Hoggenakkal is part of TN: L.K. Tripathy

Posted on Tuesday 19 August 2008

Hoggenakkal is part of TN, according to the Chief Secretary, Mr L.K. Tripathy<br />
ஒகேன‌க்க‌ல் தமிழகத்துக்குத்தான் சொ‌ந்த‌ம்: 
தலைமைச் செயலர் எல்.கே.திரிபாதி பேச்சு

சென்னை: ஒகேனக்கல் பகுதி தமிழகத்து‌க்கே சொந்தம் எ‌ன்று தமிழக அரசின் தலைமைச் செயலர் எல்.கே.திரிபாதி கூ‌றினார்.

சென்னையில் உள்ள ஜப்பானிய துணை தூதரகத்தில் ஒரு புகைப்படக் கண்காட்சியினை தொடங்கிவைத்த தமிழக அரசின் தலைமைச் செயலர் எல்.கே.திரிபாதி பேசுகையில்,

&#8221;ஒரு சில அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும் ரூ.1,334 கோடி ஒகேன‌க்க‌ல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை ‌நிறைவே‌ற்ற ‌விடாம‌ல் குழப்பம் விளைவித்து வரு‌கின்றன.

தற்போது ஒகேனக்கல் ‌தி‌ட்ட விவகாரத்தில் பிரச்னைகள் நிலவுவதால், அதுபற்றிய விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன். ஒகேனக்கல் பகுதி தமிழகத்துக்குத்தான் சொந்தமானது. இ‌தி‌ல் எ‌ந்த‌வித ச‌ந்தேகமு‌ம் வே‌ண்டா‌ம்.

ஒகேன‌க்க‌ல் க‌ர்நாடகாவு‌க்கு சொ‌ந்த‌ம் எ‌ன்று அ‌ம்மா‌நில அரசு இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து வரு‌கிறது. ஒகேனக்கல் பகுதியானது த‌‌மிழக‌த்து‌க்கே‌ சொ‌ந்த‌ம் எ‌ன்பதை ‌நிரூ‌பி‌க்க எ‌ங்க‌ளிட‌ம் தகுதியான ஆவண‌ங்க‌ள் உ‌ள்ளன.

இந்தக் கூட்டுக்குடிநீர் திட்டம் என்பது இப்போது முடிவெடுத்து இப்போதே செயல்படுத்த ஆரம்பிக்கவில்லை. கா‌வி‌ரி‌யி‌ல் இரு‌ந்து த‌‌மிழக‌த்து‌க்கு‌ச் சொ‌ந்தமான 1.4 டி.எம்.சி. தண்ணீர் பெறுவதற்காக, இர‌ண்டு மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் வாழு‌ம் 30 ல‌ட்ச‌ம் ம‌க்க‌ளி‌ன் தாக‌த்தை‌ ‌தீ‌ர்‌க்கவே கொ‌ண்டுவர‌ப்ப‌ட்டது.

த‌மிழக அர‌சு ஒகேன‌க்க‌ல் கூ‌ட்டு‌க் குடி‌நீ‌ர் ‌தி‌ட்ட‌த்தை அ‌ட்டவணை‌ப்படி ‌நிறைவே‌ற்றுவ‌தி‌ல் உறு‌தியாக உ‌ள்ளது&#8221; எ‌ன்று கூ‌றினா‌ர்

admin @ 11:40 pm
Filed under: news
Pursue the Hogenekkal project, Stalin orders TWAD

Posted on Wednesday 13 August 2008

MK Stalinஒகேனக்கல் திட்டப் பணிகள்: விரைவுப்படுத்த அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழக குடிநீர்த் திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று  ஆய்வு செய்தார். பல்வேறு திட்டப் பணிகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

