 |
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் |
 |
 |
 |
 |
வி.சேது, நெற்குப்பை.
|
 |
பெரியாரின் கருத்துகள் இன்னும் நிலைத்திருக்கின்றனவே?
|
 |
அவர் சிந்திக்கும்போது ஒரு மேதையைப் போல் சிந்தித்தார். சொல்லும்போது ஒரு பாமரத் தமிழனைப் போல் சொன்னார். அதனால்தான் அந்தத் தாடி சிந்தனைகள் ஏழைகளின் நாடிகளிலும் ஓடிக் கொண்டிருக்கிறது.
|
|
 |
 |
எஸ்.பாரதி, சென்னை.
|
 |
வயதான அரசியல்வாதிகளை மூட்டை, முடிச்சுகளோடு வீட்டிற்கு அனுப்பலாமா?
|
 |
மூட்டை முடிச்சுகளோடா? மூட்டை முடிச்சுகள் நம்முடையதுங்க. அவர்களை வெறும் ஆளாய் அனுப்பி வைப்போம்.
|
|
 |
 |
 |
 |
க.மணி, கடலூர்.
|
 |
எப்போதும் படித்துக் கொண்டிருப்பவர்களைப் பற்றி ?
|
 |
அவர்கள் நமது வீட்டு மேல்நிலை தண்ணீர்த் தொட்டி மாதிரி! பலருக்கும் பயன்படுகிறவர்கள். தண்ணீர்த் தொட்டியில் நீர் நிரம்பியிருப்பதால்தான் வீட்டில் எந்தக் குழாயைத் திருப்பினாலும் அதில் தண்ணீர் வருகிறது. அதுபோல்தான் இவர்களும்! தேவைப்படும் போதெல்லாம் மடை திறந்த வெள்ளமாய்க் கொட்டுவார்கள்.
|
|
 |
 |
 |
 |
ஆர்.விமல்ராஜ், திண்டிவனம்.
|
 |
இப்போது பள்ளிப்பாடங்களும் சி.டி.யிலேயே வந்துவிடுகின்றனவே, இனி ஆசிரியர்களே வேண்டாமா?
|
 |
ஆசிரியர்கள் இல்லாமல் எதுவும் நடவாது. நாங்கள் எல்லாம் முழுப் பழத்தைச் சாப்பிட்டோம். எங்கள் பிள்ளைகள் பழச் சுளையைச் சாப்பிட்டார்கள். பேரன்கள் இப்போது பழச் சாற்றை மட்டுமே குடிக்கிறார்கள். இதற்கே அவர்களுக்கு பராக்குக் காட்டி குடிக்க வைக்க வேண்டியிருக்கு.
|
|
 |
 |
 |
 |
வி.செளந்தர்ராஜன், பரங்கிமலை.
|
 |
‘நானோ, எனது அமைச்சர்களோ மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்யும்போது, அவர்களுக்கான செலவுகளை யாரும் ஏற்க வேண்டியதில்லை’ என்ற குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் பேச்சு பற்றி?
|
 |
இருங்க, எனது சதையைக் கிள்ளிக் கொள்கிறேன். குஜராத் இந்தியாவில்தானே இருக்கிறது. இதுவே நம் தமிழ்நாடாக இருந்தால்…? நமது மாண்புமிகுக்கள் முன் அந்த மாவட்டக் கருவூலமே வந்தால்தான் போச்சு! இல்லாவிட்டால் அந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு வேப்பிலைப் பூஜைதான்.
|
|
 |
 |
பி.தரணி, விருத்தாசலம்.
|
 |
தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகள் மாறுமா?
|
 |
இருமல், செருமல், தும்மல்கள் அங்காங்கே கேட்க ஆரம்பித்திருக்கின்றன. எத்தனை இந்தக் காய்ச்சல் என்பது அவாகள் (அரசியல்) டாக்டர்களிடம் வரும்போதுதான் தெரியும். டாக்டர்கள் இப்போது ஆர்வமாய் இல்லை. தேர்தல் வரும்போதுதான் அவர்களும் ‘கிளினிக்’ கதவைக் திறக்க ஆரம்பிப்பார்கள்.
|
|
 |
 |
 |
 |
டி.லோகேந்திரன், தருமபுரி.
|
 |
உங்கள் புத்தகங்களை எங்களுக்குப் பரிசாகத் தருவீர்களா?
