 |
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் |
 |
 |
 |
 |
ந.இளங்கோ, ராணிப்பேட்டை.
|
 |
ஆயிரம் புதிய பேருந்துகளின் வரவால் தமிழகம் களைகட்டி விட்டதே?
|
 |
மொஹஞ்சதரோ - ஹரப்பா காலத்துச் சாலைகளைச் சீர் செய்யாமல் புதிய பேருந்து என்றால், பேருந்துகளில் உள்ள நட்டுகள் தாம் சீக்கிரம் கழலும். புரோகிதர் இளமையாக இருந்து பிரயோஜனமில்லை; மணமக்களும் இளமையாக இருக்க வேண்டும்.
|
|
 |
 |
 |
 |
சி.சத்யா, திருவண்ணாமலை.
|
 |
இன்றைய மத்திய அரசு?
|
 |
உள்ளுக்குள் அமெரிக்கா; வெளியே இந்தியா! அதுவும் த்ரீ-டியில் பார்த்தால் இந்தப் பரிணாமம் நன்றாகவே தெரியும்.
|
|
 |
 |
 |
 |
எஸ்.ஸ்ரீநிவாஸன், கோவிலாம்பூண்டி.
|
 |
வைகோ எப்படியிருக்கிறார்?
|
 |
அ.தி.மு.க. தலைவியிடம் எதையும் சொல்லவும் முடியாத மெல்லவும் முடியாத ஒரு திருநீலகண்டராக இருக்கிறார். இவரது கட்சி இப்போது ஒரு அப்லியேட்டட் யூனியனாகிவிட்டது.
|
|
 |
 |
 |
 |
எஸ்.வெங்கடேசன், பொள்ளாச்சி.
|
 |
சி.பி.எஸ்.இ.யின் ஆறாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் ரஜினி பற்றிய பாடம் இடம் பெற்றுள்ளதாமே?
|
 |
மத்திய அரசே விழித்துக் கொண்டது. மாநில அரசு இன்னமும் தூக்கத்தில். இத்தனைக்கும் ரஜினி கல்வி அமைச்சரின் நல்ல நண்பர். இது நன்றாகவா இருக்கு?
|
|
 |
 |
ஆர்.டி.கிருஷ்ணன், பெங்களூர்.
|
 |
இன்று புல்லாகிப் பூடாகிப் போவது எது?
|
 |
நம் அரசியல்வாதிகளின் ஊழல் குற்றச்சாட்டுகள்.
|
|
 |
 |
 |
 |
பி.சிவகுமார், சென்னை.
|
 |
நடிகர் கார்த்திக் ஒரு புதுக்கட்சி ஆரம்பிக்கப் போகிறாராமே?
|
 |
ஒன்றுமில்லாதவர்கள் எல்லாம் அரசியலில் இன்று பார்வர்டுக்கு வருகிறார்கள். இவர் பார்வர்டில் இருந்து கொண்டே இப்படி பேக்வர்டுக்குப் போகிறார். முத்துராமன் மகனா, கொக்கான்னு இவர் காட்ட வேண்டாமா?
|
|
 |
 |
 |
 |
ஆர்.ரவி, திருவேற்காடு.
|
 |
உங்களைப் புகழ்ந்து பாடினால் பரிசு கிடைக்குமா?
|
 |
நீங்கள் நினைக்கிற அந்த மன்னர் காலம் இது இல்லை. இது பேனா மன்னர் காலம். ரொம்பவும் புகழ்ந்தால் இரண்டு குயர் பேப்பர் கிடைக்கும். இரண்டு குயர் எவ்வளவு வந்துவிடப் போகிறது.
|
|
 |
 |
 |
 |
ஜி.சுகுமார், விருத்தாசலம்.
|
 |
ஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழக மாணவ - மாணவிகள் சக்கைப் போடு போட்ட பின்னணிதான் என்ன?
|
 |
வட்டத் தத்துவம்தான். சுழற்சி முறையில் தமிழகம் வீறு கொண்டு எழுந்தது. பல தனியார் அமைப்புகள் தன்னிகரில்லாச் சேவையில் பயிற்சி வழி அளித்தன. வீறு கொண்டு எழுந்துவிட்டது தமிழகம். இந்த வீரியம் தொடர வேண்டும். வட்டத் தத்துவத்தைச் சொல்லிக் கொண்டு கோழிமுட்டையாக ஆகிவிடக்கூடாது.