நிறைவேற்றபட்டப் பணிகள், நடந்துவரும் பணிகள் குறித்தெல்லாம் விரிவாகக் கேட்டறிந்த அமைச்சர் ஸ்டாலின், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் சரியான முறையில் இயங்குகிறதா என்பதை வாரியப் பொறியாளர்கள் அவ்வப்போது ஆய்வு செய்யவேண்டும் என்றும், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைவுப்படுத்தி வரும் 2009ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிக்கு கலந்தாலோசகர் நியமனத்தை விரைவுபடுத்தி, பணிகளைத் தொடங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

admin @ 2:17 am
Filed under: news
Hogenakkal scheme will done in time: Minister Duraimurugan

Posted on Friday 8 August 2008

durai_murugan.jpgதிட்டமிட்டபடி ஒகேனக்கல் திட்டம்!: துரைமுருகன்

சென்னை: திட்டமிட்டபடி ஒகேனக்கல் திட்டம் நிறைவேற்றப்படும் என்று தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தமிழகத்தில் நிறைவேற்றப்பட உள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு கர்நாடா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடகத் தேர்தல் முடியும் வரை இந்தத் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

கர்நாடகத் தேர்தல் முடிந்து பா.ஜ.க. தலைமையிலான அரசு பதவியேற்றப் பின்னர், மீண்டும் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் குறித்து இரு தரப்பிலும் பிணக்கு நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கர்நாடக மின்துறை அமைச்சர் ஈசுவரப்பா, ஒகேனக்கல் பகுதி கர்நாடாகவிற்குள வருகிறது. எனவே திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசால் இயலாது என்று கூறியிருக்கிறார்.

அவரது கருத்தை ஆதரிக்கும் வகையில் கர்நாடக முதல்வர் எடுயூரப்பா, ஒகேனக்கல் குறித்து மத்திய அரசு கூட்டுச ர்வே நடத்தவேண்டும் என்றும் இருமாநில எல்லைகளுக்கு இடைப்பட்ட பகுதி யாருக்குச் சொந்தம் என்பது முடிவாக வேண்டும் என்றும் கூறினார்.

இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,

&#8221;கர்நாடக மாநிலத்தைப் போல பரபரப்பான செய்திகளை வெளியிட நாங்கள் தயாரில்லை. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் திட்டமிட்டபடி அமலாக்கப்படும். தர்மபுரி மாவட்ட மக்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் குடிநீர் வழங்கப்படும்&#8221; என்றார்.

admin @ 11:35 pm
Filed under: news
Hogenakkal: Karnataka Minister Eswarappa gets reply

Posted on Thursday 7 August 2008

ஒகேனக்கல் கர்நாடகாவிற்கு சொந்தமா?:
கர்நாடக அமைச்சருக்கு பாதுகாப்புக் குழு கடும் கண்டனம்

 
பெண்ணாகரம்: கர்நாடக மாநில மின்துறை அமைச்சர் ஈசுவரப்பா, ஒகேனக்கல் கர்நாடகாவுக்கே சொந்தம் என கூறினார். இதற்கு ஒகேனக்கல் உரிமை பாதுகாப்புக் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது கு‌றி‌த்து ஒகேனக்கல் உரிமை பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் நஞ்சப்ப‌ன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் கூறுகையில்,

&#8221;ஒகேனக்கல் கர்நாடகாவுக்கே சொந்தம் எ‌ன்று‌ம், ஒகேனக்கல்லில் வாழும் மக்களுக்கு கர்நாடக அரசு குடும்ப அட்டைகளை வழங்கியிருப்பதாகவும், கர்நாடக வாக்காளர் பட்டியலில் அவர்கள் இடம் பெற்றிருப்பதாகவும் தவறான செய்தியை க‌ர்நாடக ‌மி‌ன்துறை அமை‌ச்ச‌ர் ஈ‌ஸ்வர‌ப்பா கூறியிருக்கிறார்.

மேலும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட இருக்கும் இடமும் கர்நாடகவுக்கே சொந்தம் என்ற பொய்யான தகவலையும் அவர் கூறியிருக்கிறார்.

