NLC : CM has to speak with PM: Sarathkumar

Posted on Tuesday 14 October 2008

sarathkumar1.jpgஎன்.எல்.சி. பிரச்னை: பிரதமரிடம் முதல்வர் பேச சரத்குமார் வேண்டுகோள்
 
சென்னை: என்.எல்.சி. தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற, தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமரிடம் பேசவேண்டும் என்று சமத்துவ கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
 
இதுதொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல்,

‘தமிழகத்தில் தொடர்ந்து நிலவிவரும் மின்வெட்டைக் கண்டித்து, அனைத்துக் கட்சிகளும், பொதுமக்களும் பல்வேறு போராட்டங்கள்,  ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் மின்வெட்டு நீங்கவில்லை. தற்போது தினமும் ஆறரை மணிநேரம் மின்வெட்டு ஏற்பட்டு மோசமான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மின்வெட்டால் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டு, பண்டிகைக்கால வியாபாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை நம்பி உள்ள விவசாய நிலங்கள் காய்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த இக்கட்டான நேரத்தில் நெய்வேலி அனல்மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அறிவித்திருக்கும் போராட்டம் காரணமாக மின் உற்பத்தி மேலும் குறையுமேயானால், தமிழகத்தில் மின்வெட்டு நிலைமை மேலும் மோசமாகும்.

இப்போது கிடைக்கும் மின்சாரத்தையும் இழந்து தவிக்கும் பரிதாப நிலைக்கு, தமிழக மக்கள் தள்ளப்படாமல் இருக்க வேண்டுமானால் நெய்வேலி அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 13 ஆயிரம் பேர் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளை, என்.எல்.சி. நிர்வாகம் உடனடியாக பரிசீலனை செய்து நிறைவேற்ற முன்வர வேண்டும்.

மின் தட்டுப்பாடு காரணமாக தமிழக மக்கள்படும் அவதிகளைப் புரிந்து வைத்திருக்கிற நெய்வேலி அனல் மின்நிலைய தொழிலாளர்கள் சமூக நலன் பாதிக்கப்படாமல் தங்களது போராட்டங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். நெய்வேலி தொழிலாளர்கள் உரிமைகள், கோரிக்கைகள் நிறைவேற சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து பாடுபடும்.

எனவே, தமிழகத்தில் நிலவும் மின்சார தட்டுப்பாட்டை மனதில் கொண்டும், சுமார் 13 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டும், தமிழக முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக பிரதமரிடம் வலியுறுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க செய்ய வேண்டும்” எ‌ன்று கூறியுள்ளார்.
 

admin @ 9:29 pm
Filed under: news
Sarathkumar ask CM to save Srilankan Tamils

Posted on Monday 6 October 2008

இலங்கைத் தமிழரை காப்பாற்ற முதலமைச்சர் முன்வர வேண்டும்: சர‌த்குமா‌ர் வேண்டுகோள்

செ‌ன்னை: இலங்கையில் நமது தொப்புள் கொடி உறவுகளை காப்பாற்ற தமிழக முதலமைச்சர் கருணாநிதி போராட முன் வந்தால் துணை நிற்போ‌ம் என்று‌ அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுதொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல்,

‘தமிழினப் போராளிகளை வேரறுப்போம் என்று இலங்கை ராணுவம், தான் நடத்தும் இராணுவத் தாக்குதல்களால் அங்கு வாழ்கிற ஒட்டு மொத்த தமிழ் இனத்தையே கருவறுக்க முயலும் படுபாதக செயலுக்கு, மறைமுகமாக இந்திய அரசும் துணை போகிறதோ என்ற வெகுநாளைய சந்தேகம், இந்திய இராணுவ அதிகாரிகள் இருவர் புலிகளின் தாக்குதலில் படுகாயமுற்றனர் என்ற சமீபத்திய நிகழ்வால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இலங்கையின் உள் விவகாரங்களில் இராணுவத்தின் அழித்தொழிப்பு நடவடிக்கைக்கு இந்திய அரசு ரகசியமாக உதவி வருவது வெட்ட வெளிச்சமாகி விட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தனித்தனி அணிகளாக போராடுவது பயனற்றது என்பதே எங்கள் கட்சியின் கருத்து.

