Monday, 14 Jul 2008
பருத்திவீரன் திரைப்படத்திற்கு ஆறு பிலிம்பேர் விருதுகள்
சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் அமீர் இயக்கி, அமோக வெற்றிபெற்ற பருத்திவீரன் திரைப்படத்திற்கு 6 விருதுகள் கிடைத்தன.
நடிகர்கள் சிவகுமார், நடிகை ஜெயப்பிரதா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
2007ஆம் ஆண்டின் சிறந்த தென்னிந்தியத் திரைபடங்களுக்கான 55ஆவது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதில் பருத்திவீரன் சிறந்தத் திரைப்பட விருது மட்டுமல்லாது சிறந்த நடிகர் (கார்த்தி), சிறந்த நடிகை (ப்ரியா மணி), சிறந்த இயக்குநர் (அமீர்), சிறந்த குணசித்திர நடிகர் (சரவணன்), சிறந்த குணசித்திர நடிகை (சுஜாதா) ஆகிய 6 விருதுகளை பெற்றது.
சிவாஜி திரைப்படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கே.வி. ஆனந்த் சிறந்த ஒளிப்பதிவாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உன்னாலே உன்னாலே திரைப்படத்திற்காக பாடலாசிரியர் பா. விஜய், அழகிய தமிழ்மகன் திரைப்படத்திற்காக நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித், மொழி திரைப்படத்திற்காக பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கிரீடம் திரைப்படத்திற்காக பாடகி சாதனா சர்கம் ஆகியோருக்கும்
விருதுகள் வழங்கப்பட்டன.
வாழ்நாள் சாதனையாளர் விருது நடிகர் சிவகுமார் மற்றும் ஜெயப்ரதாவிற்கு வழங்கப்பட்டன. வாழ்நாள் சாதனையாளர் விருதை நடிகர் சிவகுமாருக்கு அவருடைய மகன்களான சூர்யாவும் கார்த்தியும் வழங்கினர்.









