ஒகேனக்கல்லில் காவிரியின் மறுகரையில் கர்நாடக மாநில எல்லையில் உள்ள மாறுகொட்டாய், ஜம்போட், ஆலம்பாடி ஆகிய கிராமங்களில் வசிக்கும் தமிழ் மற்றும் கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட மக்களுக்கு கர்நாடக அரசு குடும்ப அட்டைகளையும், வாக்காளர் பட்டியலில் இடமும் வழங்கியுள்ளனர்.

அவர்களுக்கு வாக்குச் சாவடியும், ‌நியாய ‌விலை கடையும் கர்நாடக மாநிலம் அனூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கோபிநத்தத்தில் தான் உள்ளது. அந்தப் பகுதி கர்நாடக மாநில எல்லையில் உள்ளது.

தமிழகத்தில் உள்ள ஒகேனக்கல், அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள், ஒகேனக்கல்லில் உள்ள வாக்குச் சாவடி, ‌‌நியாய ‌விலை கடையை பயன்படுத்தி வருகின்றனர். பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல்லில் கூத்தப்பாடி ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் தான் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த இடத்துக்கும் கர்நாடக எல்லைக்கும் சுமார் ஒரு கி.மீ. தூரம் உள்ளது. இந்த அடிப்படை உண்மை தெரியாமல், கர்நாடக அமைச்சர் பேசியிருப்பது வேதனையாக உள்ளது. தமிழக அரசு உறுதியான நிலையை எடுத்து ஒகேனக்கல் தமிழகத்துக்கே சொந்தமான பகுதி என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என ஒகேனக்கல் உரிமை பாதுகாப்பு குழு கேட்டுக்கொள்கிறது&#8221; எனத் தெரிவித்தார்.
   

admin @ 1:41 am
Filed under: news
Hogenakkal: Sarath questions CM

Posted on Wednesday 6 August 2008

ஒகேனக்கல் குடிநீர்த் திட்ட பணிகள் நடக்கிறதா?:
முதல்வ‌ருக்கு சர‌த்குமா‌ர் கேள்வி 
 
சென்னை: ஒகேனக்கல் குடிநீர்த் திட்ட பணிகள் எந்த அளவில் நடந்து வருகிறது என்று முதல்வர் கருணாநிதிக்கு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல்,

&#8216;ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். இதன்மூலம் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கும் அந்த அரசு தடையாக இருக்கும் என்பது உறுதி.

கர்நாடகத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசுடன் கலந்து பேசி ஒகேனக்கல் குடிநீர் திட்டப் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் வலியுறுத்தினோம். ஆனால், அவர் திட்ட செயல்பாடுகள் குறித்த அட்டவணையை மட்டுமே வெளியிட்டார்.

அட்டவணைப்படி பணிகள் நடந்து வருகின்றனவா? இந்த பணிகள் தொடர்பாக ஒரு அலுவலகம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. வேறு எந்த பணிகளும் தொடங்கவில்லை என்று கர்நாடக அமைச்சர் கூறுகிறார். இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்?

எனவே, தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர மாட்டோம் என்று பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுத வேண்டும். நேரில் சென்றும் வலியுறுத்த வேண்டும். இந்தப் திட்டப் பணிகள் இப்போது எந்த அளவில் உள்ளன என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தில் மத்திய அரசு மவுனம் சாதித்து, திட்டம் நிறைவேற கர்நாடக அரசு தடையாக இருக்குமானால், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக கூட்டணி கட்சிகள் தங்கள் அமைச்சர் பதவிகளையும், நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பதவிகளையும் ராஜினாமா செய்ய வேண்டும்&#8221; எ‌ன்று சர‌த்குமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர். 

admin @ 11:26 pm
Filed under: news
Hogenakkal is part of Karnataka: Minister Eswarappa

Posted on Tuesday 5 August 2008

ஒகேனக்கல் எங்களுடையது!:
கர்நாடக அமைச்சர் ஈசுவரப்பா

hogenakkalproject.jpg

டெல்லி: ஓகேனக்கல் கர்நாடக மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்று கர்நாடக மின்துறை அமைச்சர் ஈசுவரப்பா கலவர குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் நாவறண்டுபோய்க் கிடக்கும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்காக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை வைத்து தாகம் தீர்க்க தமிழக அரசு முயன்று வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற அனைத்து மாநில மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கர்நாடக மின்துறை அமைச்சர் ஈசுவரப்பா கலந்துகொண்டார்.