கடந்த 19-12-2006 அன்று தமிழக முதலமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்திலேயே ஈழப் பிரஜையின் தன்மையை புரிந்து கொண்டு, உள்ளார்ந்த உணர்வோடு இனப்பிரச்னையை தீர்த்திட ஒரு குழு அமைத்திட வேண்டும் எனவும், அக்குழு இலங்கை சென்று இலங்கை அரசோடும், தமிழ் இன போராட்ட அமைப்புகளோடும் பேச்சுவார்த்தை நடத்திட, அதற்கான இந்திய அரசின் அனுமதியை தமிழக முதலமைச்சர் பெற்றிட வேண்டும். மேலும் அக்குழுவில் நானும் பங்கேற்பதற்காக தயாராகவே உள்ளேன் என்பதையும் தெரிவித்திருந்தேன்.

உடனடியாக தமிழக முதலமைச்சர், மத்திய அரசை நிர்ப்பந்தித்து, இலங்கையில் நடைபெற்று வரும் இராணுவ தாக்குதல்களை உடனடியாக நிறுத்திடவும், திறந்த மனதோடு, சுமூக பேச்சுவார்த்தைகளை இந்திய அரசே முன்னின்று தொடங்கிடவும், இலங்கை அரசை கடுமையாக வலியுறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் நமது தொப்புள் கொடி உறவுகளை காப்பாற்ற தமிழக முதலமைச்சர் தனது அதிகார ஆசைகளை தவிர்த்தும், அவற்றில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டும், தமிழ் இனம் வாழ களம் இறங்கி போராட முன் வந்தால் அதற்கு சமத்துவ மக்கள் கட்சி துணை நிற்கும். அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவையும் திரட்டி களம் இறங்குவேன்’ என்று கூறியுள்ளார்.  

admin @ 11:51 pm
Filed under: news
Sarathkumar appriciate Vallamai Tharayo’s director

Posted on Monday 6 October 2008

வல்லமை தாராயோ நூறாவது நாள் விழா:
இயக்குநர் மதுமிதாவுக்கு சரத்குமார் பாராட்டு

director_madhumitha.jpg

சென்னை: வல்லமை தாராயோ திரைப்படத்தில் உறவுகளின் மேன்மையை மிகச் சிறப்பாக உணர்த்தியிருக்கிறார் புதுமுக பெண் இயக்குநர் மதுமிதா என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மனமார பாராட்டினார்.

பார்த்திபன், சாயாசிங் நடித்த வல்லமை தாராயோ திரைப்படத்தை பெண் இயக்குநர் மதுமிதா இயக்கியிருந்தார். இதன் நூறாவது நாள் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதில் சரத்குமார் பேசுகையில்,

”தற்போது உள்ள நிலையில் ஒரு திரைப்படம் நான்கு  வாரங்கள் ஓடினாலே போதும். வசூலை அள்ளிவிடலாம். ஆனால், இத்திரைப்படம் 100 நாள்கள் ஓடி சாதனை படைத்துள்ளது.

சமுதாயத்தில் தற்போது அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை தெளிவான திரைக்கதை மூலம் மிக அழகாகப் படம்பிடித்து காட்டியுள்ளார் மதுமிதா.

பெண்களுக்கு 33 சதவிகித ஒதுக்கீடு வேண்டும் என்று அனைவரும் போராடும் நிலையில், ஒரு பெண் இயக்குநர் இயக்கிய படம் வெற்றிபெற்றுள்ளது மகிழ்ச்சியை தருகிறது.

நமது கலாசாரத்தைச் சிதைக்காத வகையில் உணர்வுகளைப் புண்படுத்தாமல் தனக்கே உரிய பாணியில் கதை சொல்லியதன் மூலம் மதுமிதா சிறந்த தமிழ் பெண் இயக்குநராக உருவாகியிருக்கிறார்” என்றார்.

கே. பாக்கியராஜ் பேசுகையில், ”பார்த்திபன் நடிக்கிறார் என்றால் கதை, இயக்குநரைப் பற்றி நன்கு அறிந்தபின்னரே அதில் நடிப்பார். எனவே இயக்குநர் திறமையானவராகத்தான் இருப்பார் என்பதை தெரிந்துகொண்டேன். அதை படைப்பில் நிரூபித்துள்ளார்” என்றார்.