|
|
 |
 |
 |
 |
எம்.கலைவாணி, வாலாஜாபாத்.
|
 |
ஒகேனக்கல் திட்டம்?
|
 |
கலைஞரால், கலைஞருக்காக ஒத்தி வைக்கப்பட்ட கலைஞருடைய முடிவு இது. யாரேனும் இதில் தலையிட்டால் அப்புறம் எல்லை மீறல், உரிமை மீறல் என என்னன்னமோ மீறல்கள் வரும். அந்த சட்டமன்ற விதிகள் நமக்கெல்லாம் அத்துபடி இல்லை.
|
|
 |
 |
 |
 |
எம்.ஆசிப், திருவல்லிக்கேணி.
|
 |
இருந்தால் யார் மாதிரி இருக்க வேண்டும்?
|
 |
டி.ஆர்.பாலு மாதிரி! சொத்துக்குச் சொத்து. பாதுகாப்புக்குப் பாதுகாப்பு.
|
|
 |
 |
 |
 |
வி.செந்தில், போரூர்.
|
 |
விலைவாசி உயர்வுகளைப் பற்றி?
|
 |
எங்கள் எம்.எல்.ஏ., ஆற்காடு வீராசாமி சொன்னபடி பார்த்தால், அப்படியொன்றும் விலை ஏறினதாய்த் தெரியவில்லை. நகைக் கடைகளிலும், தியேட்டர்களிலும் பார்த்தபிறகு இந்தக் கேள்வியை நீங்கள் போஸ்ட் செய்திருக்கக்கூடாதா? எனவே, உங்களின் இந்தக் கேள்வியை நான் போஸ்ட்மார்ட்டம் செய்துவிட்டேன்.
|
|
 |
 |
 |
 |
வி.வேதா, கடலூர்.
|
 |
முன்னாள் முதல்வரை அவரது கட்சிக்காரர்கள் இரவில் போய் சந்திக்க முடியுமா? என்று சட்டமன்றத்தில் வினா எழுப்பிய மீன்வளத்துறை அமைச்சரின் நாகரிகம் பற்றி?
|
 |
மீன் அழுகிப் போனால் நாறுமே, அதைவிட நாறுகிறது. இந்த மீன்வளத்துறை அமைச்சரின் பேச்சு! மீனுக்கு அழுக்குதான் உணவு என்பதை நிரூபித்துவிட்டார்.
|
|
 |
 |
 |
 |
என்.கோபால், திருப்பத்தூர்.
|
 |
நிலம், நீர், மொழியைப் பாதுகாப்பேன் என்கிறாரே, எடியூரப்பா?
|
 |
அப்படியானால் காவிரி, ஒகேனக்கல், கர்நாடகத் தமிழர்கள் நலன்பற்றியெல்லாம் நமக்குத் தெளிவுரை வேண்டுமே? இந்தத் தெளிவுரை அவரது இந்த கெய்டில் இருக்குமா?
|
|
 |
 |
 |
 |
எம்.குமரேசன், செங்குன்றம்.
|
 |
அடுத்து அ.இ.அ.தி.மு.க., ஆட்சிக்கு வருமா?
|
 |
வாக்காளர் எல்லோரும் அம்மாவாக வேண்டும். அதாவது தாயாக வேண்டும். அப்போதுதான் தாயுள்ளத்தோடு அம்மாவை எல்லோரும் ஆதரிப்பார்கள்.
|
|
 |
 |
ஆர்.செல்வம், தாமல்.
|
 |
வரும் தேர்தலில் ஏதாவது ஒரு கட்சி சார்பில் போட்டியிடலாமா என்றிருக்கிறேன். உங்கள் ஆலோசனை?
|
 |
கட்சி வேண்டாம்! சுயேச்சையாகப் போட்டியிடுங்கள். சுயேச்சையில்தான் யாரையும் எதிர்க்கலாம். யாரையும் ஆதரிக்கலாம். உங்களின் சந்தை விலையும் கூடும்.