பின்னர், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் ஓகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில்,

&#8221;ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டத்திற்கு தமிழ்நாட்டுக்கு 1.4 டிஎம்சி நீரை வழங்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி அளித்தாலும் திட்டம் தொடர்பான எந்த விவரங்களையும் தமிழக அரசு இன்று வரை நதிநீர் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யவில்லை.

காவிரி நீரைப் பகிர்ந்துகொள்ளும் விவகாரத்தில் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து இரு மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. எனவே, இடையில் ஒகேனக்கல் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு தமிழக அரசை அனுமதிக்கக்கூடாது.

ஒகேனக்கல் கர்நாடகத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்பதற்கு ஆதாரமாக, அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான குடும்பங்களுக்கு கர்நாடகாவில் தான் வாக்களிக்கும் உரிமை இருப்பதே சாட்சி.

அவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும், வறுமை கோட்டுக்கு கீழ்வாழும் பிரிவினருக்கான அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒகேனக்கலில் வாழும் பெரும்பான்மையோர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

காவிரி தொடர்பாக நதிநீர்த் தீர்ப்பாயத்தில் இறுதி தீர்ப்பு வரும்வரை 2 மாநிலங்களும் எந்தக் குடிநீர்த் திட்டத்தையும் செயல்படுத்துக்கூடாது.

ஆகையால் தான் ஒகேனக்கல் திட்டத்தை நிறுத்தக் கோருகிறோம். இல்லையென்றால் இரண்டு மாநில அரசுகளும் மிகப்பெரிய பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, தேவைப்பட்டால் தமிழக, கர்நாடக முதல்வர்களை மத்திய அரசு அழைத்து பேச வேண்டும்&#8221; என்றார்

admin @ 9:52 pm
Filed under: news
Rama Gopalan slams congress

Posted on Tuesday 5 August 2008

ஒகேனக்கல்: கருணாநிதி வீட்டை முற்றுகையிடுங்கள்:
காங்கிரசாருக்கு ராம கோபாலன் போதனை

karunanidhi-ramagopalan.jpg

சென்னை: ஓகேனக்கல் பிரச்னையில் ரஜினியை வம்பிழுக்காமல், மெளனம் சாதிக்கும் முதல்வர் கருணாநிதி வீட்டை முற்றுகையிடுங்கள் என காங்கிரசாருக்கு யோசனை தெரிவித்துள்ளார் இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

&#8216;சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் திரையிடப்பட்ட குசேலன் படத்துக்கு அரசியல் காரணங்களுக்காக சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

ரஜினிகாந்த் தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததைக் கண்டித்து ரஜினி படம் ஓடும் தியேட்டர்களை மற்றும் அவருடைய வீட்டை முற்றுகையிடப் போவதாக இளைஞர் காங்கிரஸ் மற்றும் சில அமைப்புகள் அறிவித்திருக்கிறார்கள்.

ஓகேனக்கல் பிரச்னையில் முதலமைச்சர் கருணாநிதி, கர்நாடகாவில் தேர்தல் முடிந்த பிறகு பேசலாம் என்று அறிவித்திருந்தார். தேர்தல் முடிந்து, புதிய ஆட்சி அமைத்து பல மாதங்கள் ஆகியும் இது குறித்து கருணாநிதி வாய் திறவாமல் மௌனம் சாதிப்பது ஏன்?.

தமிழர்களின் நலனுக்காக வீட்டை முற்றுகையிடுவதாக இருந்தால் காங்கிரசார் முதலில் கருணாநிதியின் வீட்டைத் தானே முற்றுகையிட வேண்டும்.

அதை விட்டு விட்டு ஆவடிக்கு வரும் முதலமைச்சருக்கு காவடி தூக்கிகளான காங்கிரசார் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப் போவதாக அறிவித்திருப்பது வெட்கக் கேடு மட்டுமல்ல, ஏமாற்று வித்தையும் ஆகும்.