இயக்குநர் மதுமிதா பேசுகையில்,

தமிழ்த் திரையுலகில் பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இருந்தாலும் இத்திரைப்படத்தினை துவங்கும் போது, இது சரி வருமா என்று பலரும் என்னை கேட்டனர். ஆனால், தறபோது இந்த விழா மேடையில் இத்தனை பேர் ஆதரவு அளித்துள்ளதைப் பார்க்கும் போது வருங்காலத்தில் 100 பெண் இயக்குநர்கள் கூட வரலாம்” என்றார்.

admin @ 11:26 pm
Filed under: news
Sarathkumar welcomes increase in income limit of BC students

Posted on Monday 6 October 2008

இடஒதுக்கீடு பெற வருமான உச்சவரம்பு உயர்வு: சரத்குமார் வரவேற்பு

சென்னை: ம‌த்‌திய அரசு உய‌ர்க‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ளி‌ல் ‌பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்ட வகு‌ப்‌பினரு‌க்கு உ‌ரிய இடஒது‌க்‌கீ‌ட்டை பெற, அவ‌ர்களது ஆ‌ண்டு வருமான உ‌‌ச்சவர‌ம்பை உய‌ர்‌‌த்‌தி அறிவித்திருப்பதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம் எ‌ன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘மத்திய அரசின் உயர்கல்வி, வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில், வசதி படைத்தவர்களுக்கு இடம் ஒதுக்க கூடாது என்று உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் தீர்ப்பளித்தது.

இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையின் அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அனுமதிக்கவே கூடாது எனவும், வசதி படைத்தவர்கள், ஏழை எளிய மக்கள் என்ற பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் இடஒதுக்கீடு சமமாக வழங்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார்கள்.

ஆனால் சமத்துவ மக்கள் கட்சி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற தீர்ப்பை வரவேற்றதோடு, இடஒதுக்கீட்டின் முழுப்பயனும் பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அது சென்றடைய வேண்டும் என்ற கருத்தை ஆதரித்தது.

அதே நேரத்தில் பொருளாதாரத்தின் அளவுகோல் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்தை ரூ.5 லட்சமாக உயர்த்திட வேண்டும் எனவும் எங்கள் கட்சி அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

எங்கள் கட்சியின் கருத்தையும், எண்ணத்தையும் பிரதிபலிப்பது போலவே, தற்போது மத்திய அரசு ஆண்டு வருமானம் ரூ. 4.5 லட்சம் என பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு பொருளாதார அளவுகோலை நிர்ணயித்து அறிவித்திருப்பதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்’ எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.
 

admin @ 2:11 am
Filed under: news
Sarathkumar asks, Compensation to Beedi labours

Posted on Sunday 5 October 2008

sarathkumar.jpgபுகைபிடிக்க தடை சட்டம் எதிரொலி: பீடி தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வேண்டும்: சரத்குமார்
 
பொது இடங்களில் புகைபிடிக்க போடப்பட்டுள்ள தடை சட்டத்தால், பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ள பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘சமீபத்தில், மத்திய அரசு பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதித்து சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. பீடி, சிகரெட், சுருட்டு போன்றவற்றைக் கொண்டு புகைபிடிப்பவர்களுக்கு மட்டுமல்லாது, அவர்களுக்கு அருகில் இருந்து சுவாசிப்பவர்களின் உடல் நலமும் பாதிக்கப்படும் என்பதைக் கருதியும், சிகரெட் போன்ற பொருட்களின் மீதான வரி விதிப்புகளால் அரசுக்கு கிடைத்து வரும் கணிசமான அளவு வருவாய் குறைய வாய்ப்பு இருந்தும், இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருப்பது அனைத்து தரப்பினரிடையேயும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

ஆனால், இந்த சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு முன்பு, அதனால் ஏற்படும் பாதகங்களுக்கு தீர்வாக ஏற்றுமதியை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும்.

இந்த சட்டம் காரணமாக, புகைப்பிடிப்போரின் எண்ணிக்கை குறைவதால், ஏழைகளின் சிகரெட் எனப்படும் பீடி உற்பத்தியை நம்பி லட்சக்கணக்கான பீடி சுற்றும் தொழிலாளர்கள் அவர்களுள் பெரும்பாலும் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வீட்டில் இருந்தபடியே பெண்கள் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு வருவாய் ஈட்டிக் கொண்டிருக்கும் பீடி சுற்றும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் மட்டும் சுமார் 7 லட்சம் பேர் இந்த சட்டத்தால் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

ஏற்கனவே பீடி உற்பத்தித் தொழில் நலிவடைந்து பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலையில், இந்த சட்டம் மேலும் அவர்களுக்கு பாதிப்பை உருவாக்கியுள்ளது.