|
 |
எழுத்தாளர்களை இந்தச் சமுதாயம் ஆதரிக்க வேண்டும். இப்படி ஓசி கேட்டால் எங்கே போவது. அந்தக் காலத்தில் புலவர்களை ஆதரிக்க மன்னவர்கள் இருந்தார்கள். இந்தக் காலத்தில் புரவலர்கள் தென்படுவதே அரிதாக இருக்கிறது.
|
|
 |
 |
 |
 |
எம்.காசி, திண்டுக்கல்.
|
 |
அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் நடந்தபடி இருக்கின்றவே, இது ஏன்?
|
 |
அ.தி.மு.க. எப்போதுமே புரட்சிகளுக்குப் பெயர் போன கட்சி! அதனால் இந்தப் புரட்சி எனக்கு மிரட்சி தரவில்லை.
|
|
 |
 |
 |
 |
கே.சங்கரன், சென்னை 92.
|
 |
ராமதாசும், கலைஞரும் ராசியாகிவிடுவார்களா?
|
 |
மல்யுத்த வீரர்கள் சண்டையிடுமுன் கை குலுக்குவதைக் கவனித்திருக்கிறீர்களா? எனக்கென்னவோ இவர்கள் கை குலுக்கும் எதிரிகளாகிவிட்ட மாதிரிதான் தெரிகிறது.
|
|
 |
 |
 |
 |
ஜி.புருஷோத்தமன், அரக்கோணம்.
|
 |
தமிழகத்தில் மட்டும் என்கவுன்டர்கள் அதிகரிக்கக் காரணம்?
|
 |
அரசு வழக்கறிஞர்கள், சாட்சிகள், சிறை, தண்டனை ஆகிய விஷயங்களில் காவல் துறைக்குக் கூட நம்பிக்கை குறைந்துவிட்டதுதான்!
|
|
 |
 |
 |
 |
ஆர்.வி.ராஜன், மதுராந்தகம்.
|
 |
எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் என்கிறார்களே, இதை நம்பலாமா?
|
 |
இருக்கும் பொருளை இனாமாய்க் கொடுத்துவிட்டு, இன்னொரு பொருளை நல்ல விலை கொடுத்து வாங்குவதற்குப் பெயர்தான் எக்ஸ்சேஞ்ச்! இந்த அர்த்தம் புரிவதற்குள் நான் இழந்தவை ஏராளம். இந்த அர்த்தம் புரிந்ததற்குப் பினனால் நான் வாங்காதவை ஏராளம்.
|
|
 |
 |
 |
 |
ஏ.வடிவேலு, சென்னை.
|
 |
‘டிஸ்போஸபிள்’ தம்ளர்களால் என்ன இலாபம்?
|
 |
என்ன இலாபமா? நமது வீட்டில் ‘இரட்டை தம்ளர் முறை’ என்ற புகார் விருந்தாளிகள் மத்தியில் வராது. இந்நாளில் இப்படியொரு புகார் இல்லாதது நமக்கு ஒரு பெரிய நற்பெயர்!
|
|
 |
 |
 |
 |
பி.பார்த்திபன், கும்பகோணம்.
|
 |
சென்னையில் ஒலி மாசுபாட்டில் எப்படி வசிக்கிறீர்கள்?
|
 |
ஒலி மாசுப்பாடா? கேட்டுக் கேட்டுப் பழகிப் பழகி இங்குள்ள வாகனச் சத்தங்களே எனக்கு மாஸ்ட்ரோ இசையாகிவிட்டன!
|
|
 |
 |
 |
 |
எல்.விஜயா, சென்னை-60.
|
 |
இன்றைய காய்கறிகளின் விலை?
|
 |
காய்களின் விலை இன்று கறி விலையாகிவிட்டது. முன்பெல்லாம் வெங்காயத்தை உரித்தால்தான் கண்ணீர் வரும். இப்பொழுது நினைத்தாலே கண்ணீர் வருகிறது. அந்த அளவிற்கு உசந்துவிட்டது.
|
|
 |
 |
 |
 |
ப.முருகன், திருவேற்காடு.
|
 |
சென்னை நகரம் மேம்பட என்ன வழி?
|
 |
டெல்லியில் உள்ள ஷீலா தீட்சித்தை இங்கு வரவழைக்க வேண்டும். டெல்லியின் முகத்தை என்னமாய் உயர்த்தி விட்டார் தெரியுமா? சட்டம் தன் சாட்டையைச் சுழற்றிச் சுழற்றி அடிக்கிறது. விதிகளை மீறுவோரின் விதி முடிந்தது என்று சொல்லுமளவு முன்னேற்றம்.