|
|
 |
 |
 |
 |
எம்.ஆனந்தன், உடுமலை.
|
 |
இன்றைய காலகட்டத்தில் பத்திரிகை ஆரம்பித்தால் இலாபமா?
|
 |
தமிழக அரசியலை நம்பியே ஒருவர் பத்திரிகை ஆரம்பிக்கலாம். கொழுத்த இலாபம்! ஜெயலலிதா, கலைஞர், ராமதாஸ், விஜயகாந்த் இந்த நால்வர் அணியின் அறிக்கைகளை நம்பி இருவேளை பதிப்பு ஆரம்பித்தால்கூட அது முழுசாக ஓடும்.
|
|
 |
 |
டி.மோகன், பாலுசெட்டி சத்திரம்.
|
 |
கலைஞரின் சமீபத்திய பேச்சில் தங்களைக் கவாந்த பேச்சு?
|
 |
சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சியினரின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்துப் பேசுகையில், ‘என்னால் எழுந்து நிற்கவும் முடியும்’ என்பதைக் காட்டத்தான் எழுந்து நின்று பேசுகிறேன் என்று சொன்னாரே, அந்த அந்த டைமிங் பேச்சு! அவர் நாவில் இந்த ஜாலம் என்றும் நர்த்தனம் புரியும்.
|
|
 |
 |
 |
 |
எஸ்.ரமேஷ், சைதாப்பேட்டை.
|
 |
பெட்ரோல் விலை பற்றி?
|
 |
இனி வாகனங்கள் கட்டுபடியாகா. எங்கு போனாலும் நீதி கேட்டு நெடிய பயணம்தான்! என்ன, இந்த பயணங்களுக்கு வீடியோ கவரேஜ் இருக்காது. அதுவொன்றுதான் குறை. மற்றபடி மனசெல்லாம் மத்தாப்புதான். சம்பாதித்ததை சட்டியிலேயே வைத்திருக்கலாம்.
|
|
 |
 |
எஸ்.கோபால், மதுரை.
|
 |
மணல் வியாபாரத்தில் தி.மு.க.வின் நிலைப்பாடு சரிதானா?
|
 |
மணல் விஷயத்தில் தி.மு.க.வின் முடிவு நன்றாகவே ஏலம் போனது.
|
|
 |
 |
 |
 |
சி.தாமஸ், பூவிருந்தவல்லி.
|
 |
2004க்குப்பின் பன்னிரண்டு மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் தோற்றிருக்கிறதாமே?
|
 |
ராசிதான் மொத்தம் பன்னிரண்டு என்பார்கள். காங்கிரசின் ராசியும் பன்னிரண்டாக இருக்கே! ஒரு வேளை அந்த ராசிக்கும் இந்த ராசிக்கும் பலன்கள் வேறா?
|
|
 |
 |
என்.பாபு, திருச்செங்கோடு.
|
 |
கர்நாடகத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர்கள் தோல்வி கண்டது ஏன்?
|
 |
தமிழகத்தில்தான் ‘மேக்-அப்’புகளுக்கு ஏக கிராக்கி! இங்குதான் அரசியலில் உட்வர்ட்ஸ் கிரைப்வாட்டர் குடிக்கத் தொடங்கிய அடுத்தமாதமே திருமண ஆசை வந்துவிடுகிறது. நாமோ அவர்களின் மாதத்தையும், வயதையும் பார்க்காமலேயே அவர்களுக்குச் செய்து வைக்கிறோம்.
|
|
 |
 |
 |
 |
ச.பீனா, சென்னை.
|
 |
நடுத்தரவாசிகள் நிறைய செலவு செய்கிறார்களே?
|
 |
ஆமாம். காலணா துணி வாங்கக்கூட நாலணா நொறுக்குத் தீனியும், அரையனா ஆட்டோ செலவையும் எதிர்கொள்கிறார்கள். மீதி தங்கள் காலணியிலேயே போய்ச் சேருகிறார்கள். அதனால்தான் இன்னமும் பலர் காலணியே இல்லாமல் இருக்கிறார்கள்.
|
|
 |
|
|