திருமாவளவன் பிறந்த நாளான ஆகஸ்ட் 17ஆம் தேதியை தமிழர் எழுச்சி நாளாக நடத்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் வெளிநாட்டவர்களான சேகுவேரா, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ஆகியோர் படங்களை எல்லாம் போட்டு தங்களுடைய எல்லை கடந்த தேசபக்தியை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்கள்.

இதை எல்லாம் கண்டிக்க வக்கற்ற காங்கிரஸ் ரஜினிகாந்தை சாடுவது வெட்கக் கேடு, ராஜீவ் காந்தி கொலை சரிதான் என்று இவர்கள் ஒப்புக் கொள்வது போல இது அமைத்திருக்கிறது.

விடுதலைச்சிறுத்தைகளைச் சேர்ந்த வன்னி அரசு என்பவர் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்த உதவியதாகப் பிடிபட்டு, கைது செய்யப்பட்ட உடனே விசாரணை ஏதுமின்றி அரசு ஆதரவுடன் ஜாமீனில் வெளி வந்துவிட்டார்.

இப்போது, தமிழக அரசு இந்த விளம்பரத்தையாவது தடை செய்ய வேண்டும் என்று தேசபக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள். தங்கபாலு, இளங்கோவன், வாசன் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கட்சிக்காரர்கள் ஜனநாயக விரோதமாகச் செயல்படுவதை கண்டிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாமா?&#8217; என்று கூறியுள்ளார்.

admin @ 2:11 am
Filed under: news
Kuselan release: Rajini writes to kannada people

Posted on Wednesday 30 July 2008

குசேலன் திரையீடு : கன்னட மக்களின் ஒத்துழைப்பு கோரி ரஜினி கடிதம்

rajini11.jpg

குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட கன்னடர்கள் ஒத்துழைக்கவேண்டும் என்று  ரஜினிகாந்த் தன் கைப்பட கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு அவர் எழுதிய கடிதத்தை நேற்று நிருபர்களிடம் காட்டினார் அதன் தலைவர் நடிகை ஜெயமாலா.

ரஜினி எழுதியதாகக் கூறப்படும் அந்தக் கடிதத்தில்,

&#8216;ஒகேனக்கல் விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதத்தின் போது, நான் பேசிய பேச்சு கன்னட மக்களின் மனதை புண்படுத்தியுள்ளதாக அறிந்து வேதனை அடைந்தேன். யாருடைய மனதையும் புண்படுத்துவது எனக்கு பிடிக்காது.

என்னால் பொதுமக்களுக்கு ஏதும் இடையூறு ஏற்படக்கூடாது என்பதுதான் என் கொள்கையும், குறிக்கோளுமாகும்.

நான் நடித்துள்ள திரைப்படங்களை கர்நாடகாவில் தமிழர்கள் மட்டுமின்றி கன்னடர்களும், பிறமொழியினரும் பார்க்கின்றனர். அவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட கன்னட மக்கள் ஒத்துழைக்க வேண்டும்&#8217; என்று கூறப்பட்டுள்ளது.

admin @ 1:49 am
Filed under: news
CM fires Vijayakanth on farmers issue

Posted on Monday 28 July 2008

வேடமிட்டு விவசாயிகளை ஏமாற்றமுடியாது!:
விஜயகாந்துக்கு முதல்வர் கருணாநிதி பதிலடி

karunalnidhi.jpg

சென்னை: விவசாயிகளைப் பற்றிப் பேச தலையிலே முண்டாசு கட்டி விட்டாலே விவசாயிகளின் நண்பனாகிவிட முடியாது என தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்துக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தஞ்சாவூரில் நடந்த தே.மு.தி.க. ஆர்ப்பாட்டத்தில் தலையில் பச்சை முண்டாசுக் கட்டிக்கொண்டு   அவர் மேடையேறிய விஜயகாந்த் பேசுகையில், முதல்வர் கருணாநிதியை விவசாயிகளை, மீனவர்களை வஞ்சித்தவர், வஞ்சிப்பவர் என்று குறிப்பிட்டு தாக்கிப் பேசினார்.

