற்பு இருக்கும். மற்ற தினங்களில் இந்த குண்டுகளின் எண்ணிக்கை கூடும். ஆனால் அவை வரவேற்பாக இரா; என்கவுன்டர்களாக இருக்கும்.


அ.கண்ணன், சூளைமேடு.

தோனிக்கு ஓய்வு அளித்தது நியாயமா?

தோனியே ஓய்வு கேட்டார் என்கிறார்கள். கராச்சியில் பேட்டி அளித்த தோனி, கிரிக்கெட் வீரர்கள் மீது அதிகமான ஆட்டச் சுமைகள் திணிக்கப்படுகின்றன என்று பேசியது நினைவிற்கு வருகிறதா? மருத்துவர்கள் வருமானத்திற்காக இல்லாவிட்டாலும் நோயாளிகளின் நன்மைக்காகவும் நலனுக்காகவும் எப்படி உழைக்கிறார்கள். இந்த மனநிலையுடன் தேச நலனுக்காகத் தோனி ஆடியிருக்க வேண்டும். அவசரப்பட்ட அரை வேக்காடு முடிவு!


எம்.ஹபிபுல்லா, வேலூர்.

துபையில் கலவரத்தில் ஈடுபட்ட இந்தியத் தொழிலாளர்களைப் பற்றி?

வாலை ஒட்ட நறுக்கிவிடுவார்கள் துபையில். என்ன, நம்மூர் என நினைத்தார்களா? எதிர்ப்பைக் காண்பிக்க, அதிருப்தியை வெளிப்படுத்த, குறைகளை வெட்ட வெளிச்சமாக்க, அரசின் கவனத்தை ஈர்க்க எத்துணையோ வழிகள் இருக்க, வாகனங்களைத் தீ வைத்துக் கொளுத்தி நாட்டின் கெளரவத்திற்கு இழுக்குத் தேடித் தந்துவிட்டார்கள். சிலரது வன்முறையால் எத்துணையோ பேர் திருப்பியனுப்பப்பட இருக்கிறார்கள். பாவம்!


எம்.உதயன், சென்னை.

கொடுத்த கடனை வசூலிக்க சில தனியார் வங்கிகள் குண்டர்களை வைத்துள்ளது மாறியிருக்கிறதா?

இன்னும் முழுமையாக இல்லை. இந்த வங்கிகள் தண்டத்தில் போகாமல் இருக்க, இந்தக் குண்டர்கள் தேவைப்படுகிறார்கள். கொடுக்கும்போது ரோஜா நடுவே வைத்துக் கொடுத்துவிட்டு, அதை வாங்கும் போது முட்களால் அடிப்பது வேதனையான விஷயம்.


செந்தமிழ்செல்வன், ஈரோடு.

உளியின் ஓசை படம் எப்படி?

நாயகன் வினித் பொருத்தமானவரில்லை. கலைஞரும் காலத்திற்கு ஒவ்வாத வசனகர்த்தாவாக ஆகிவிட்டார். திரையுலகம் எந்த ஒரு படைப்பாளிக்கும் ஒரு காலகட்டத்தை நிர்ணயிக்கிறது. அதைத் தாண்டி எவரும் ஒளிவிடாமல் பார்த்துக் கொள்வது விந்தைதான்!


டி.ஜெகதீசன், காஞ்சிபுரம்.

அமைச்சர் பூங்கோதை மீது நடவடிக்கையெடுத்த கலைஞர், டி.ஆர்.பாலு மீது நடவடிக்கை எடுக்காததேன்?

கப்பலே கவிழ்ந்தாலும் டி.ஆர்.பாலு என்கிற கப்பல் மட்டும் தரை தட்டாது. கப்பல் போக்குவரத்து என்பது ஒரு பெரிய போக்குவரத்து! நாட்டில் அந்தப் போக்குவரத்து நின்றால், அதையொட்டிய பல போக்குவரத்துகளும் அடியோடு முடங்கிப் போகும்.


கோ.பூமிநாதன், விருத்தாச்சலம்.

காடுவெட்டி குருவைக் கைது செய்தது பழிவாங்கும் முயற்சிதானே?

ஒரு சிறுத்தை வலிய வந்து கூண்டுக்குள் விழுகிறது விடுவார்களா? குணசேகரன் என்பவர், தாக்கப்பட்ட விஷயத்தில் முதல் தகவல் அறிக்கை காவல்துறைக்கு வலுவான ஆதாரமாகிவிட்டது. காடுவெட்டியார் பேச்சோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். காதைக் கிழிய வைத்திருக்க வேண்டாம்!


ஏ.சுமதி, மதுரை.

வழக்கறிஞர் தொழிலில் உள்ளவர்கள் தாம் சிவில் நீதிபதிகளாக வேண்டும் என்கிற வழக்கறிஞர்களின் கோரிக்கை நியாயம்தானே?

நியாயம்தான். இதற்காகப் பெரும் போராட்டம் ஏதும் நடத்த வேண்டாம். நீதிமன்றங்களைப் புறக்கணிக்க வேண்டாம். இதனால் நீதித்துறைக்கு ஏற்படும் பாதிப்பைவிட இவர்களது கட்சிக்காரர்களுக்கு ஏற்படும் இழப்பே கடுமையானது. சில மாணவர்களைப் போல வழக்கறிஞர்களும் வேலை நிறுத்தத்திற்கு அடிக்கடி காரணம் தேடி நீதிமன்றத்தைப் புறக்கணிப்பது அழகாக இல்லை!


எம்.குணசேகர், பழனி.

குசேலன் படம் வெற்றியைப் பெறுமா?

மலையாளத்தின் ‘கதை பறையும்போள்’ என்ற கதையின்படி நடிக நண்பருக்கு (சீனு) முக்கியத்துவம் குறைவு. ஆனால் தமிழ் இயக்குநர் வாசு ஏக உல்டா செய்து, இதை ரஜினி படமாக ஆக்கியிருக்கிறார். இச்சேர்ப்புகள் கதையோடு ஒட்டினால் படம் எடுபடும். இல்லாவிட்டால் கடினம். படநாயகன் பசுபதியை அநியாயமாய் ஓரங்கட்டியதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை.

11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 12:37 am
Filed under: Uncategorized
2008/06/26 N-deal issue…Congress-Left meets once more

Posted on Wednesday 25 June 2008

அணுசக்தி ஒப்பந்த பிரச்னை:
மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை!
 

டெல்லி: இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்களுக்கும், இடதுசாரி கட்சித் தலைவர்களுக்கும் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இருதரப்பிலும் மீண்டும் கூடி விவாதிக்க முடிவு செய்துள்ளனர். இதனால், மத்திய அரசுக்கு உடனடி ஆபத்து எதுவும் இல்லை.

மேலும்…

admin @ 9:55 pm
Filed under: news