எனவே, இந்த சட்டத்தின் மூலம் பாதிப்படைந்துள்ள பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு உடனடியாக மாற்று ஏற்பாடாக, பீடி சுற்றும் தொழிலாளர்களாக பதிவு செய்திருப்பவர்களுக்கு மாற்றுத் தொழில் கிடைக்க செய்வதோடு, அதுவரைக்கும் அவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக அவர்களது வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில், உதவித்தொகை வழங்கவும் அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்’ எ‌ன்று கூறியுள்ளார்.

admin @ 11:31 pm
Filed under: news
2008/10/03 Junior Kelvi Pathil

Posted on Friday 3 October 2008

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

பா.வி.ராஜேந்திரன், மதுரை-2.

‘கலைஞர், ஏழாயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடன் தள்ளுபடி செய்ததற்கு, விவசாயிகள் நன்றியுடையவர்களாக இருந்தால், தொடர்ந்து தி.மு.க.வை அவர்கள் ஆதரிக்க வேண்டும்’ என்கிறாரே நமது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்?

அதாவது கடன் தள்ளுபடி செய்த காலத்தில் அதற்கு யார் ஆதரவாக இருந்தார்களோ அவர்களை ஆதரிக்க வேண்டும் என்கிறார். அப்படியானால், அந்த நேரத்தில் கலைஞரோடு இருந்த பா.ம.க. மற்றும் இடதுசாரிகளையும் கூட ஆதரிக்க வேண்டும் என்கிறாரா? தெளிவாகச் சொல்லிவிட்டால் மக்கள் ஆதரித்து விட்டுப் போகிறார்கள்.


ஆர்.சரசு, திருமயம்.

எனக்குச் சொந்தங்கள் முக்கியமல்ல என்கிறாரே கலைஞர்?

அப்படியானால் கனிமொழிக்கு மந்திரி பதவி, ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி, அழகிரிக்குக் கட்சிப் பதவி, கயல்விழிக்கு மகளிர் அணிப் பதவி இவையெல்லாம் அம்புட்டுதானா? எல்லாம் விநாயகரைக் கடலில் கரைத்த கதையாகிவிட்டதே?


கே.டேவிட்ராஜா, கோயமுத்தூர்-2.

வெடிகுண்டு வைப்பவர்களின் நோக்கம்தான் என்ன?

நாட்டில் பாதுகாப்பாற்ற நிலைமையை உருவாக்கி, மக்கள் மத்தியில் மனக் கலவரத்தை உண்டு பண்ணுவது; இரு மதத்தவரிடையே சமூகக் கலவரத்தை உருவாக்குவது எங்கோ ஏற்பட்டுள்ள அதிருப்தியை இங்கே பரப்புவது; இந்தியாவின் நற்பெயரைக் கலைப்பது; கொடுத்த கூலிக்கு மாரடிப்பது! ஆயிரம் நியாயங்களைச் சொன்னாலும், அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதை நம்மால் ஏற்கவே முடியாது!


ஆர்.சோமு, ஊரப்பாக்கம்.

காங்கிரஸில் பேச்சாளர்கள் இல்லையே?

உண்மை. நட்சத்திரங்கள் இருக்கும் அளவிற்கு அங்கு நட்சத்திரப் பேச்சாளர்கள் இல்லை.


ஆர்.முருகானந்தம், திருவேற்காடு.

இந்த மாநிலம் உருப்பட?

டாக்டர் அய்யாவோடு கவுன்சிலிங் நடத்தலாம். அவர்தான் இப்போது சரியான கவுன்சிலிங் கன்வீனர். இங்குள்ள பெரிய டாக்டரே மலைத்துப் போகிற மாதிரி அருமையான யோசனைகளெல்லாம் சொல்கிறார் என்றால், பார்த்துக்கோங்க.


ஏ.பாலகிருஷ்ணன், திருப்பரங்குன்றம்.

ஒருவருக்கும் வேலை கிடைக்காதபோது மாவட்ட வேலை வாயப்பகங்கள் எதற்கு?

என்னைக் கேட்டால், பெரியார் ஒரு தவறு செய்துவிட்டார் என்பேன். அவர் தனது மூடநம்பிக்கை எதிர்ப்புக் கொள்கைகளில், இந்த மாவட்ட வேலை வாய்ப்பகங்களையும் அப்போதே சேர்த்து இருக்கலாம்.