விஜயகாந்துக்கு, தன்னுடைய வழக்கமான கேள்வி - பதில் பாணியில் பதிலடி தந்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: விவசாயிகளை வஞ்சித்தவர் கருணாநிதி என்று கொட்டை எழுத்துத் தலைப்பு போட்டு &#8216;தினமணி&#8217; ஒருவரது (விஜய்காந்த்) பிதற்றலை பேச்சு என்ற பெயரால் வெளியிட்டிருக்கிறதே?

பதில்: ஆமாம்- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதும்- 5ஆவது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் ரூ. 7,000 கோடி விவசாயிகள் கடனை ரத்து செய்ததும், யாரையுமே வஞ்சித்து அறியாத இந்த வாய்மையாளருக்கு வஞ்சித்த செயலாகத் தோன்றுகிறது போலும்!

விவசாயிகளுக்காக திமுக அரசு செய்த சாதனைகளின் பட்டியல் வேண்டுமா? இதோ:

இந்தியாவிலேயே முதன் முதலாக 1990இல் தி.மு.க. அரசு தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது.

டிசம்பர் 1996இல் ஏற்பட்ட வெள்ளச்சேதம் காரணமாக விளைபொருள் இழப்புக்காக கழக அரசினால் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை ரூ. 55.15 கோடி. இதன் மூலம் பயன் பெற்ற விவசாயிகள் 10,05,166 பேர்.

மீண்டும் நவம்பர் 1997இல் ஏற்பட்ட வெள்ளச் சேதம் காரணமாக-விவசாயிகளுக்கு கழக அரசினால் வழங்கப்பட்ட பயிர்கள் இழப்பீட்டுத் தொகை உட்பட வெள்ள நிவாரணம் ரூ.59 கோடி. இதன் மூலம் பயனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 2,50,297 பேர்.

மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கழக அரசினால் ரத்து செய்யப்பட்ட நிலவரி மதிப்பு ரூ.44 கோடி.

இயற்கைச் சீற்றத்தால் ஆடு இறந்தால் ரூ.1000; மாடு இறந்தால் ரூ.5,000; கன்று இறந்தால் ரூ.3,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று கழக அரசினால் அறிவிக்கப்பட்டு அவ்வாறே வழங்கப்பட்டும் வருகிறது.

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு 25,000 ரூபாய் வரை வழங்கப்படும் கடன் தொகைக்கு விதிக்கப்படும் வட்டி குறைப்பு, சிறிய, பெரிய விவசாயிகள் அனைவருக்கும் அபராத வட்டி தள்ளுபடி, கடன் தொகையை முறையாக திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு கடன் தொகையில் 7 சதவிகிதம் வட்டி ஊக்கத்தொகையாக வழங்கியது,

நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ. 100லிருந்து ரூ. 400 ஆக கழக அரசிலே உயர்த்தப்பட்டது.

விவசாயிகள் பாசன நீரை எடுத்துச் செல்ல அரசு நிலங்களில் பதிக்கும் குழாய்களுக்காக விதிக்கப்பட்டு வந்த பாதைக் கட்டணம் ரத்து, விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தப்பட்டது, விவசாயத் தொழிலாளர்களுக்கென்று தனியாக நல வாரியம் அமைத்தது,
விவசாயிகளின் நலனைக் கருதி 100க்கு மேற்பட்ட உழவர் சந்தைகளை தமிழகமெங்கும் அமைத்து தந்தது இந்த அரசு தான்.

நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு தரிசு நிலங்களைப் பண்படுத்தி இலவசமாக அளிக்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மட்டும் 1லட்சத்து 51ஆயிரம் ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு 1லட்சத்து 78ஆயிரம் ஏக்கர் நிலத்தை இந்த அரசு இலவசமாக வழங்கியது,

நெல் கொள்முதல் விலையை உயர்த்தியது எல்லாம் கழக அரசு செய்தது தான்.