|
|
 |
 |
 |
 |
டி.ராமதாஸ், முகப்பேர்.
|
 |
தங்கக் காசு விஷயத்தில் நீங்கள் ஏதும்?
|
 |
விளக்கொளியில் விழும் விட்டில் பூச்சியின் இரகத்தைச் சேர்ந்தவன் என்றா என்னை நினைத்தீர்கள்.
|
|
 |
 |
எஸ்.ராஜேந்திரன், பண்ருட்டி.
|
 |
மீண்டும் பி.சி.ராய் விருது பெற்றுள்ள தமிழக டாக்டர் ரங்கபாஷ்யம் பற்றி…?
|
 |
டாக்டர் ரங்கபாஷ்யம் என் நண்பரின் தாய்மாமன்தான். இரண்டு முறை பி.சி.ராய் விருது என்பது பெரிய கெளரவம்தான். ஆனாலும் கொடுத்தவர்களுக்கே கொடுக்காமல் புதியவர்களுக்கு இது கிடைப்பதுதான் எனக்கு மகிழ்வைத் தரும்.
|
|
 |
 |
 |
 |
என்.சுரேந்தர், சென்னை.
|
 |
சென்னை கிங்க்ஸ் அணி ஏன் இப்படிச் சுரத்து இன்றி ஆகிவிட்டது?
|
 |
மாத்யூ ஹைடன், ஹஸ்ஸி இருவரும் புறப்பட்டுப் போனதும் காற்றிறங்கிய பலூனாய் ஆகிவிட்டது. பிளமிங்கோ காலை வாருகிறார். கிரிக்கெட்டில் எதுவும் நடக்கும். நம்பிக்கையுடன் காத்திருங்கள்.
|
|
 |
 |
டி.விக்டர், திருநெல்வேலி.
|
 |
இன்ஜினியரிங் படிப்பில் சேரச் சலுகைகள் வழங்கப்படுவது நல்லதா?
|
 |
தரத்தைக் குறைக்கவே இந்த முயற்சி. ஏற்கெனவே நுழைவுத் தேர்வு இல்லாமல் தரம் தரையில் வீழ்ந்து கிடக்கிறது. இதனை அதலபாதாளத்திற்குக் கொண்டு செல்ல கல்வித்துறை முயற்சி செய்வது கவலையளிக்கிறது!
|
|
 |
 |
 |
 |
எம்.பவுன்குமார், மாதவரம்.
|
 |
ஒருவன் எப்போது நல்ல பெயர் வாங்க முடியும்?
|
 |
மன்மோகன்சிங் மாதிரி சுயமாக ஒரு சொந்தக் கருத்து இல்லாமலிருந்தால் கடைசி வரை நல்ல பெயர்தான்! என் வீட்டில் நான் மன்மோகனாகி எவ்வளவோ வருடங்களாச்சு!
|
|
 |
 |
 |
 |
கே.ராஜவேலு, எட்டயபுரம்.
|
 |
உணவுப் பொருள் விலை உயர்வுக்கு இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் சக்திதான் காரணம் என்ற புஷ்ஷின் கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளதே?
|
 |
இதனை ஒரு பாராட்டாகவும் ஆரோக்கியக் கோணத்திலும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
|
|
 |
 |
ஜி.சுந்தர், வேலூர்.
|
 |
நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர்பற்றி ?
|
 |
ஆரோக்கியமாக நடந்த நாட்கள் பாதி. இதில் இருக்கைகள் காலியாகக் கிடந்த நாட்கள் மீதி. பாராளுமன்றக் கூட்டத் தொடரைப் புறக்கணித்துவிட்டு என்னதான் செய்வார்கள் இந்த உறுப்பினர்கள்?
|
|
 |
 |
 |
 |
‘டென்ஷன்’ பாலு, அமைந்தகரை.
|
 |
குருவி படம் எப்படி?
|
 |
படம் பார்த்த என் உறவினர் ஒருவரிடம் கேட்டேன். திட்டினார். நண்பரிடம் கேட்டேன் குறை சொன்னார். நான் பார்த்தால் சரியாகச் சொல்லிவிடுவேன்.
|
|
 |
|
|