டி.ஸ்டெல்லா, பாளையங்கோட்டை.

கிறித்தவர்களைத் தாக்கும் செயல் அங்கங்கே தொடர்ந்து நடைபெறுகிறதே?

சிறுபான்மையினர் தாக்கப்படுவதை ஏற்க முடியாது. பிறரது வம்புதும்புக்குப் போகாமல் மருத்துவச் சேவையும் கல்விப் பணியும் செய்து கொண்டிருப்பவர்களின் கூட்டைக் கலைப்பது நியாயமற்ற செயல். வன்மையாகக் கண்டிக்கத் தக்கதும்கூட!


எஸ்.தனபாலன், தஞ்சை.

அ.தி.மு.க.,வை விட்டு நீக்கினாலும் கவலைப் படப்போவதில்லை என்கிறாரே நடிகர் எஸ்.வி.சேகர்?

ஒரு கதவை மூடினால் தனக்கு ஐந்து கதவுகள் திறக்கும் என்று எஸ்.வி.சேகர் சொன்னதிலிருந்தே அ.தி.மு.க. தலைமை குழம்பிப் போயிருக்கும். அந்தப் பஞ்சபூதங்கள் எவை என்பதிலேயே அவரின் ஆராய்ச்சி போகும். இப்போதைக்கு மேக் அப் தேவைப்படாத அ.தி.மு.க. பிரமுகர் எஸ்.வி.சேகர் மட்டுமே!


ஆர்.சுதர்சன், மதுரை.

காவல்துறையினருக்காக ரேஷனில் கிலோ அரிசி ஐம்பது காசுக்குப் போடுவதாய் இருக்கிறார்களாமே?

கண்டக்டர் கூட மதிக்காத ஐம்பது காசுகளுக்கு அரிசியா? பலே! அதைவிட அவர்களுக்கு இலவச அரிசியே வழங்கலாமே! ஆனாலும் இராணுவத்தை விட நாட்டைக் காப்பவர்களாயிற்றே? இதை கூடச் செய்யாமல் எப்படி?


ஆர்.ஜெயந்தி, திருவாரூர்.

ராகுல் காந்திக்கு விரைவில் திருமணமாமே?

ஓர் இரகசியம் சொல்லவா? இந்தியாவுக்கு மறுபடி ஒரு வெளிநாட்டு மருமகள் வரப் போகிறாள்!


டி. விமலன், மதுரை.

மூன்றரை கோடித் திருட்டில் திறமையாகத் துப்பறிந்த தமிழகக் காவல் துறை பற்றி?

பொதுவாகக் காவல்துறையினர் சொல்வது இதுதான். நகை பொருள் திருடப்பட்டால் எப்படியும் பிடித்து உங்களிடம் ஒப்படைப்போம். கரன்சி என்றால் சாத்தியமில்லை. கொள்ளையர்களின் காயத்திற்கு மருந்து தடவி விஷயத்தைக் கறந்துவிட்டார்கள். விதிவிலக்காக ஒன்றரை மாதம் ஆகியும் கிட்டத்தட்ட பாதிப்பணம் மீட்கப்பட்டது பெரிய சாதனைதான்!


கே.ராஜாமுகமது, அரக்கோணம்.

ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் பிரட் லீ, இந்த இந்திய-ஆஸ்திரேலியத் தொடரில் நட்புறவு நன்றாக இருக்கும் என்று எதை வைத்துச் சொல்கிறார்?

பிரட் இந்தியக் கடிகார நிறுவனத்தில் தலைகாட்டிப் பெரும் பணம் சம்பாத்திக்கிறார். பல ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய 20-20 போட்டிகளில் ஆட விலைக்கு வாங்கப் பட்டிருக்கிறார்கள். இந்த நன்றியுணர்ச்சி இவர்களை வாலாட்ட விடாது என்று அர்த்தம் செய்து கொள்ளுங்கள்!


வி.சுகுமாரன், விழுப்புரம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இரண்டே வாரங்களில் மதுக்கடைகளை மூடிவிடுவோம் என்கிறாரே, இராமதாஸ்?

கவுண்டமணி, விவேக் போன்ற காமெடியன்களே உஷார்! இராமதாஸ் ரொம்பத்தான் தமாஷ் பண்ண ஆரம்பித்துவிட்டார்!


கே.மாணிக்கம், சென்னை-80.