கேள்வி: காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட தமிழக அரசின் வழக்கை 1971ஆம் ஆண்டு இந்திராகாந்தி கேட்டுக் கொண்டதின் பேரில் கருணாநிதி திரும்பப் பெற்றது விவசாயிகளை வஞ்சித்த செயல் அல்லவா? என்று அதே பிரமுகர் விஷம் கக்கியிருக்கிறாரே?

பதில்: காவிரிப் பிரச்னையில் கர்நாடக முதல்வருடன் பேசி நல்ல முடிவுக்கு வரவேண்டுமேயானால்- அதற்கு குறுக்கே நிற்கிற உச்ச நீதிமன்ற வழக்கை வாபஸ் பெறுவது நல்லது என்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கேட்டுக் கொண்டதால்; தமிழக தி.மு.க. அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அந்தத் தலைவர்களின் கருத்துப்படி தான், வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது.

அதுவும் அந்த வழக்கை எப்போது வேண்டுமானாலும் திரும்பத் தொடரலாம் என்ற உறுதியான நிபந்தனையுடன் தான் வாபஸ் பெறப்பட்டது என்பதையும்; அந்த அவசரக்கார அரசியல்வாதிகள் அறிந்து கொள்வது நல்லது. தொடர்ந்து நடத்திய உச்சநீதிமன்ற வழக்கின் முடிவாகத் தான், நமது இடைவிடா முயற்சியின் காரணமாகத் தான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது என்பதையும்- அந்த நடுவர் மன்றத் தீர்ப்பு வந்த பிறகும்; இன்னமும் கர்நாடக மாநிலம், காவிரித் தண்ணீரை தமிழகத்திற்கு ஒழுங்காக வழங்கிட ஒப்பவில்லை என்பதையும் விபரமறிந்த வர்கள், விளக்கமாகப் புரிந்து கொண்டு தானிருக்கிறார்கள்.

கேள்வி: வருமான வரித்துறைக்குப் பயந்து தான் வழக்கை வாபஸ் வாங்கியதாக அந்தப் பிரமுகர் பேசியதாக பிரசுரித்திருக்கிறதே?

பதில்: வருமான வரிக்குப் பயந்து இப்போது காங்கிரஸ்காரர்கள் வீட்டு வாசலில் காத்துக் கிடப்போர் யார் என்று நாட்டுக்கே தெரியுமே!

கேள்வி: ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் பற்றியும் அந்தப் பிரமுகர் உளறியிருக்கிறாரே?

பதில்: பாவம், ஓகேனக்கல் திட்டத்தின் வரலாறு அவருக்குத் தெரியாது- ஓகேனக்கல் திட்டத்தைக் கொண்டு வர ஏன் இத்தனை ஆண்டுகள் தாமதம் என்கிறார். இத்திட்டம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்க திட்டமிடப்பட்டு, ஜப்பான் நாட்டு உதவியை நாடியிருந்தோம். அப்போது &#8216;போக்ரான்&#8217; குண்டு பரிசோதனை நடைபெற்ற காரணத்தால், ஜப்பான் நாட்டிலிருந்து வருமென்று எதிர்பார்த்த கடனைத் தர அவர்கள் மறுத்து விட்டார்கள்.

அதன் பிறகு உலக வங்கியிடமிருந்து கடன் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அதுவும் நடைமுறைக்கு வரவில்லை. அதனால் கடந்த ஆட்சியில் தாமதம் ஏற்பட்டது உண்மை.

ஆனால் 2006இல் தி.மு.க ஆட்சி வந்தவுடன் ஜப்பானிடமே கடன் பெற முயற்சி மேற்கொண்டு, உள்ளாட்சித்துறை அமைச்சர் தம்பி மு.க. ஸ்டாலினும், அதிகாரிகளும் நேரிலேயே சென்று அந்த முயற்சியிலே வெற்றி பெற்று, ஜப்பான் வங்கி தற்போது கடன் தர ஒப்ப