முந்தைய தி.மு.க. ஆட்சிக்கும் தற்போதைய தி.மு.க., ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம்?

முந்தைய தி.மு.க. ஆட்சி ஒரு மைக்ரோ ஆட்சி! தற்போதைய தி.மு.க. ஆட்சி ஒரு மேக்ரோ ஆட்சி! எதில் என்று நான் சொல்லியா உங்களுக்குத் தெரிய வேண்டும்?


எம்.சார்லஸ் பாண்டியன், அம்பத்தூர்.

ஜனவரியில் சென்னைக்குக் கடல் நீராமே?

இனிக்கிறது. சென்னைக்கு மின் வெட்டு இல்லை. சென்னைக்கு இனி வருடம் முழுக்கத் குடிநீர் கிடைக்கும். தென் தமிழகத்தை நினைத்தால்தான் கஷ்டமாக இருக்கிறது!


டி.சாம்பசிவம், திண்டுக்கல்.

இளம் நடிகர்களுள் ஜுனியருக்குப் பிடித்தவர் யார்?

ஜெயம் ரவி. என் குடும்ப உறுப்பினர்களுள் இருவரின் பெயர்களைத் தாங்கியிருப்பதாக இந்தத் தேர்வு இல்லை. அழகு, உயரம், திறமை, எல்லாம் உள்ள, தமிழ்த் திரை உலகம் பெருமைப்பட்டுக் கொள்ளும்படியான நாயகர்!


டி.துரைராஜ், மதுராந்தகம்.

வரும் தேர்தலுக்குப் பின் சரத்குமார் அரசியலை விட்டு விலகி விடுவாரா?

அரசியலில் ஒருமுறை மேக்அப் போட்டவர்கள் பிறகு சாமானியத்தில் கலைக்க மாட்டார்கள். ஆதவன் வருவதற்கு முன்பே அரிதாரம் தேடுவார்கள். சரத் ஒன்றும் சுரத்துப் போனவர் அல்லர். அரசியலில் அவர் தொடருவார். அதுசரி, ஏன் சரத் மீது இவ்வளவு சலிப்பு?


எஸ்.சரவணன், கூடுவாஞ்சேரி.

ஸ்டாலின், அழகிரி உறவு எப்படி?

இரண்டு பேருமே தி.மு.க. எனும் சாலையில்தான் பயணிக்கிறார்கள். ஆனால் எதிரெதிராக!


ஜி.பூங்காவனம், திருவேற்காடு.

டெல்லியின் ஒரு குடியிருப்பில் இரண்டு தீவிரவாதிகள் என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கிறார்களே?

இந்தக் கவுன்டரில் ஒரு காவல் ஆய்வாளருக்கும் ஒரு கவுண்டர் திறக்கப்பட்டு அவரும் இறந்து போனதுதான் அநியாயம்! அநியாயங்கள் மரிக்கலாம். நியாயம் மரிக்கலாமா?


பி.பொன்ராஜ், பொன்னேரி.

போலி ரேஷன் கார்டுகள் மூலம் கள்ளக் கடத்தலுக்காகத்தான் அசி விலை குறைப்பு என்கிறாரே இராமதாஸ்?

இதுவல்லவோ நிர்வாகத் திறன்? தி.மு.க.வினருக்குக் கூட இது தோன்றியிருக்குமோ தெரியாது!


எம்.பூபதி, சென்னை-28.

அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு சாதித்தது என்ன?

வழக்கமான அதே பிரியாணியை கட்சிக்காரர்கள், அதைச் சென்னை வானகரத்தில் சாப்பிட வேண்டும் என்றிருந்தது, அவ்வளவே! மற்றபடி ஜெயலலிதா சற்றே மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறார்.

26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 3:01 am
Filed under: Uncategorized
Sarath questions CPI fasting for Srilankan Tamils

Posted on Thursday 2 October 2008

இ. கம்யூனிஸ்டு உண்ணாவிரத‌ம், கூட்டணி முஸ்தீபு!: சரத்குமார் சந்தேகம்

சென்னை: இலங்கை தமிழர்களுக்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் உண்ணாவிரதப் போராட்டம் தேர்தலுக்கு கூட்டணி அமைப்பதற்கான முயற்சியாகவே தோன்றுகிறது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
 
இதுதொடர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில்,

‘இலங்கை தமிழர்களின் பிரச்னை என்பது, வெறும